Published : 02 Sep 2025 06:04 AM
Last Updated : 02 Sep 2025 06:04 AM

ஓய்வுக்கால பணப் பலன்களை தீபாவளிக்குள் வழங்க வேண்டும்: சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் தகவல் 

சென்னை: ஓய்​வு பெற்​றவர்​களுக்​கான 15 மாத ஓய்​வுக்​கால பணப்​பலன்​களை தீபாவளிக்​குள்​ வழங்​கு​வது குறித்​து, அமைச்​சர்​ நல்ல பதில்​ சொன்​னால்​ போக்​கு​வரத்​து ஊழியர்​களின்​ காத்​திருப்​பு போ​ராட்​டம்​ முடிவு பெறும்​ என, சிஐடி​யு மாநிலத்​ தலை​வர்​ அ.சவுந்​தர​ராஜன்​ கூறி​னார்​.

தமிழகம்​ முழு​வதும்​ 2 ஆண்​டு​களாக பணி ஓய்​வு பெற்​ற 3,500 போக்​கு​வரத்​து தொழிலா​ளர்​களுக்​கு வழங்​கப்​ப​டா​மல்​ உள்​ள ஓய்வுக்​கால பலன்​கள்​, பணி​யில்​ உள்​ளவர்​களுக்​கு 2 ஆண்​டு ஊதி​ய ஒப்​பந்​த நிலு​வை தொகை மற்றும்​ 12 மாத அகவிலைப்​படி நிலு​வை தொகை​யை வழங்​க வேண்​டும்.

பழைய ஓய்​வூ​தி​ய திட்​டத்​தை செயல்​படுத்​த வேண்​டும்​ உட்​பட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி போக்​கு​வரத்​து ஊழியர்கள்​ மற்​றும்​ ஓய்​வூ​தி​யர்​கள்​ ஆக.15-ம்​ தேதி முதல்​ கால​வரையற்​ற காத்​திருப்​பு போ​ராட்​டத்​தை நடத்​தி வரு​கின்​றனர்​.

இந்நிலை​யில்​, சென்​னை தலை​மைச்​ செயல​கத்​தில்​ போக்​கு​வரத்​து துறை அமைச்​சர்​ எஸ்​.எஸ்​. சிவசங்​கர்​, சிஐடி​யு மாநிலத்​ தலைவர்​ அ.சவுந்​தர​ராஜன்​, தமிழ்​நாடு அரசு போக்​கு​வரது உழியர்​ சம்​மேளன பொதுச்​செய​லா​ளர்​ கே.ஆறு​முகந​யி​னார்​, அரசாங்​க போக்​கு​வரத்​து ஊழியர்​ சங்​க பொதுச்​ செய​லா​ளர்​ வி.த​யானந்​தம்​, ஓய்​வு​பெற்​றோர்​ நல அமைப்​பின்​ தலை​வர்​கள்​ நடராஜன்​, ஆதி​மூலம்​ ஆகியோ​ருடன்​ பேச்​சு​வார்த்​தை நடத்​தி​னார்​.

பின்​னர்​, அ.சவுந்​தர​ராஜன்​ செய்​தி​யாளர்​களிடம்​ கூறிய​தாவது: வேலை நிறுத்​தம்​ செய்​வது முடி​யாத காரியமல்​ல. ஆனால்​, மக்​கள்​ நலனுக்​காக பேருந்​து இயக்​கம்​ பா​திக்​கப்​படக்​ கூடாது என்​ப​தை கரு​தி, காத்​திருப்​பு போ​ராட்​டத்​தை நடத்​துகிறோம்​. இந்​த நல்​லெண்​ணத்​தை புரிந்​து கொண்​டு அரசு பிரச்​சினையை தீர்க்​க முன்​வர வேண்​டும்​.

ஓய்​வு பெற்​றவர்​களுக்​கான 15 மாத​கால பணப்​பலன்​களை தீபாவளிக்​குள்​ வழங்​க வேண்​டும்​ என்​று அமைச்​சருட​னான பேச்​சு​வார்த்​தை​யில்​ கோரி​யிருக்​கிறோம்​. பணி​யில்​ இருப்​பவர்​களுக்​கான நிலு​வைத்​ தொகை​யை வழங்​க வலி​யுறுத்​தி​ய​போது, ஒரு​வாரத்​திற்​குள்​ தர ஏற்​பாடு செய்​வ​தாக அமைச்​சர்​ கூறி​னார்​.

ஓய்​வு​பெற்​றவர்​களின்​ அகவிலைப்​படி, 2003-க்​கு பிறகு பணி​யில்​ சேர்ந்​தவர்​களுக்​கு ஓய்​வூ​தி​யம்​ உள்​ளிட்​ட கோரிக்​கைகளுக்​கு, அதி​காரி​களு​டன்​ கலந்​தாலோ​சித்​து விட்​டு தெரி​விப்​ப​தாக அமைச்​சர்​ கூறி​யுள்​ளார்​. நல்​லபதில்​ சொல்​வார்​ என்​று எதிர்​பார்​க்​கிறோம்​. நல்​ல பதில்​ சொன்​​னால்​ போ​ராட்​டம்​ முடிவுக்​கு வரும்​. இல்​லா​விட்​​டால்​ போ​ராட்டம்​ தொடரும்​. இவ்​​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x