Published : 31 Aug 2025 10:24 AM
Last Updated : 31 Aug 2025 10:24 AM

பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் இன்று பதவியேற்பு

சென்னை: தமிழக காவல்​துறை​யின் சட்​டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி​யாக வெங்​கட​ராமன் இன்று பதவி​யேற்​கிறார்.

தமிழக டிஜிபி​யாக இருந்த சங்​கர் ஜிவால் இன்​றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து பணி மூப்பு அடிப்​படை​யில் தற்​போது டிஜிபிக்​களாக உள்ள சீமா அகர்​வால், ராஜீவ்கு​மார், சந்​தீப் ராய் ரத்​தோர் ஆகிய 3 பேரில் ஒரு​வர் டிஜிபி​யாக வரலாம் என்ற எதிர்​பார்ப்பு எழுந்தது.

இந்​நிலை​யில் இந்த விவ​காரத்​தில் திடீர் திருப்​ப​மாக பொறுப்பு டிஜிபி​யாக தற்​போது நிர்​வாக பிரி​வில் உள்ள வெங்​கட​ராமனை தமிழக அரசு நியமிக்க முடிவு செய்​தது. அதன்​படி இன்று மதி​யம் சங்​கர் ஜிவால் முறைப்​படி பணி ஓய்வு பெற்று அந்த பொறுப்பு வெங்​கட​ராமனிடம் ஒப்​படைக்​கப்பட​வுள்​ளது. இதற்​கான உத்​தரவை தமிழக அரசு பிறப்​பிக்​கும்.

வெங்​கட​ராமன் நாகப்​பட்டினம் மாவட்​டத்தைச் சேர்ந்​தவர். 1968-ல் பிறந்த இவர், 1994-ல் ஐபிஎஸ் ஆக தேர்​வாகி தமிழகத்தில் பல்​வேறு மாவட்​டங்​களில் பணி​யாற்​றி​னார். குறிப்​பாக முக்​கி​யம் வாய்ந்த சிபிசிஐடி தலை​மை​யிடம் மற்​றும் நிர்​வாக பிரிவி​களில் பணி​யாற்றி அரசின்​ பா​ராட்​டை பெற்​றவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x