Published : 03 Sep 2025 05:44 AM
Last Updated : 03 Sep 2025 05:44 AM

மருந்து நிறுவன உரிமையாளர் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை புரசைவாக்கம் பிளவர்ஸ் சாலையில் உள்ள வீட்டில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை செய்தனர்.

சென்னை: சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றத்​தில் ஈடு​பட்​ட​தாக பிரபல மருந்து நிறுவன உரிமை​யாளர் தொடர்​புடைய 10 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர். சென்​னை​யில் வசிக்​கும் வட மாநிலத்​தைச் சேர்ந்த பிரபல மருந்து நிறுவன உரிமை​யாளர், சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றத்​தில் ஈடு​பட்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இது தொடர்​பான புகாரின் அடிப்​படை​யில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று சம்​பந்​தப்​பட்ட மருந்து நிறுவன உரிமை​யாளர் தொடர்​புடைய சுமார் 10 இடங்​களில் அடுத்​தடுத்து திடீர் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

அந்த வகை​யில், புரசை​வாக்​கத்​தில் உள்ள அவரின் வீடு மற்​றும் அலு​வல​கத்​துக்கு 2 வாக​னங்​களில் விரைந்த 8 அதி​காரி​கள், துப்பாக்கி ஏந்​திய போலீஸ் பாது​காப்​புடன் சோதனை மேற்​ கொண்​டனர். இதே​போல், அவருக்​குச் சொந்​த​மாக அம்​பத்​தூரில் உள்ள மருந்து நிறுவன தொழிற்​சாலை​யிலும் சோதனை நடத்​தினர்.

அதைத் தொடர்ந்து கே.கே.நகர் விஜய​ராகவபுரத்​தில், கால​மான ஆடிட்​டர் ஒரு​வருக்கு சொந்​த​மான வீடு (வீட்​டில் ஆள் இல்​லாத​தால் போட்டோ மட்​டும் எடுத்​துச் சென்​றனர்), தி.நகர் மேட்​லி, 2-வது தெரு​வில் உள்ள வீடு​களி​லும் சோதனை நடை​பெற்​றது. சில இடங்​களில் வீடு மற்​றும் அலு​வல​கம் பூட்​டப்​பட்​டிருந்​த​தால் சோதனை நடத்​தாமல் அதி​காரி​கள் திரும்பிச் சென்​றனர்.

சோதனை தொடர்ந்து நடந்து வரு​கிறது. இதுகுறித்து அமலாக்​கத்​துறை அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “சட்​ட​விரோத பணப்​பரி ​மாற்ற குற்​றச்​சாட்​டில் சோதனை நடை​பெற்று வரு​கிறது. சோதனை நிறைவடைந்த பின்​னரே அது தொடர்​பான முழு விபரங்​களை வெளி​யிட முடி​யும்” என்​றனர். இதற்​கிடையே, அமலாக்​கத்​துறை சோதனை​யின்​போது பல்​வேறு முக்​கிய ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x