Published : 01 Sep 2025 09:44 AM
Last Updated : 01 Sep 2025 09:44 AM

2 வாரமாக நீடிக்கும் போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம்!

சென்னை: போக்​கு​வரத்து ஊழியர்​களின் காத்​திருப்பு போ​ராட்​டம் 2 வாரங்​களைத் தாண்டி நீடித்து வரு​கிறது. கோரிக்​கையை நிறைவேற்​று வதற்​கான கால வரையறையை அரசு அறிவிக்​காத வரை போ​ராட்​டம் தொடரும் என சிஐடியு தெரி​வித்​துள்​ளது.

போக்​கு​வரத்​துத் தொழிலா​ளர்​களுக்கு ஊதிய ஒப்​பந்த நிலு​வைத் தொகையை வழங்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, சிஐடியு சார்​பில் மாநிலம் முழு​வதும் கடந்த 18-ம் தேதி காத்​திருப்பு போ​ராட்​டம் தொடங்​கியது. சென்​னை, பல்​ல​வன் சாலை​யில் காத்​திருப்பு போ​ராட்​டத்​தில் பங்​கேற்​றவர்​களை காவல் துறை​யினர் கைது செய்​ததைத் தொடர்ந்​து, சாலை மறியல் உள்​ளிட்ட பல்​வேறு போ​ராட்​டங்​கள் நடை​பெற்​றன. இதன் தொடர்ச்​சி​யாக கோரிக்​கை​களில் ஒன்​றான ஓய்வு பெற்​றவர்​களுக்கு (2024 ஏப்​ரல் வரை) பணப்​பலனும் வழங்​கப்​பட்​டது.

ஆனால், இது​வரை ஓய்வு பெற்ற அனை​வருக்​கும் பணப்​பலன் வழங்​கப்​பட​வில்​லை. எனவே, அனை​வருக்​கும் பணப்​பலன் வழங்​கு​வதற்​கான கால​வரையறையை மட்​டு​மாவது நிர்​ண​யிக்க வேண்​டும் என வலி​யுறுத்​தி, 2 வாரங்​களாகப் போ​ராட்​டம் நீடித்து வரு​கிறது. இதன் தொடர்ச்​சி​யாக நேற்​றும் காத்​திருப்பு போ​ராட்​டம் தொடர்ந்​தது. சென்​னை​யில் அயனாவரம், வடபழனி ஆகிய பணிமனை​களில் நடை​பெற்ற போ​ராட்​டத்​தில் ஏராள​மானோர் பங்​கேற்​றனர்.

இதில் பங்​கேற்ற ஊழியர்​கள் கூறும்​போது, “கடந்த அதி​முக ஆட்​சி​யில் நடந்த அதே தவறு, திமுக ஆட்​சி​யிலும் நடக்​கிறது. மத்​திய அரசு நிதி வழங்​காத​தால் கூட்​டாட்​சித் தத்​து​வம் பாதிக்​கப்​படு​வ​தாக முதல்​வர் கூறுகிறார். ஆனால் அவரே எங்​கள் பணத்தை வைத்​திருக்​கிறார். புதிய ஓய்​வூ​தி​யத் திட்ட மசோதா ஆதர​விலேயே அதி​முக​வும், திமுக​வும் இரட்டை நிலைப்​பாடு எடுத்​திருக்​கின்​றன. எனவே, மாபெரும் போ​ராட்​டங்​கள் மூல​மாகவே போக்​கு​வரத்து ஊழியர்​களின் கோரிக்​கையை வென்​றெடுக்​கமுடி​யும்​” என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x