Published : 03 Sep 2025 10:51 AM
Last Updated : 03 Sep 2025 10:51 AM

‘என்னை டார்ச்சர் செய்யும் அமைச்சர்கள்…’ - முன்னாள் பெண் அமைச்சரின் சுளீர் பதிவால் சூடாகும் புதுச்சேரி அரசியல்!

தன்னுடைய அரசியல் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் இரண்டு அமைச்சர்கள் தனக்கு தொல்லை தருவதாக ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரான சந்திர பிரியங்கா சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கும் வீடியோவால் பரபரத்துக் கிடக்கிறது புதுச்சேரி ஆளும் கூட்டணி வட்டாரம்.

2021-ல் காரைக்​கால் மாவட்​டத்​தில் என்​.ஆர். காங்​கிரஸ் சார்​பில் திரு​முரு​கன், சந்​திர பிரி​யங்கா ஆகிய இரு​வ​ரும் வெற்​றி​பெற்​ற​னர். இரு​வ​ருமே அமைச்​சர் பதவியை எதிர்​பார்த்​திருந்த நிலை​யில், சந்​திர பிரி​யங்கா​வுக்கு அமைச்​சர் பதவி கிடைத்​தது. இதையடுத்​து, சந்​திர பிரி​யங்​கா​வின் ஆதர​வாளர்​களும் திரு​முரு​க​னின் ஆதர​வாளர்​களுக்​கும் ஃபிளெக்ஸ் வைப்​பது தொடங்கி அனைத்​தி​லும் முட்​டிக் கொண்​டனர். இந்த நிலை​யில், திடீரென 2023 அக்​டோபரில் அமைச்​சர் பதவியை ராஜி​னாமா செய்த சந்​திர பிரி​யங்​கா, “தொடர்ச்​சி​யாக சாதிய ரீதி​யிலும் பாலியல் ரீதி​யாக​வும் தாக்​குதலுக்கு உள்​ளாகி வந்த நான் ஆதிக்க சக்​தி​களுக்கு எதி​ராக தொடர்ந்து போராடி அமைச்​ச​ராக நீடிக்க இயலாது என்​பதை உணர்ந்து பதவி வில​கு​கிறேன்” என்று பகிரங்​க​மாக அறி​வித்து பரபரப்பை பற்​ற​வைத்​தார்.

இதற்கு முதல்​வர் ரங்​க​சாமி பதிலேதும் சொல்​லாத நிலை​யில், அப்​போதைய துணை நிலை ஆளுநர் தமி​ழிசை சவுந்​தர​ராஜன், “அமைச்​சர் சந்​திர பிரி​யங்​கா​வின் துறை ரீதி​யான செயல்​பாடு​களில் திருப்தி இல்லை என்​ப​தால், அவரை அமைச்​சர​வையி​லிருந்து நீக்க வேண்​டும் என முதல்​வர் என்​னிடம் கேட்​டுக்​கொண்​டார். அதை தெரிந்து கொண்ட அவர், தானே தனது பதவியை ராஜி​னாமா செய்​வது போல் செய்​திருக்​கி​றார்” என்று விளக்​கமளித்​தார்.

சந்​திர பிரி​யங்​கா​வின் ராஜி​னா​மாவை அடுத்து நீண்ட தாமதத்​துக்​குப் பிறகு 2024 மார்ச்​சில் திரு​முரு​கன் அமைச்​ச​ராக்​கப்​பட்​டார். இதன் பிறகும் சந்​திர பிரி​யங்கா மற்​றும் திரு​முரு​க​னின் ஆதர​வாளர்​களுக்கு இடையி​லான மோதல்​கள் தொடர்​கதை​யானது. இந்த நிலை​யில் தான், இரண்டு அமைச்​சர்​கள் தனது அரசி​யல் வளர்ச்​சியை பொறுத்​துக்​கொள்ள முடி​யாமல் தன்னை டார்ச்​சர் செய்​வ​தாக சமூக வலை​தளத்​தில் வீடியோ ஒன்றை வெளி​யிட்​டிருக்​கி​றார் சந்​திர பிரி​யங்​கா.

அந்த வீடியோ​வில், ‘புதுச்​சேரி​யில் கட் அவுட் வைக்​கக் கூடாது என்ற நீதி​மன்ற உத்​தரவு இருக்​கிறது. அதை மதிக்​கி​றோம். கட் அவுட் வைக்​கக்​கூ​டாது என அறி​வுறுத்​துகி​றோம். எனினும் சில சமயங்​களில் கட்​சி​யினர் கட் அவுட் வைத்​து​விடு​கின்​ற​னர். இந்​நிலை​யில், கட் அவுட் வைத்​தது தொடர்​பாக ஒரு வாரத்​திற்கு முன்பு எனக்கு சம்​மன் வந்​தது. இதன் பின்​னணி​யில் ஓர் அமைச்​சர் உள்​ளார் என்​பது தெரிய வந்​தது. தொடர்ந்து குறுகிய சிந்​தனை​யுடன் எனக்கு எதி​ராக செயல்​படு​கின்​ற​னர். தனது கட்​டுப்​பாட்​டில் இல்லை என்​றால் ஒரு பெண்ணை எவ்​வளவு டார்ச்​சர் செய்​வார்​கள் என்​ப​தற்கு இது ஓர் உதா​ரணம்.

