Published : 02 Sep 2025 05:30 AM
Last Updated : 02 Sep 2025 05:30 AM

174 பயணிகளுடன் அந்தமான் சென்ற விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கம்

சென்னை: அந்​த​மானில் மோச​மான வானிலை நில​விய​தால் 174 பயணி​களு​டன் சென்ற விமானம் மீண்​டும் சென்னை வந்து தரையிறங்​கியது. சென்​னையி​லிருந்து 174 பயணி​களு​டன் ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் விமானம் அந்​த​மானுக்கு நேற்று காலை 7.25 மணிக்கு புறப்​பட்​டது. காலை 9.30 மணி​யள​வில் அந்​த​மான் வான்​வெளி​யில் விமானம் சென்​றது.

அந்​த​மான் விமான நிலைய பகு​தி​யில் தரைக்​காற்று அதி​க​மாக வீசி​ய​தால் ஏற்​பட்ட மோச​மான வானிலை​யால், விமானத்தை தரையிறக்க முடி​யாத நிலை ஏற்​பட்​டது. இதையடுத்​து, சென்னை விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறையை விமானி தொடர்பு கொண்​டார். உடனடி​யாக விமானத்தை சென்​னைக்கு திருப்​பிக் கொண்டு வரு​மாறு கட்​டுப்​பாட்டு அதி​காரி​கள் உத்​தர​விட்​டனர்.

அதன்​படி, விமானி அந்​த​மான் வான்​வெளி​யில் இருந்து விமானத்தை திருப்பி வந்து பகல் 11.40 மணி​யள​வில் சென்​னை​யில் தரையிறக்​கி​னார்.

மாலை வரை அந்தமானில் வானிலை சீராகாததால், விமானம் ரத்து செய்யப்படுவதாகவும், நாளை (இன்று) விமானம் அந்தமான் புறப்பட்டு செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x