Published : 31 Aug 2025 09:22 AM
Last Updated : 31 Aug 2025 09:22 AM

அமெரிக்க வரிவிதிப்பு நெருக்கடி: தொழில்களை பாதுகாக்க நிவாரணம் வழங்கும் கொள்கைகளை உருவாக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

சென்னை: அமெரிக்கா விதித்​துள்ள 50 சதவீத வரி​யால் ஏற்​பட்​டுள்ள நெருக்​கடி​யில் இருந்து ஏற்​றுமதி சார்ந்த தொழில்​களை பாது​காப்​பதுடன் பாதிக்​கப்​பட்ட துறை​களுக்கு உடனடி நிவாரணம் வழங்​கும் புதிய கொள்​கைகளை உரு​வாக்க வேண்​டும் என்று மத்​திய அரசுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை: அமெரிக்​கா​வின் 50 சதவீத வரி விதிப்​பால் இந்​தி​யா​வின் ஏற்​றுமதி சார்ந்த தொழில்​கள் பெரும் அச்​சத்​தில் சிக்​கி​யுள்​ளன. கடந்த நிதி​யாண்​டில், தமிழக பொருட்​கள் 31 சதவீதம் அமெரிக்கா​வுக்கே ஏற்​றுமதி செய்​யப்​பட்​டன. இந்த கடின சூழலில் மத்​திய அரசின் பதில் நடவடிக்​கைகள் போது​மான​தாக இல்​லை. மத்​திய அரசு தன் பங்கை உணர்ந்​து, குறிப்​பாக துணிநூல் துறைக்கு முக்​கி​யத்​து​வம் கொடுத்​து, இந்​தி​யா​வின் ஏற்​றும​தித் துறை​களைப் பாது​காக்க ஒற்​றுமை​யான கொள்கை வடிவ​மைப்பை முன்​வைக்க வேண்​டும்.

தமிழ்​நாடு வழி​காட்டி நிறு​வனம் நடத்​திய பகுப்​பாய்​வுப்​படி, அமெரிக்​கா​வின் 50 சதவீத சுங்​கவரி விதிப்​பால் மாநிலத்​தின் கணிக்​கப்​பட்ட இழப்பு 3.93 பில்​லியன் டால​ராக இருக்​கும். அதி​கம் பாதிக்​கப்​படு​பவை துணிநூல், இயந்​திரங்​கள், வைரம் மற்​றும் நகைகள், வாகன உதிரி பாகங்​கள் தொழில் துறை​களே. இந்​தத் துறை​களில் வேலை இழப்பு 36 சதவீதம் வரை உயரும் என அஞ்​சப்​படு​கிறது. துணிநூல் துறை​யின் சாத்​தி​ய​மான இழப்பு 1.62 பில்​லியன் டாலர் வரை இருக்​கும்.

கடந்த ஆக.16-ல் உடனடி உதவி கோரி பிரதமருக்​குக் கடிதம் எழு​தி​யிருந்​தேன். அதில், சிறப்பு நிவாரணத் திட்​டம், தலைகீழ் சுங்​க வரி அமைப்​பைத் திருத்​துதல், 30 சதவீதம் வரை அடமானமற்ற கடன்​கள் வட்டி மானி​யத்​துடன் வழங்க வேண்​டும் என்​பது உள்​ளிட்ட கோரிக்​கையை முன்​வைத்​தேன்.

ஐரோப்​பிய ஒன்​றி​யம், இங்​கிலாந்து, ஆப்​பிரிக்கா ஆகிய​வற்​றுட​னும் உறவு​களை ஆழப்​படுத்த வேண்​டும் என பிரதமரை வலி​யுறுத்​தினேன். இதன் பயனாக, பருத்தி இறக்​கும​தி​யில் 11 சதவீத சுங்​கவரியை டிச.31 வரை நிறுத்​திய மத்​திய அரசின் முடிவை நான் பாராட்​டு​கிறேன். அமெரிக்கா உயர்த்​தி​யுள்ள சுங்​கவரி​கள் நீக்​கப்​பட​வில்​லை​யெனில் அல்​லது பிற சலுகைகளால் சமன்​படுத்​தப்​பட​வில்லை என்​றால், இந்த நிவாரணம் தற்​காலிக​மான​தாகவே இருக்​கும்.

ஆனால், தமிழகம் வெளிப்​புற உதவி​களுக்​காக காத்​திருக்​க​வில்​லை. எங்​கள் அரசு அண்​மை​யில் புதிய துணிநூல் சாயம் தோய்த்​தல் அலகு​கள் தொடர்​பான மூலதன முதலீட்டு மானி​யத்தை அறி​வித்​துள்​ளது. 2023-ல், நாங்​கள் தொழில்​நுட்​பத் துணிநூல்​களுக்​கான சிறப்​புத் திட்​டத்தை அறி​முகப்​படுத்​தினோம். செயற்கை நூலிழை உற்​பத்​தியை ஊக்​கு​வித்​தோம்.

இதைத் தொடர்ந்​து, தொழில்​நுட்ப துணிநூல் துறை​யில் தொழில்​கள் நுழைய 2025-ல் தமிழ்​நாடு தொழில்​நுட்​பத் துணிநூல் மிஷன் தொடங்​கப்​பட் டது. சுகா​தா​ரம் முதல் உள்​கட்​டமைப்பு வரை பல துறை​களில் பயன்​படுத்​தப்​படும் தொழில்​நுட்​பத் துணி நூல்​கள், ஒரு புதிய வாய்ப்​பாகக் கருதப்​படு​கின்​றன. சர்​வ​தேச பேச்​சு​வார்த்​தை, சுங்​கவரிக் கொள்​கை, பொருளா​தார ஆதரவு போன்ற துறை​களில் மத்​திய அரசின் முன்​முயற்​சிகளும் ஆதர​வும் இன்​றியமை​யாதவை.

தமிழகம் தனது ஏற்​றும​தி​களைப் பாது​காக்​க​வும், தனது தொழிலா​ளர்​களை வேலை இழப்​பிலிருந்து காப்​பாற்​ற​வும் மத்​திய அரசுடன் இணைந்து பணி​யாற்​றத் தயா​ராக உள்​ளது. மத்​திய அரசு தீவிர​மாக​வும் ஒத்​துழைப்​புட​னும் செயல்படும் என நம்​பு​கிறேன்.

பாதிப்​பு​களின் விளைவு​களைக் கரு​தி, நெருக்​கடி​யான இந்த நேரத்​தில் மத்​திய அரசு விரைந்து செயல்​பட்​டு, பா​திக்​கப்​பட்ட துறை​களுக்கு உடனடி நிவாரணம் வழங்​கும் புதிய கொள்​கைகளை உரு​வாக்​க வேண்​டும்​. இவ்​வாறு முதல்​வர்​ வேண்​டு​கோள்​ விடுத்​துள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x