Published : 03 Sep 2025 01:07 AM
Last Updated : 03 Sep 2025 01:07 AM
சென்னை: தமிழகத்தில் செப்.6-ம் தேதி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது மேலும் வலுவடைந்து, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா பகுதிகளை நாளை கடந்து செல்லக்கூடும்.
இதற்கிடையே, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வடதமிழகத்தின் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செப்.6-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 35.6 முதல் 37.4 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரில் இன்று ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT