Published : 31 Aug 2025 09:57 AM
Last Updated : 31 Aug 2025 09:57 AM

நாதக ஆட்சிக்கு வந்தால் மரத்தை வெட்டினால் 6 மாதம் சிறை தண்டனை: சீமான் கருத்து

திருத்தணி: திருத்​தணி அருகே நாம் தமிழர் கட்​சி​யின் சார்​பில் மரங்​களின் மாநாடு நடை​பெற்​றது. நான் ஆட்​சிக்கு வந்​தால் மரத்தை வெட்​டி​னால் ஆறு மாதம் சிறை தண்​டனை விதிக்​கப்​படும் என அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தெரி​வித்​தார்.

சுற்​றுச்​சூழலை பாது​காக்​கும் வகை​யில் நாம் தமிழர் கட்சி சார்​பில் மரங்​கள் தினத்தை கொண்​டாட ஏற்​பாடு செய்​யப்​பட்​டது. திருத்​தணி அருகே அருங்​குளம் பகு​தி​யில் உள்ள மனிதநேய தோட்​டத்​தில் மரங்​களுக்கு இடை​யில் மரங்​களின் மாநாடு எனும் தலைப்​பில் நேற்று நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில் 500-க்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​றனர். அவர்​களுக்கு மரக்​கன்​றுகள் வழங்​கப்​பட்​டன. இம்​மா​நாட்​டில் திரு​வள்​ளூர், திருத்​தணி தொகு​தி​யில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களை சீமான் அறி​வித்​தார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: இது மரங்​களுக்​கான மாநாடு என்று சொல்​வதை விட உயிர் காற்றை தரு​கிற தாய்க்கு நன்றி சொல்​லும் மாநாடு என்​று​தான் கூற வேண்​டும். இந்த காட்​டில் புலிகள் நுழைந்​ததும், ஒரு அணில் கூட கண்​ணில்​பட​வில்​லை, அணில்​களுக்​கும் சேர்த்து தான் காடு வளர்க்க நாங்​கள் போராடு​கிறோம். வாக்​குக்​காக இருப்​பவர்​கள் இது​போன்ற மாநாட்டை நடத்​த​மாட்​டார்​கள்.

தூய காற்​றுக்கு ரூ.4,500 கோடி: காடு​களை அழித்து விரை​வாகச் செல்ல சாலை அமைத்த அரசுகள், தூய காற்​றுக்கு ரூ.4,500 கோடி ஒதுக்​கி​யுள்​ளனர். மரம் நடு​வோம் மழை பெறு​வோம் என்று சொல்​வார்​கள் ஆனால் எது​வும் செய்ய மாட்​டார்​கள். ஒரு மரம் கூட நடமாட்​டார்​கள். நாம் மரம் வளர்க்க வேண்​டும் அதை எப்​படி பராமரிக்க வேண்​டும் என்று யோசிப்​போம். நான் ஆட்​சிக்கு வந்​தால் மனிதனை வெட்​டி​னால் தண்​டனை என்​பது​போல மரத்தை வெட்​டி​னால் ஆறு மாதம் சிறை தண்​டனை வி​திக்​கப்​படும். மனிதனின் பேராசை என்ற பெரும் தீ தான் மரங்​களை எரிக்​கிறது. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x