Published : 31 Aug 2025 09:02 AM
Last Updated : 31 Aug 2025 09:02 AM

தமிழகத்தில் நாளை முதல் காலி மது பாட்டில்களை திரும்பப் பெற உத்தரவு: டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோப்புப்படம்

சிவகங்கை: தமிழகத்​தில் நாளை (செப். 1) முதல் காலி மது பாட்​டில்​களை வாங்க உத்​தர​விட்​டதற்கு எதிர்ப்பு தெரி​வித்​து, சிவகங்கை உட்பட மாநிலம் முழு​வதும் பல்​வேறு இடங்​களில் டாஸ்​மாக் தொழிலா​ளர் சங்​கங்​களின் கூட்​டமைப்​பினர் ஆர்ப்​பாட்​டம் செய்​தனர்.

சிவகங்கை அரண்​மனை​வாசலில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​துக்​கு, டாஸ்​மாக் ஊழியர் சங்க (சிஐடி​யு) மாவட்​டத் தலை​வர் குமார் தலைமை வகித்தார்.

இதில், டாஸ்​மாக் ஊழியர் சம்​மேளன மாநிலத் தலை​வர் முரு​கன் பேசி​ய​தாவது: செப். 1-ம் தேதி முதல் காலி மது பாட்​டில்​களை திரும்​பப் பெற வேண்​டுமென அதி​காரி​கள் வற்​புறுத்​துகின்​றனர். ஆனால், பெரும்​பாலான கடைகள் 10 அடி நீளம், 10 அடி அகலம் கொண்​ட​வை​யாக உள்​ளன. அவற்​றில் மது​பாட்​டில்​களை வைக்​கவே போதிய இடமில்​லாத நிலை​யில், காலி மது​பாட்​டில்​களை எங்கே வைப்​பது.

மேலும், பாட்​டில்​கள் உடைந்​து​ விட்​டால் அதற்கு ஊழியர்​கள் பணம் செலுத்த வேண்​டும். ஏற்​கெனவே மேலாண்மை இயக்​குநர் தலை​மை​யில் குழு அமைத்​து, ஊழியர்​களின் குறை​களை கேட்​டறிந்த பின்​னரே காலி பாட்​டில்​களை வாங்க நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

ஆனால், எங்​களிடம் எந்த குறை​யும் கேட்​க​வில்​லை. மேலும், காலி பாட்​டில்​களை வாங்​கிக்​கொண்​டு, ரூ.10 கொடுக்​கச் சொல்​கின்​றனர். விற்​பனை நடந்​து​கொண்​டிருக்​கும்​போது அதை செயல்​படுத்​து​வ​தில் சாத்​தி​யமில்​லை. இதனால், காலி பாட்​டில்​களை வேறு விதங்​களில் திரும்​பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

மாற்று வழி அவசியம்: பார்​களி​லிருந்து சேகரித்து வழங்​கப்​படும் பாட்​டில்​களுக்கு உடனே பணமாக திரும்ப வழங்​க​வும் அனு​ம​தி​யில்​லை. பல குழப்​பங்​களு​டன் இத்​திட்​டத்தை செயல்​படுத்த அரசு வேகம் காட்டி வருவ​தால் சிக்​கல் அதிகரிக்​கவே செய்​யும். தொழிலா​ளர்​கள் மனதள​வில் கடும் பாதிப்​புக்​குள்​ளாவர். எனவே, காலி பாட்​டிங்​கள் கொள்​முதல் செய்ய மாற்று வழியை பின்​பற்ற வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x