Published : 03 Sep 2025 05:40 AM
Last Updated : 03 Sep 2025 05:40 AM

திமுக வெளியிட்ட 505 வாக்குறுதிகளில் தமிழகம் முழுவதும் 404 தொலைநோக்கு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன: தங்கம் தென்னரசு

தமிழக அரசின் தொலை நோக்​குத் திட்​டங்​கள் குறித்து நேற்று அமைச்​சர் தங்​கம் தென்​னரசு செய்தியாளர்களிடம் விளக்கினார். உடன் அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், கோவி.செழியன். | படம்: எல்.சீனிவாசன் |

சென்னை: ​தி​முக தேர்​தல் அறிக்​கை​யில் வெளி​யிட்ட 505 வாக்​குறு​தி​களை தொலைநோக்கு திட்​டங்​களாக உரு​வாக்கி 404 திட்டங்களை பல்​வேறு நிலைகளில் செயல்​படுத்​து​வதுடன், அறிவிக்​காத பல திட்​டங்​களை​யும் செயல்​படுத்தி வரு​வ​தாக அமைச்சர் தங்​கம் தென்​னரசு தெரி​வித்​துள்​ளார்.

தமிழக அரசின் தொலை நோக்​குத் திட்​டங்​கள் குறித்து நேற்று அமைச்​சர் தங்​கம் தென்​னரசு கூறிய​தாவது: முதல்​வ​ராக மு.க.ஸ்டா​லின் கடந்த 2021-ல் பொறுப்​பேற்​ற​போது கரோனா பெருந்​தொற்​று, நிதி நெருக்​கடி இருந்​தன. நிதிப் பற்​றாக்​குறை 4.91 சதவீத​மாக​வும், வரு​வாய் பற்​றாக்​குறை 3.49 சதவீத​மாக​வும் இருந்​தது.

மாநிலத்​தில் உள்​நாட்டு வரு​வாய் வளர்ச்சி 0.07 சதவீத​மாக இருந்​தது. இந்த நான்​கரை ஆண்​டு​களில், ஓராண்டு முழு​வதும் இயற்​கைச் சீற்​றங்​களால் பாதிக்​கப்​பட்ட நிலை​யில், மூன்​றரை ஆண்​டு​களில் அபரித​மான வளர்ச்​சியை கொண்டு வந்​திருக்​கிறோம். மத்​திய அரசின் நிதி பங்​களிப்பு இல்​லாமல் கூட பல்​வேறு இயற்கை சீற்​றங்​களில் இருந்து தமிழகத்தை மீட்​டெடுத்​துள்​ளோம்.

தேர்​தல் அறிக்​கை​யில் தெரி​வித்​திருந்​ததை அமைச்​சர​வைக் கூட்​டத்​தில் வைத்து அவற்றை தொலைநோக்கு திட்​டங்​களாக உருவாக்கி ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. உள்​நாட்டு உற்​பத்​தி​யின் வளர்ச்சி 0.07 சதவீத​மாக இருந்​தது. 2024-25-ம் ஆண்​டில் இரட்டை இலக்​கில் 11.19 சதவீத​மாக வளர்ந்​திருக்​கிறோம். இது கடந்த 10 ஆண்​டு​களில் தமிழகம் பெற்​றுள்ள உச்​சபட்ச வளர்ச்​சி​யாகும். அதே​போல் ஆட்சி பொறுப்​புக்கு வரும்​போது 3.49 சதவீத​மாக இருந்த வரு​வாய் பற்​றாக்​குறை இப்​போது 1.17 சதவீத​மாக குறைக்​கப்​பட்​டுள்​ளது.

நிதிப் பற்​றாக்​குறையை 4.91 சதவீதத்​தில் இருந்து 3 சதவீத​மாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், 897 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் மூலம் இது​வரை ரூ.10.28 லட்​சம் கோடி தொழில் முதலீடு​களை ஈர்த்​திருக்​கிறோம். இதன்​வாயி​லாக, 32.23 லட்​சம் பேருக்கு வேலை​வாய்ப்​பு​கள் பெற வழி ஏற்​பட்​டுள்​ளது.

மத்​திய அரசு வழங்​கி​யுள்ள சமூக வளர்ச்சி குறி​யீடு​களில் தமிழகம் முதலிடத்​தில் உள்​ளது. அறி​வித்த திட்​டங்​கள்​த​விர, சொல்​லாத பல திட்​டங்​களை​யும் நிறைவேற்றி வந்​திருக்​கிறோம் திமுக ஆட்​சிப்​பொறுப்​புக்கு வரும் முன் 505 தேர்​தல் வாக்​குறு​தி​கள் கொடுத்​திருந்​தோம்.

இதில் 364 திட்​டங்​களுக்கு அரசு ஆணை​கள் வெளி​யிடப்​பட்​டு, அந்​தப் பணி​கள் இப்​போது நடை​பெற்​றுக் கொண்​டிருக்​கின்​றன. பரிசீலனை​யில் இப்​போது 40 திட்​டங்​கள் உள்​ளன. மத்​திய அரசிடம் நிலு​வை​யில் உள்ள திட்​டங்​களும் இருக்​கின்றன. நடவடிக்​கைக்கு எடுத்​துக் கொள்​ளப்​ப​டாத 64 திட்​டங்​களும் உள்​ளன.

இவைத​விர, கலைஞர் அனைத்து கிராம ஒருங்​கிணைந்த வேளாண்மை வளர்ச்​சித் திட்​டம், இல்​லம் தேடி கல்​வி, காலை உணவு திட்​டம், எண்​ணும் எழுத்​தும் திட்​டம், நான் முதல்​வன் திட்​டம், புது​மைப் பெண் திட்​டம், தமிழ்ப் புதல்​வன் திட்​டம், மக்​களை தேடி மருத்​து​வம், முதல்​வர் மருந்​தகம், பாதம் காப்​போம், கலைஞரின் கனவு இல்​லம் திட்​டம், வடசென்னை வளர்ச்​சித்​திட்​டம், உங்களுடன் ஸ்டா​லின் என பல்​வேறு திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இவ்​வாறு தெரி​வித்​தார். உடன் அமைச்​சர்​கள் எஸ்​.எஸ்​.சிவசங்​கர், கோவி.செழியன் ஆகியோர் இருந்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x