Published : 01 Sep 2025 07:09 AM
Last Updated : 01 Sep 2025 07:09 AM

ஆயத்த ஆடை தொழிலில் ஏற்பட்டுள்ள தொய்வைப் போக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: ஆயத்த ஆடை தொழிலில் ஏற்​பட்​டுள்ள தொய்​வைப் போக்க முதல்​வர் ஸ்டா​லின் ஆக்​கப்​பூர்​வ​மான நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

அமெரிக்க அரசு உயர்த்​தி​யுள்ள இறக்​குமதி வரி​யால் பாதிப்​படைந்​துள்ள திருப்​பூர் பின்​னலாடைத் தொழிலைப் பாது​காக்க நடவடிக்கை எடுங்​கள் என்று பிரதமரை, தமிழக முதல்​வர் ஸ்டா​லின் வலி​யுறுத்​தி​யுள்​ளார். 2021-ல் ஆட்​சிப் பொறுப்​பேற்​றது முதல் தற்​போது வரை ஜவுளி மற்​றும் பின்​னலாடைத் தொழில்​களுக்கு தமிழக அரசு ஏற்​படுத்​திய இடையூறுகள், பிரச்​சினை​கள் ஏராளம். அதனால், அந்​தத் தொழில்​கள் ஏற்​கெனவே நலிவடைந்​துள்​ளது என்​பதே உண்​மை.

நான்கு முறை வெளி​நாட்டு சுற்​றுப் பயணம் மேற்​கொண்​டும், கோவை மற்​றும் திருப்​பூர் மாவட்​டங்​களில் இயங்​கும் ஜவுளித் தொழிலுக்கு எந்த வெளி​நாட்டு முதலீடு​களை​யும் ஈர்க்​க​வில்​லை. உள்​நாட்டு முதலீடு​களும் மத்​திய பிரதேசம் போன்ற மாநிலங்​களுக்கு செல்​கின்​றன.

கழி​வுப் பஞ்​சில் இருந்து தயாரிக்​கப்​படும் நூலிழைகளைப் பயன்​படுத்தி காடா துணி, கலர் நூல்​களில் போர்​வை, மெத்தை விரிப்பு போன்​றவற்றை உற்​பத்தி செய்யும் ஓபன் எண்ட் ஸ்பின்​னிங் மில்​கள், உற்​பத்தி நிறுத்​தப் போராட்​டங்​களை நடத்​தின. இவர்​களின் கோரிக்​கைகளை இந்த அரசு கண்​டு​கொள்​ளவே இல்​லை.

திமுக ஆட்​சி​யில் தமிழகம் பாழடைந்​ததை மறைக்க, எதற்​கெடுத்​தா​லும் மத்​திய அரசின் மீது ஸ்டா​லின் பழி​போடு​கிறார். அமெரிக்​கா​வின் தற்​போதைய கூடு​தல் வரி விதிப்​பால், நம் நாட்​டில் பின்​னலாடை மற்​றும் ஆயத்த ஆடைகள் ஏற்​றும​தி​யாளர்​களுக்கு எந்த இடையூறும் ஏற்​ப​டாத வகை​யில், மற்ற நாடு​களுக்கு ஏற்​றும​தியை ஊக்​குவிக்க நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும் என்று பிரதமருக்​கு, அதி​முக சார்​பில் நான் கடிதம் எழு​தி​யுள்​ளேன்.

அதில், உள்​ளூர் உற்​பத்​தி​யாளர்​களுக்கு உடனடி நிவாரண நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வலி​யுறுத்​தி​யும், தொழில் துறைக்கு நிவாரணம் அளிக்​க​வும், கடன் மற்​றும் வட்​டியை 6 மாதங்​களுக்கு நிறுத்​திவைக்​க​வும், வட்​டியை தள்​ளு​படி செய்​ய​வும் நடவடிக்கை எடுத்​து, தொழிலா​ளர்​கள் வேலை​யிழப்​பைத் தடுக்க நடவடிக்கை எடுக்​கு​மாறு கேட்​டுக்​கொண்​டுள்​ளேன்.

அமெரிக்​கா​வில் இந்​தி​யப் பொருட்​களை இறக்​குமதி செய்​பவர்​கள், கூடு​தல் வரி செலுத்த வேண்​டும். இதனால் இந்​திய பின்​னலாடை அமெரிக்க சந்​தை​யில், பிற​நாட்டு ஜவுளிப் பொருட்​களு​டன் போட்​டி​யிட முடி​யாமல் விற்​
பனை குறை​யும். எனினும், தமிழகத்​தில் பின்​னலாடை மற்​றும் ஆயத்த ஆடை தங்கு தடை​யின்றி உற்​பத்தி செய்​தால்​தான், பிற நாடு​களுக்​கும் ஏற்​றுமதி செய்ய முடி​யும். நமது நாட்​டுக்​கும் அந்​நியச் செலா​வணி கிடைக்​கும்.

ஆயத்த ஆடை தொழிலில் ஏற்​பட்​டுள்ள தொய்​வைப் போக்க தமிழக அரசு உடனடி​யாக ஆக்​கப்​பூர்​வ​மான நடவடிக்கை எடுக்க வேண்​டும்​. இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x