Last Updated : 03 Sep, 2025 11:03 AM

3  

Published : 03 Sep 2025 11:03 AM
Last Updated : 03 Sep 2025 11:03 AM

சசிகுமாரை காவு வாங்கிய கல்குவாரி உரிமைப் பிரச்சினை... - சங்கிலிக்கரடை சுரண்டிக் கொழிக்கும் அரசியல்வாதிகள்!

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் | உள்படம்: ராஜ்குமார், கொல்லப்பட்ட சசிகுமார் (கீழிருந்து மேலாக)

கல் குவாரி, மணல் குவாரி பஞ்சாயத்துகளில் பல உயிர்கள் பலியாகிக் கொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில், வறுமை மீட்புக்காக வழங்கப்பட்ட கல் உடைப்பு உரிம விவகாரத்தை வைத்து தேனி மாவட்டத்திலும் அண்மையில் ஒரு கொலை நடந்திருக்கிறது.

கம்​பம் அருகே உள்ள காமயக​வுண்​டன்​பட்டி பேரூ​ராட்​சி​யில் சங்​கி​லிக்​கரடு அமைந்​துள்​ளது. இதில், மூவா​யிரம் ஆண்​டு​கள் பழமை​யான பாறை ஓவி​யங்​கள் அதி​கம் உள்​ளன. சுமார் 40 ஆண்​டு​களுக்கு முன்பு இப்​பகுதி மக்​களின் வறுமையை போக்​கும் வித​மாக இந்​தக் கரட்​டில் கல் உடைத்து வரு​வாய் ஈட்​டிக் கொள்ள அரசே அனு​மதி அளித்​தது. இதற்​காக இந்​தக் கரட்​டுப் ​பகு​தியை ஆறு பாகங்​களாக பிரித்து ஒவ்​வொரு பாகத்​தி​லும் ஒவ்வொரு குழு​வினர் கற்​களை வெட்டி எடுத்து விற்று வந்​தனர்.

இந்​நிலை​யில், இப்​பகுதி மேகமலை புலிகள் காப்​பக​மாக 2021-ல் அறிவிக்​கப்​பட்​ட​தால் சங்​கி​லிகரட்​டில் கல் உடைக்க தடை விதிக்​கப்​பட்​டது. இதனால் தங்​களின் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​படு​வ​தாக இங்கு கல்​லுடைத்து வந்த மகளிர் சுயஉதவிக் குழு​வினர் கோரிக்கை எழுப்​பினர். இவர்களுக்கு பெரிய அளவில் பொருளா​தா​ரப் பின்​னணி இல்​லாத​தால் இவர்​கள் பெயரைச் சொல்லி இப்​பகு​தி​யைச் சேர்ந்த அரசி​யல்​வா​தி​கள் கல்​குவாரியை மீட்​கும் வேலை​களில் இறங்​கினர். இது தொடர்​பாக தொடரப்​பட்ட வழக்​கில், இப்​பகுதி மீண்​டும் வரு​வாய்த் ​துறை​யின் கட்டுப்பாட்டுக்குள் வந்​தது.

இதையடுத்து 2022 முதல், மீண்​டும் கல் உடைக்​கும் பணி தொடங்​கியது. இம்​முறை மகளிர் சுயஉதவிக் குழு​வினருக்​கும் கல் உடைக்க அனுபவ பாத்தி​யம் உள்ள சிலருக்​கும் ஒரு தொகை​யைக் கொடுத்​து​விட்டு அரசி​யல் புள்​ளி​களே கல்​கு​வாரி​களை கைப்​பற்​றினர்.

இந்​நிலை​யில், அனுபவ பாத்​தி​யக்​கார​ரான சசிகு​மார் என்​பவர் அதி​காரப் புள்​ளி​களுக்கு கட்​டுப்​ப​டா​மல் தாங்​களே கல் உடைத்து விற்​பனை செய்து கொள்​வ​தாக தெரி​வித்​திருக்​கி​றார். சசிகு​மார் தமிழ் தேசிய ஃபார்​வர்டு பிளாக் கட்​சி​யின் கம்​பம் நகரச் செய​லா​ளர் என்​ப​தால் இவருக்கு ஆதர​வாக அந்தக் கட்​சி​யும் களத்​தில் குதித்​தது. இதையடுத்​து, எதிர்த்​தரப்​பானது பேச்​சு​வார்த்​தைக்​காக சசிகு​மாரை அழைத்​திருக்​கிறது. அப்​படிப் பேச்சுவார்த்தைக்​குப் போன இடத்​தில் தான் சசிகு​மாரை கத்​தி​யால் குத்​திக் கொலை செய்​திருக்​கி​றார்​கள்.

இந்​தக் கொலைக்கு நியா​யம் கேட்டு சாலை மறியல் உள்​ளிட்ட போராட்​டங்​கள் தலை​தூக்​கிய​தால் சட்​டம் - ஒழுங்கு பிரச்​சினையை சமாளிக்க கல்​கு​வாரி​களை தற்​காலிக​மாக இழுத்து மூடி​யிருக்​கிறது அரசு.

இது தொடர்​பாக நம்​மிடம் பேசிய தமிழ் தேசிய ஃபார்​வர்டு பிளாக் கட்​சி​யின் தேனி மாவட்​டத் தலை​வர் ராஜ்கு​மார், “250 ஏக்​கர் கொண்ட இந்த சங்கிலிக்​கரடில் ஏழை மக்​களின் வாழ்​வா​தா​ரத்தை மனதில் வைத்து அவர்களுக்கு கல் உடைக்​கும் உரிமம் வழங்​கப்​பட்​டது. ஆனால், காலப் போக்கில் இந்​தக் குவாரி​களானது திமுக-வைச் சேர்ந்த குரு இளங்​கோவன், கம்​யூனிஸ்ட் கட்​சி​யைச் சேர்ந்த ராஜேந்​திரன் உள்​ளிட்ட அரசி​யல் பிரமுகர்​களின் கட்​டுப்​பாட்​டுக்​குள் போய்​விட்​டன. அனுபவ பாத்​தி​யக்​காரர்​களில் ஒரு​வ​ரான சசிகு​மார் தனது உரிமையை அவர்​களுக்கு விட்​டுத்தர மறுத்​த​தால் அவரை பேச்​சு​வார்த்​தைக்கு வரச்​சொல்லி கொலையே செய்​து​விட்​டார்​கள்” என்​றார்.

சசிகு​மார் கொலை​யில் சின்​னச்​சாமி, குரு இளங்​கோ, ராஜாமணி உள்​ளிட்ட 7 பேரை கைது செய்​திருக்​கிறது போலீஸ். ஏழை​களின் வாழ்வாதாரத்துக்காக வழங்​கப்​பட்ட கல் குவாரி உரிமையை அரசி​யல்​வா​தி​கள் கைப்​பற்​றிக் கொண்டு கேரளா​வுக்கு கனிம வளத்​தைக் கடத்தி கொள்ளை லாபம் சம்​பா​திப்​பது கீழ் மட்​டத்​தி​லிருந்து மேல் மட்​டம் வரைக்​கும் அனைத்து அதி​காரிகளுக்​கும் தெரிந்தே நடப்​ப​தாகச் சொல்​பவர்​கள், “பணம் பாதாளம் வரைக்​கும் பாய்​கிற​போது யாரால் என்ன செய்​ய முடி​யும்?” என்று ஆதங்​கக் கேள்வி எழுப்​புகிறார்​கள்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x