Published : 02 Sep 2025 06:44 PM
Last Updated : 02 Sep 2025 06:44 PM

கால்நடை வளர்ப்புக்கு கைகொடுத்த பழங்குடியினர் நலத்துறை: திருவள்ளூர், காஞ்சி, செங்கை, விழுப்புரத்தில் 1,000 குடும்பங்களில் நம்பிக்கை விதை

தொல்குடி வேளாண்மை மேலாண்மைத் திட்டம் ஐந்திணை: ஐந்​திணை- தொல்​குடி​யினர் வேளாண்மை மேலாண்​மைத் திட்டத்தின்​கீழ், கால்​நடை வளர்ப்பு மூலம் பழங்​குடி​யின விவசாயிகளின் வாழ்​வா​தா​ரத்தை மேம்​படுத்​தும் முன்​னோடித் திட்​டம், தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ அறி​வியல் பல்​கலைக் கழகத்​துடன் (டானு​வாஸ்) இணைந்து பழங்​குடி​யினர் நலத்​துறை​யால் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மற்​றும் விழுப்​புரம் மாவட்​டங்​களில் உள்ள 1,000 பழங்​குடி​யின குடும்​பங்​களை இலக்காகக் கொண்ட இத்​திட்​டம் பெண்​கள், சுய உதவிக் குழுக்​களின் திறன் மேம்​பாட்டை மைய​மாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்​ளது.

பழங்​குடி​யின குடும்​பங்​கள் எதிர்​கொள்​ளும் கந்​து​வட்டி பிரச்​சினை​கள் இத்​திட்​டத்​தின் மூலம் தடுக்​கப்​பட்​டுள்​ளது. குடும்​பங்​கள் நேரடி​யாக வங்​கி​களு​டன் இணைக்​கப்​படு​கின்​றன. திரு​வள்​ளூரில், சுயஉதவிக் குழுப் பெண்​கள் பலர் வங்​கிக்​கடன் பெற்​று, ஆடு கொட்​டகைகள், தீவனம் கொள்​முதல் போன்ற தேவை​களை நிறைவேற்​றி​யுள்​ளனர்.

வங்கி மூலம் ரூ.13 லட்​சம் கடன் பெற்ற 33 பெண்​கள் பழைய கடன்​களை அடைக்​க​வும் தொழில்​களில் முதலீடு செய்​ய​வும் உதவியுள்​ளனர். அறி​வியல்​ரீ​தி​யான பயிற்சி மற்​றும் கால்​நடை மருத்​துவ ஆதர​வுடன் ஆடு​கள் மற்​றும் கோழிகளின் விநி​யோகம், குடும்​பங்​களின் வரு​மானத்தை மாற்​றியமைக்​கத் தொடங்​கி​யுள்​ளது.

கால்​நடை வளர்ப்​பின் மூலம் மாத வரு​வாய் ரூ.32,000 வரை கிடைக்​கும் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. தினக்​கூலியை மட்​டுமே நம்பியிருந்த பெண்​கள், இப்​போது முட்​டை, ஆட்​டுக்​குட்டி மற்​றும் மதிப்பு கூட்​டப்​பட்ட பொருட்​களை விற்​ப​தன் மூலம் நிலை​யான வரு​மானத்தை ஈட்​டு​கின்​றனர். ஆடு வளர்க்​கும் குடும்​பங்​கள், கோழிப்​பண்ணை வைத்​திருப்​போர் நிலை​யான வரு​மானத்தை ஈட்டி வரு​கின்​றனர்.

கால்​நடை விநி​யோகத்​துடன், அவற்​றின் பராமரிப்​பு, நோய்த் தடுப்பு மற்​றும் இனப்​பெருக்க முறை​கள் குறித்த பயிற்​சிகள் வழங்​கப்​பட்​டன. தொடர்ச்​சி​யான பயிற்சி மற்​றும் மேம்​பாடு மூலம் கால்​நடை வளர்ப்பை ஒரு லாபகர​மான தொழிலாக பயன்​பெற்ற குடும்​பங்​கள் கருதுகின்​றன.

ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் நலத்​துறை​யின் செய​லா​ளர் கூறும்​போது, “நிலமற்ற பழங்​குடி​யினருக்​கும், விளிம்​பு நிலை சமூகத்​தினருக்​கும் பொருளா​தார நிலையை மேம்​படுத்த இந்​தத் திட்​டம் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்​கு​கிறது. பெண்​களுக்கு முன்​னுரிமை அளிப்​ப​தன் மூலம், குடும்​பங்​களுக்கு சமூகப் பாது​காப்பு கிடைப்​பதை இந்​தத்​ திட்​டம்​ உறு​தி செய்​கிறது” என்​றார்​.

துர்கா (பொன்​னேரி) - எனக்கு மூன்று பெண் ஆடு​களும், ஒரு ஆண் ஆடும் வழங்​கப்​பட்​டன. இப்​போது அந்த ஆடு​கள் இரண்டு குட்​டிகளை ஈன்​றுள்​ளன. ஒரு காலத்​தில் வாழ்​வா​தா​ரத்​திற்கு வழி தெரி​யாமல் வீட்​டில் முடங்​கிக் கிடந்த எனக்​கு, இந்த திட்​டம் ஒரு புதிய நம்​பிக்​கை​யைக் கொடுத்​திருக்​கிறது. எங்​கள் வாழ்க்​கையை மேம்​படுத்​தும் இந்​தத் திட்​டத்​துக்​காக முதல்​வர், அமைச்​சர்​கள் மற்​றும் அதி​காரி​களுக்கு என் நன்​றி. வருங்​காலத்​தில் ஒரு பெரிய பண்ணை அமைப்​பதே எனது லட்​சி​யம்.

முரு​கம்​மாள் (பழ​வேற்​காடு) - ஆடு மற்​றும் கோழிகளை வளர்த்து கணிச​மான வரு​வாய் ஈட்டி வரு​கிறேன். என் கணவருக்கு வேலை இல்​லாத நேரங்​களில் வறுமை​யின் பிடி​யில் சிக்​கித் தவித்​தோம். இந்த திட்​டம் மூலம் கால்​நடை வளர்ப்பு குறித்து பயிற்சி பெற்​றேன். 50 நாட்​டுக் கோழிகளை வளர்த்​து, மாதம் கணிச​மான வரு​மானம் ஈட்​டத் தொடங்​கினேன். ஒரு கோழி ரூ.500 வரை விற்பனையாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x