Last Updated : 02 Sep, 2025 12:58 PM

 

Published : 02 Sep 2025 12:58 PM
Last Updated : 02 Sep 2025 12:58 PM

தோற்றும் பாடம் படிக்காமல் இருக்கிறாரா கே.சி.வீரமணி? - ஆதங்க அலையில் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக!

கே.சி.வீரமணி, மருத்​து​வர் பசுபதி

எந்த ஆட்சியாக இருந்தாலும் அரசியல் தெரிந்த அமைச்சர்கள் அடுத்த தேர்தலிலும் தாங்கள் ஜெயிப்பதற்கான அடித்தளத்தை அதிகாரத்தில் இருக்கும் போதே போட்டுவைப்பார்கள். ஆனால், விவரமாக அப்படி செயல்படாததால், 2021-ல் அமைச்சராக இருந்தும் தோற்றுப் போனார் கே.சி.வீரமணி. அப்படி அதிகாரத்தைத் தொலைத்தவர், பட்டும் திருந்தாமல் இருப்பதாக ஆதங்கப்படுகிறார்கள் திருப்பத்தூர் மாவட்ட அதிமுககாரர்கள்.

அ​தி​முக ஆட்​சி​யில் பசை​யுள்ள பத்​திரப்​ப​திவுத் துறைக்கு அமைச்​ச​ராக இருந்​தவர் கே.சி.வீரமணி. பத்​தாண்டு காலம் அமைச்​ச​ராக இருந்த இவர், வேலூர், திருப்​பத்​தூர், ராணிப்​பேட்டை ஆகிய 3 மாவட்ட அதி​முக-வை தனது பிடிக்​குள் வைத்​திருந்​தவர். ஜெயலலிதா மறைவுக்​குப் பிறகு, கட்​சிக்​குள் தனது செல்​வாக்கை மேலும் வளர்த்​துக் கொண்ட வீரமணி, தனக்கு போட்​டி​யாக வரு​வார்​கள் என்று கரு​தி​ய​வர்​களை எல்​லாம் ‘கவன​மாக’ பார்த்​துக் கொண்​ட​தாக​வும் தகவல்​கள் உண்​டு. இதனால், முன்​னாள் அமைச்​சர்​களான பாண்​டுரங்​கன், வி.எஸ்​.​விஜய், நிலோபர் கபீல், எம்​.எஸ்​.சந்​திரசேகரன் உள்​ளிட்​ட​வர்​கள் அரசி​யலில் தங்​களுக்​கான இடத்​தைத் தொலைத்​தார்​கள்.

இப்​போது திருப்​பத்​தூர் மாவட்​டச் செய​லா​ள​ராக இருக்​கும் வீரமணி, 2021-ல் ஜோலார்​பேட்டை தொகு​தி​யில் மீண்​டும் போட்​டி​யிட்​டார். “இந்த 3 மாவட்​டங்​களில் அதி​கப்​படி​யான வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெல்​லப் போகும் வேட்​பாளர் அண்​ண​னாகத்​தான் இருப்​பார்” என அப்​போது வீரமணி​யின் விசு​வாச வட்​டம் தம்​பட்​டம் போட்ட நிலை​யில், திமுக-​விடம் 1,091 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​றுப் போனார் வீரமணி.

இப்​படி​யான அதிர்ச்​சித் தோல்​வியை எதிர்​பார்க்​காத வீரமணி இம்​முறை, விட்ட இடத்​தைப் பிடிக்க கணக்​குப்​போட்டு காய் நகர்த்தி வரு​கி​றார். அதேசம​யம், தேர்​தல் தோல்​வியை படிப்​பினை​யாகக் கொள்​ளாமல் இன்​ன​மும் தன்னை அமைச்​ச​ராகவே நினைத்​துக் கொண்டு பழைய மனநிலை​யிலேயே இருக்​கி​றார் வீரமணி என்று திருப்​பத்​தூர் மாவட்ட அதி​முக-​வினர் புலம்​பு​கி​றார்​கள்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய அவர்​கள், “தேர்​தல் தோல்வி என்​பது அரசி​யலில் சகஜம். ஆனால், ஒரு​முறை தோற்​றால் அதி​லிருந்து பாடம் படித்​துக்​கொள்ள வேண்​டும். ஆனால், வீரமணி அப்​படி படித்​துக் கொண்​ட​தாகத் தெரிய​வில்​லை. அதனால் தான் இன்​ன​மும் கட்​சிக்​காக உழைக்​கும் உண்​மை​யான விசு​வாசிகளை ஒதுக்​கி​வைத்​து​விட்டு தனக்கு வேண்​டப்​பட்ட சிலரை மட்​டும் உடன் வைத்​துக் கொண்டு அரசி​யல் நடத்​துகி​றார். இப்​படி இருந்​த​தால் தான் கடந்​த ​முறை தோற்​றுப் போனோம் என்​பதை இன்​ன​மும் அவர் உணர​வில்​லை.

