Published : 31 Aug 2025 08:55 AM
Last Updated : 31 Aug 2025 08:55 AM

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? - வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா விளக்கம்

திருச்சி: திருச்​சி​யில் ஏற்​கெனவே 2 இடங்​களில் டி-​மார்ட் கார்ப்​பரேட் நிறு​வனக் கிளை​கள் இயங்கி வரும் நிலை​யில், வயலூர் சாலை​யில் 3-வது கிளை அமைக்​கும் பணி தொடங்​கி​யுள்​ளது.

சில்​லறை வணி​கத்தை அச்​சுறுத்​தும் கார்ப்​பரேட் நிறு​வனங்​களை கண்​டித்​து, டி-​மார்ட் கிளை அமைய உள்ள வயலூர் சாலை வாசன் வேலி பகு​தி​யில் தமிழ்​நாடு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்பு சார்​பில் நேற்று முற்​றுகைப் போராட்​டம் நடை​பெற்​றது. அமைப்​பின் மாநிலத் தலை​வர் விக்​கிரம​ராஜா தலைமை வகித்​தார். பொதுச் செய​லா​ளர் கோவிந்​த​ராஜுலு மற்​றும் நிர்​வாகி​கள், வணி​கர்​கள் உட்பட ஏராள​மானோர் பங்​கேற்​றனர்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் விக்​கிரம​ராஜா கூறிய​தாவது: தமிழக முதல்​வர் வெளி​நாட்டு சுற்​றுப்​பயணத்தை முடித்​து​விட்டு திரும்​பிய பிறகு, அவரை சந்​தித்து டி-​மார்ட் நிறு​வனத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கு​மாறு கோரிக்கை விடுப்​போம். அதன் பின்​னர் பலகட்ட போராட்​டங்​கள் நடத்​தப்​பட்டு, தமிழகம் முழு​வதும் ஒட்​டுமொத்த கடைகளை​யும் மூடக்​கூடிய நிலையை ஏற்​படுத்​து​வோம்.

முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா ஆட்​சி​யின்​போது, வால்​மார்ட் கட்​டிடத்​துக்கு சீல் வைத்​து, எங்​களின் வாழ்​வா​தா​ரத்தை காப்​பாற்​றி​னார். சாதாரண வணி​கர்​களின் நலன் காக்க, வணி​கர் நல வாரி​யத்தை முன்​னாள் முதல்​வர் கருணாநிதி உரு​வாக்கி தந்​தார்.

எனவே, தமிழக முதல்​வர் ஸ்டா​லினும், வியா​பாரி​களைப் பாது​பாது​காக்க நடவடிக்கை எடுப்​பார் என்ற நம்​பிக்கை உள்​ளது. இந்​தப் போராட்​டம் வெற்றி பெற​வில்லை என்​றால், எதிர்க்​கட்​சித் தலை​வர் உட்பட அனைத்து அரசி​யல் கட்​சித் தலை​வர்​களை​யும் சந்​தித்​து, ஆதரவு கேட்க முடிவு செய்​துள்​ளோம்.

தொடர்ந்​து, 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் யாருக்கு ஆதரவளிப்​பது என்​பது தொடர்​பாக நிர்​வாகக் குழுக் கூட்​டத்​தில் முடி​வெடுப்​போம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x