Published : 01 Sep 2025 08:11 AM
Last Updated : 01 Sep 2025 08:11 AM

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் செப். 3-ம் தேதி குடியரசுத் தலைவர் முர்மு சுவாமி தரிசனம்

திருச்சி: குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு ஸ்ரீரங்​கம் ரங்​க​நாதர் கோயி​லில் வரும் 3-ம் தேதி சுவாமி தரிசனம் செய்​கிறார். இதையொட்​டி,
ஸ்ரீரங்​கம் யாத்ரி நிவாஸ் எதிரே​யுள்ள ஹெலிபேடு தளத்​தில் அதி​காரி​கள் நேற்று ஆய்வு செய்​தனர்.

குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு 2 நாள் பயண​மாக தமிழகத்​துக்கு நாளை (செப்​.2) வரு​கிறார். சென்​னை​யில் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​கும் அவர், நாளை மறு​நாள் (செப். 3) சென்​னை​யில் இருந்து தனி விமானத்​தில் திருச்சி விமான நிலை​யத்​துக்கு காலை 10.55 மணிக்கு வரு​கிறார். அவரை ஆட்​சி​யர் வே.சர​வணன், அமைச்​சர்​கள் உள்​ளிட்​டோர் வரவேற்​கின்​றனர். தொடர்ந்​து, பகல் 12.10 மணி​யள​வில் ஹெலி​காப்​டரில் திரு​வாரூர் சென்​று, தமிழ்​நாடு மத்​திய பல்​கலை. 10-வது பட்​டமளிப்பு விழா​வில் பங்​கேற்​று, மாணவ, மாணவி​களுக்கு பட்​டங்​கள் வழங்​கு​கிறார்.

பின்​னர், திரு​வாரூரில் இருந்து மாலை 4.30-க்கு ஹெலி​காப்​டரில் புறப்​பட்​டு, ஸ்ரீரங்​கம் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்​ளிடம் ஆற்​றின் பஞ்​சக்​கரை​யில் அமைக்​கப்​பட்​டுள்ள ஹெலிபேடு தளத்​துக்கு வரு​கிறார். அங்​கிருந்து காரில் புறப்​பட்டு மாலை 5.20-க்கு ஸ்ரீரங்​கம் ரங்​க​நாதர் கோயிலுக்கு செல்​கிறார். அங்கு சுவாமி தரிசனம் செய்​யும் திர​வுபதி முர்​மு, மாலை 6 மணிக்கு கார் மூலம் திருச்சி விமான நிலை​யம் சென்​றடைகிறார்.

அதே​நேரத்​தில், மாலை 6 மணிக்கு முன்​ன​தாக தரிசனம் முடிந்​தால், ஹெலி​காப்​டர் மூலமே அவர் திருச்சி விமான நிலை​யம் செல்​வார் என்று கூறப்​படு​கிறது. திருச்சி விமான நிலை​யத்​தில் இரவு உணவை முடித்​துக்​கொண்​டு, இரவு 7 மணி​யள​வில் தனி விமானம் மூலம் டெல்​லிக்கு புறப்​பட்​டுச் செல்​கிறார்.

5 அடுக்கு பாதுகாப்பு… குடியரசுத் தலை​வர் வரு​கையை முன்​னிட்டு ரங்​கம் பஞ்​சக்​கரை ஹெலிபேடு தளத்தை தஞ்​சாவூர் ஹெலிபேடு பிரிவு அதி​காரி​கள் நேற்று காலை ஆய்வு செய்​தனர். குடியரசுத் தலை​வர் வரு​கையை முன்​னிட்டு திருச்சி விமான நிலை​யம், ரங்​கம் பஞ்​சக்​கரை, ரங்​க​நாதர் கோயில் மற்​றும் அவர் காரில் செல்​லும் வழிகளில் 5 அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​படும் என்று போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில், குடியரசுத் தலை​வர் வருகை தொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் இன்று (செப்​.1) காலை 10 மணி​யள​வில் திருச்சி விமான நிலை​யத்​தி​லும், பகல் 11 மணிக்கு ரங்​கம் கோயி​லிலும் நடை​பெற உள்​ளன. இந்​தக் கூட்​டங்​களில் ஆட்​சி​யர் வே.சர​வணன், காவல் ஆணை​யர் என்​.​காமினி, மாநக​ராட்சி ஆணை​யர் லி.மது​பாலன் மற்​றும் விமான நிலைய அதி​காரி​கள், அறநிலை​யத் துறை அதி​காரி​கள் உள்​ளிட்​டோர் கலந்​து​கொள்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x