இப்​படி​யான செயல்​பாடு​களால் தான் கடந்த முறை இந்த மாவட்​டத்​தில் உள்ள நான்கு தொகு​தி​களில் மூன்றை திமுக கைப்​பற்​றியது. வாணி​யம்​பாடி​யிலும் முஸ்​லிம் லீக் வேட்​பாளர் உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிட்டு இருந்​தால் அங்​கே​யும் அதி​முக தோற்​றுப் போயிருக்​கும். இதெல்​லாம் தெரிந்​திருந்​தும் வீரமணி தரப்​பினர் திருந்​தி​ய​பாடில்​லை.

கடந்த நான்​கரை ஆண்​டு​களில் மாவட்​டச் செய​லா​ளர் பதவியைத் தவிர வேறெந்த பதவி​யும் இல்​லாமல் இருக்​கும் வீரமணி, அதனால் பட்​ட​பாடு கொஞ்​சம் நஞ்​சமல்ல. அதனால் தான் இம்​முறை எப்​படி​யா​வது ஜெயித்​தாக வேண்​டும் என்​ப​தற்​காக கட்சி நிர்​வாகி​களை தேடிச்​சென்று குசலம் விசா​ரிக்​கி​றார். ஆனால், கடந்த நாலரை ஆண்​டு​களில் வீரமணி​யின் செயல்​பாடு​கள் எப்​படி இருந்​தது என்​பதை நாங்​கள் யாரும் இன்​னும் மறக்​க​வில்​லை.

மருத்​து​வர் பசுபதி அரசுப் பணியை ராஜி​னாமா செய்​து​விட்டு 2024 மக்​கள​வைத் தேர்​தலில் அதி​முக வேட்​பாள​ராக வேலூரில் போட்​டி​யிட்​டார். கட்​சிக்​காக சொத்தை எல்​லாம் அடமானம் வைத்து செல​வழித்த அவர், எம்பி தேர்​தலில் தோற்​றுப் போனாலும் எம்​எல்ஏ தேர்​தலில் தனக்கு கட்சி வாய்ப்​பளிக்​கும் என நம்​பிக் கொண்​டிருக்​கி​றார். ஆனால், அவரை கட்​சிக்​குள் முன்​வரிசைக்கு வரவி​டாத​படிக்கு முட்​டுக்​கட்டை போடு​கி​றார்​கள். களநில​வரத்​தைப் புரிந்து கொள்​ளாமல் இப்​படி அனை​வரை​யும் ஓரங்​கட்டி உட்​கார​வைக்​கும் அரசி​யலை இன்​ன​மும் செய்து கொண்​டிருந்​தால் இந்த மாவட்​டத்​தில் அதி​முக வெற்றி என்​பது கேள்விக்​குறி​யாகி விடும் என்​பதை தலை​மை​யும் புரிந்து கொள்ள வேண்​டும்” என்​ற​னர்.

இதுகுறித்து மருத்​து​வர் பசுப​தி​யிடம் பேசி​ய​போது, “கட்​சிக்​குள் நான் புறக்​கணிக்கப்​படு​வ​தாக யாரோ வேண்​டுமென்றே தவறான தகவலை பரப்பி வரு​கி​றார்​கள். மக்​கள​வைத் தேர்​தலில் நிறைய செல​வாகி​விட்​ட​தால் கொஞ்​சம் பொருளீட்ட வேண்டி இருக்​கிறது. அதனால் பாதி நேரம் மருத்​து​வத் தொழில், மீதி நேரம் அரசி​யல் என ஓடிக்​கொண்​டிருக்​கிறேன். எடப்​பாடி​யார் பிரச்​சா​ரப் பயணம் வந்​த​போது கூட அவர் கூடவே தான் இருந்​தேன். கே.சி.வீரமணி எங்​கள் தொகு​திக்கு வரும்​போது அவரை​யும் சந்​தித்​துப் பேசி வரு​கிறேன். 2026-ல் அதி​முக வெற்​றிக்​காக நாங்​கள் அனை​வ​ரும் ஒன்​றாக உழைக்​கத் தயா​ராகவே இருக்​கி​றோம்” என்​றார்.

கே.சி.வீரமணி​யிட​மும் பேசினோம். “திருப்​பத்​தூர் மாவட்​டம் மட்​டும் அல்​ல... தமி​ழ​கம் முழுக்​கவே இம்​முறை அதி​முக தான் வெற்​றிப்​பெறும். அதற்​கான வேலை​களை நாங்​கள் தொடங்கி விட்​டோம். தற்​போது நிகழ்ச்சி ஒன்​றில் இருப்​ப​தால் இதற்கு மேல் எது​வும் சொல்​வதற்கு இல்​லை” என்று மட்​டும் சொன்​னார் அவர்.

தனது மாவட்​டத்​தில் தன்​னைப் போல் செல்​வாக்​கான ஒரு​வர் ஜெயித்​து​விட்​டால் அடுத்த கட்ட அரசி​யல் வளர்ச்சி அவரை நோக்​கிப் போய்​விடுமே எனப் பதறு​பவர்​கள், கட்சி தோற்​றுப் போனால் ஆட்சி அதி​காரமே கைக்கு வராதே என்று ஒரு கணம் சிந்தித்தால் எந்தக் கட்சியிலுமே செல்வாக்கான மனிதர்களை செல்லாக்காசாக்க துணிய மாட்டார்கள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x