Published : 31 Aug 2025 09:36 AM
Last Updated : 31 Aug 2025 09:36 AM

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்: இபிஎஸ், நயினார் நாகேந்திரன் விமர்சனம்

சென்னை: முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளதை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் ஆகியோர் விமர்சித்துள்ளனர்.

பழனிசாமி: உண்​மை​யிலேயே ஸ்டா​லின் தமிழகத்​துக்கு முதலீடு​களை ஈர்க்​கச் செல்​கிறாரா அல்​லது முதலீடு செய்​வதற்கு செல்​கிறாரா என்று மக்​கள் கேள்வி எழுப்​பு​கின்​றனர். 2021 முதல் 922 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் போட்​டுள்​ள​தாக கூறுகின்​றனர். இவற்​றில் பெரும்​பாலானவை அதி​முக ஆட்​சி​யில் போடப்​பட்டதன் தொடர்ச்​சி​யே.

நான் முதல்​வ​ராக இருந்​த​போது, கையொப்​பமிட்ட புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​களின் எண்​ணிக்கை 41. இதன்மூலம் தொழில் முதலீடு​களை ஈர்த்​தது மட்​டுமல்ல, அங்​குள்ள கால்​நடைப் பண்ணை மற்​றும் கால்​நடை வளர்ப்பு உள்​ளிட்​ட​வற்றை நேரடி​யாகப் பார்​வை​யிட்​டு, அது​போன்ற கால்​நடை ஆராய்ச்சி நிலை​யத்தை சேலம் மாவட்​டம், தலை​வாசலில் ரூ.1,100 கோடி​யில் உரு​வாக்​கினேன். அதை அழிக்​கும் முயற்​சி​யில் ஸ்டா​லின் ஈடு​பட்டு வரு​கிறார்.

தற்போது 5-ம் முறை​யாக ஜெர்​மனி மற்​றும் இங்​கிலாந்து நாடு​களுக்கு சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்ள ஸ்டா​லின், கடந்த சுற்​றுப் பயணங்​களின்​போது வெளி​நாட்​டில் சைக்​கிள் ஓட்டி பொன்​னான நேரத்தை வீணடித்​தது​போல இல்​லாமல், இந்த முறை தமிழகத்​துக்கு தேவை​யான முதலீட்டை ஈர்க்க வேண்​டும்​.

நயி​னார் நாகேந்​திரன்: முதல்​வர் மு.க.ஸ்​டா​லினின் ஐரோப்​பிய பயணத்​துக்கு வாழ்த்​துகள். தமிழகத்​தின் முதலீடு​களை அதி​கரிக்​கும் எந்த முயற்​சி​யை​யும் தமிழக பாஜக சார்​பாக முழு மனதுடன் வரவேற்​கத் தயா​ராக உள்​ளோம். ஆனால், ஆட்​சிப் பொறுப்​பேற்​றது முதல், முதலீடு​களை ஈர்ப்​ப​தாகக் கூறி ஒவ்​வொரு ஆண்​டும் பல வெளி​நாடு​களுக்​குப் பயணம் மேற்​கொண்ட முதல்​வர், தனது பயணத்​தின் பலன் என்ன என்​ப​தை​யும், ஈர்க்​கப்​பட்ட முதலீடு​களுக்​கான வெள்ளை அறிக்​கை​யை​யும் வெளி​யி​டா​மல் இருப்​பது மக்​களை குழப்​பமடையச் செய்​துள்​ளது.

உத்​தரப்​பிரதேசத்​தின் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத், இருக்​கும் இடத்​தில் இருந்து கொண்டே சுமார் ரூ.7.12 லட்​சம் கோடி முதலீடு​களை ஈர்த்​துள்​ளார். மகா​ராஷ்டிரா முதல்​வர் தேவேந்​திர பட்​நா​விஸ், டாவோஸ் பயணத்​தில் ரூ.15 லட்​சம் கோடி மதிப்​பிலான முதலீடு​களைக் குவித்​துள்​ளார்.

ஆனால், தமிழகத்​தின் முதலீட்​டுக் கதையோ கற்​பனை​யாகவே இன்​றள​வும் நீள்​கிறது. கடந்த 2022-ல் துபாய் பயணத்​தின்​போது ரூ.6,100 கோடி மதிப்​பிலான உடன்​படிக்​கைகள் கையெழுத்​தா​யின என தமிழக அரசு கூறியது. 3 ஆண்​டு​கள் கடந்​தும், அவை எது​வும் நடை​முறைக்கு வரவில்​லை.

ஊழல், லஞ்​சம், முறை​கேடு ஆகிய​வற்​றால் துருப்​பிடித்​துக் கிடக்​கும் அரசு இயந்​திரத்​தைப் பழுது பார்த்​தாலே, முதலீடுகள் வரும். வெளி​நாடு​களுக்கு சென்று முதலீடு​களை ஈர்ப்​ப​தாக வெற்று விளம்​பரங்​களில் மக்​கள் வரிப்​பணம் வீணடிக்​கப்​படு​கிறது. இவ்​வாறு அவர்கள்​ கூறியுள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x