Published : 02 Sep 2025 05:44 AM
Last Updated : 02 Sep 2025 05:44 AM

தமிழக சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்​தில் உள்ள சுங்​கச்​சாவடிகளில் நேற்று முதல் அமலுக்கு வந்த சுங்​கக்​கட்டண உயர்வை மத்​திய அரசு திரும்பப் ​பெற வேண்​டும் என்று பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். தமிழகத்​தில் விக்​கிர​வாண்​டி, சமயபுரம், ஓமலூர், கிருஷ்ணகிரி, தரு​மபுரி உள்​ளிட்ட 38 சுங்​கச்​சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரையி​லான சுங்​கக் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்​த நிலை​யில், அதற்கு கண்​டனம் தெரிவித்து பல்​வேறு அரசியல் கட்​சித் தலை​வர்​கள் கூறி​யிருப்​ப​தாவது:

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் இரா.​முத்​தரசன்: விலை​வாசி உயர்​வால் மக்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்டு வருகின்றனர். அத்​தி​யா​வசிய பொருட்​கள் உட்பட அனைத்து பொருட்​களின் விலை​யும் உயர்ந்து கொண்டே இருக்​கின்​றன. இதற்கிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்​தி​ய பொருட்​களுக்கு 50 சதவீத வரி விதித்​திருக்​கிறார்.

இதனால் திருப்​பூர் உட்பட தமிழகமே கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டிருக்​கிறது. இத்​தகைய நெருக்​கடி மிகுந்த சூழலில் சுங்க கட்டண உயர்வு என்​பது வெந்​த​புண்​ணில் வேல் பாய்ச்​சுவது போல் இருக்​கிறது. சுங்​கக் கட்டண உயர்வை மத்​திய அரசு திரும்​பப்​பெற வேண்​டும்.

மார்க்​சிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம்: சுங்​கக்​கட்​ட​ணம் உயர்வு கடுமை​யான பாதிப்பை ஏற்​படுத்​தும். விலை​வாசி உயர்​வுக்கு அடிப்​படை​யாக விளங்​கும். கட்​ட​ணத்தை உயர்த்​து​வ​தாக அறி​விப்பு வந்​த​போதே கடும் கண்​டனத்​தை, எதிர்ப்பை தெரி​வித்​தோம். எனவே அமலுக்கு வந்​துள்ள அபரிமித​மான சுங்​கக்​கட்டண உயர்வை மத்​திய அரசு திரும்ப பெற வேண்​டும்.

அமமுக பொதுச் ​செய​லா​ளர் டிடிவி தினகரன்: ஏற்​கெனவே அத்​தி​யா​வசி​யப் பொருட்​களின் விலை​யேற்​றம் உச்​சத்​தைத் தொட்​டுக் கொண்​டிருக்​கும் நிலை​யில், தற்​போது உயர்ந்​திருக்​கும் இந்த சுங்​கக் கட்​ட​ணம் ஏழை, எளியமக்​களின் மீதான பொருளா​தா​ரச்சுமையை மேலும் அதி​கரிக்​கும். ஆண்​டுக்கு 2 முறை உயர்த்​தப்​படும் சுங்​கக் கட்​ட​ணத்​தால் சரக்கு மற்​றும் வாடகை வாக​னங்​களின் கட்​ட​ணங்​கள் உயர்​வதோடு, பேருந்​துக் கட்​ட​ணங்​கள் உயர்​வதற்​கான அபாயகர​மான சூழலும் உள்​ளது. எனவே அமலுக்கு வந்​திருக்​கும் சுங்​கக் கட்டண உயர்வை உடனடி​யாக மத்​திய அரசு திரும்​பப்​பெற வேண்​டும்.

வி.கே.சசிகலா: தமிழகத்​தில் சொத்​து​வரி உயர்​வு, ஆவின் பொருட்​களின் விலை​யேற்​றம், வரலாறு காணாத வகை​யில் மின்கட்டண உயர்​வு, கட்​டு​மான பொருட்​கள், விவ​சா​யம் சார்ந்த பொருட்​களின் விலை உயர்​வு​களால் மக்​கள் கடுமை​யாக பாதிப்​படைந்து தவிக்​கும் நிலை​யில், சுங்​கக்​கட்டண உயர்வு அனை​வருக்​கும் கூடு​தல் சுமையளிப்​ப​தாக அமை​யும். எனவே, தமிழக மக்​களின் நலனை கருத்​தில் கொண்டு சுங்​கக்​கட்​ட​ண உயர்​வை மத்​தி​ய அரசு கைவிட வேண்​டும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x