பெண் ஒரு​வர் அரசி​யலில் வளர்ந்து வந்​து​விட்​டால், அரசி​யலே வேண்​டாம் என்று ஒதுங்​கச் செய்​யும் வகை​யில் அவரை எல்லா வகை​யிலும் இழி​வுபடுத்​து​வது, வேவு பார்ப்​பது, அவரை சார்ந்​தோருக்​கும் தொல்லை கொடுப்​பது என்ன மாதிரி​யான அரசி​யல் எனத் தெரிய​வில்​லை. நான் எல்​லோரை​யும் குறை சொல்ல விரும்​ப​வில்​லை. ஒரு ஆள் அல்​லது இரண்டு ஆள் என வைத்​துக் கொள்​ளலாம். எனது அப்பா ஸ்தானத்​தில் உள்ள முதல்​வர் என்​.ஆர் ஒரு​வ​ருக்​காக மட்​டுமே பொறுத்​துக் கொண்டு நான் பெயர் சொல்​லாமல் இருக்​கிறேன். பாவம் அவரே நிறைய பொறுத்​துப் போய்க்​கொண்​டு​தான் உள்​ளார்’ என்று பேசி இருக்​கி​றார் சந்​திர பிரி​யங்​கா.

இந்த வீடியோ தொடர்​பாக பல்​வேறு விவாதங்​கள் எழுந்​துள்ள நிலை​யில், அமைச்​சர் திரு​முரு​க​னை​யும் பாஜக அமைச்​ச​ரான நமச்​சி​வா​யத்​தை​யும் தான் சந்​திர பிரி​யங்கா சுட்​டிக்​காட்​டு​வ​தாக சமூக ஊடங்​களில் பலரும் கருத்​துகளை பதி​விட்டு வரு​கி​றார்​கள். ஆனால், நம்​மிடம் இதை திட்​ட​வட்​ட​மாக மறுத்த அமைச்​சர் திரு​முரு​கன், “2021-ல் நெடுங்​காடு தொகு​தி​யில் போட்​டி​யிட்ட சந்​திர பிரி​யங்​காவை எனது சப்​போர்ட்​டில் அதி​க​மான வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற வைத்​தேன். என்​னுடைய பழைய தொகு​தி​யில் இருந்து நான் வாங்​கிக் கொடுத்த வாக்​கு​கள்​தான் அவரின் வெற்​றிக்கு முழு காரணம். அதனால் என்னை அவர் குறை சொல்​லி​யிருப்​ப​தாக சொல்​லப்​படு​வது தவறான கணிப்பு என நான் கருதுகிறேன். எனக்​கும் சந்​திர பிரி​யங்கா​வுக்​கும் எந்​தவொரு கருத்து வேறு​பாடும் துளி​யும் இல்​லை. மேலும், எனது துறை சார்ந்த நலத்​திட்​டங்​களை எனது தொகு​தி​யைக் காட்​டிலும், அவர் தொகு​திக்​குத்​தான் அதி​க​மாகச் செய்​திருக்​கிறேன்” என்​றார்.

சந்​திர பிரி​யங்​காவோ, “இரண்டு அமைச்​சர்​களால் எனக்கு டார்ச்​சர் உள்​ளது. அதில் ஒரு​வர், நான் அமைச்​ச​ராக இருந்​த​போது அமைச்​ச​ராக இல்​லாதவர். இன்​னொரு அமைச்​சர், நான் அமைச்​ச​ராக இருந்த போதிருந்​தே, மிக​வும் உச்ச நிலை​யில் அரசி​யல் ரீதி​யாக தொல்​லை​கள் கொடுத்து வரு​கி​றார். ஒரு பெண், அது​வும் சுய​மாக சிந்​திக்​கும் ஒரு பெண் அரசி​யலில் வளர்ந்​து​விடக் கூடாது, தனக்கு இணை​யாக இருந்​து​விடக் கூடாது என்று நினைக்​கின்​ற​னர். தனக்கு கட்​டுப்​பட்டு இருந்​தால், தான் சொல்​வதற்கு தலை​யாட்​டிக் கொண்டு இருந்​தால், இருந்​து​விட்டு போகட்​டும் என்று கருதுகின்​ற​னர். இது தொடர்​பாக முதல்​வரிடம் புகார் தெரி​வித்​துள்​ளேன். அவர் சொல்​லும் வரை பொறுத்​திருக்​கலாம் என நினைக்​கிறேன்” என்​றார்.

இதனிடையே இந்த விவ​காரத்​தில் கருத்​துத் தெரி​வித்​துள்ள முன்​னாள் அமைச்​சரும் காரைக்​கால் திமுக அமைப்​பாள​ரு​மான நாஜிம் எம்​எல்ஏ, “முன்​னாள் அமைச்​சர், தற்​போது எம்​எல்​ஏ-​வாக இருப்​பவர், பட்​டியலினத்​துப் பெண்​ணான அவரது குற்​றச்​சாட்டை ஏதோ அவர்​களின் கட்​சிப் பிரச்​சினை என்று எளி​தாக கடந்து போக முடி​யாது. எனவே, தேசிய மகளிர் ஆணை​ய​மும், நீதி​மன்​ற​மும் தாமாக முன்​வந்து இதை வழக்​காக எடுத்து விசா​ரித்து உண்​மை​களை பொது​மக்​களுக்​குச் சொல்ல வேண்​டும்” என்று சொல்லி இருப்​பதும் அரசி​யல் முக்​கியத்​துவம் பெற்​றிருக்​கிறது.

- செ.ஞானபிரகாஷ், வீ.தமிழன்பன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x