Published : 03 Sep 2025 05:48 AM
Last Updated : 03 Sep 2025 05:48 AM

டிஎன்பிஎஸ்சி வினாத்தாள் தயாரிப்பில் அரசு கவனமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

சென்னை: டிஎன்​பிஎஸ்சி வினாத்​தாளில் ஐயா வைகுண்​டர் குறித்த பதிவுக்கு தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கண்டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் தனது சமூக வலைதள பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: கலி​யுகத்தை அழித்து உலகில் தர்​ம​யுகத்தை ஸ்தாபிக்க அவதா​ர மெடுத்த ஐயா வைகுண்​டரை பற்றி தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் (டிஎன்​பிஎஸ்​சி) ஆங்கிலக் கேள்​வி​யில், 'God of hair cutting' என்று இழி​வாகக் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது கடும் கண்​டனத்​துக்​குரியது.

தென்​தமிழகத்​தில் லட்​சக்​கணக்​கான மக்​களால் போற்​றப்​படு​பவரும், தெய்​வீக நிலையை அடைந்​தவரு​மான ஐயா வைகுண்டருக்கு தாய், தந்தை சூட்​டிய பெயர் முத்​துக்​குட்டி என்​ப​தாகும். ஆனால், மக்​கள் அவரை 'முடிசூடும் பெரு​மாள்' என்​னும் பெய​ரால் அழைத்​தனர். எந்த மொழி​யிலும் பெயரை அப்​படியே எழுது​வது​தான் வழக்​கம்.

அப்​படி​யிருக்​கை​யில், பெயரை மொழிபெயர்த்து சொல்​கிறேன் என்று மக்​களால் தெய்​வ​மாகப் போற்​றப்​படும் ஐயா வைகுண்​டர் பெயரை இப்​படி இழிவு செய்​வது முறை​யா? இதே தேர்​வில், தன் தந்தை குறித்​தோ, அல்​லது திமுக தலை​வர்​கள் குறித்தோ இப்​படிப்​பட்ட தவறுகள் நடந்​தால், முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசாமல் இருப்​பா​ரா? தற்​போது நடந்த இத்​தவறு மிக​வும் கண்​டத்​துக்​குரியது. இதில் எந்​தவொரு உள்​நோக்​க​மும் இருக்​காது என்று நம்​பு​கிறோம். ஆனாலும், இந்​தத் தவறைச் செய்​தவர்​கள் கண்​டிக்​கப்பட வேண்​டியது அவசி​யம்.

மேலும், போற்​றத்​தக்க மகான்​கள், தலை​வர்​கள் குறித்த கேள்வி​கள் மற்​றும் பதிவு​களில் இன்​னும் அதிக விழிப்​போடும் கவனத்​துட​னும் இருப்​ப​தை​யும், மீண்​டுமொரு முறை, இது​போன்ற தவறு நிகழா​திருப்​ப​தை​யும் திமுக அரசு உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார். இதேபோல், முன்​னாள் எம்​.பி. சரத்​கு​மார், பெருந்​தலை​வர் மக்​கள் கட்​சித் தலை​வர் என்​.ஆர்​. தன​பாலன் உள்​ளிட்​டோரும்​ கண்​டனம்​ தெரி​வித்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x