Published : 30 Aug 2025 06:38 AM
Last Updated : 30 Aug 2025 06:38 AM

விசாரணை நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை துரிதப்படுத்த வலியுறுத்தல்

சென்னை: தமிழகம் முழு​வதும் விசா​ரணை நீதி​மன்​றங்​களில் நீண்​ட​கால​மாக நிலு​வை​யில் உள்ள குற்ற வழக்​கு​களின் விசாரணையை துரிதப்​படுத்​த​வும், பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்ற வழக்​கு​களில் தனி கவனம் செலுத்​த​வும் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என தமிழ்​நாடு பணிவரன்​முறை அரசு வழக்​கறிஞர்​கள் சங்க நிர்​வாகி​களிடம், அமைச்​சர் எஸ்​.ரகுபதி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

புதிய குற்​ற​வியல் நடை​முறை சட்​ட​மான பிஎன்​எஸ்​எஸ் 2023-ல் நடை​முறைக்கு வந்​த​பிறகு கடந்த 3 மாதங்​களாக காலி​யாக இருந்த தமிழ்​நாடு குற்ற வழக்கு தொடர்​(வு)த் துறை​யின் இணை இயக்​குநர் பதவிக்கு தமிழக அரசால் நியமிக்​கப்​பட்ட ஆர்​.சேகர்​ துரை பொறுப்​பேற்​றுக் கொண்​டார்.

டிஎன்​பிஎஸ்சி மூல​மாக 1996-ம் ஆண்டு உதவி அரசு வழக்​கறிஞ​ராக பணி​யில் சேர்ந்​து, பல்​வேறு சட்​டம் சார்ந்த நிலைகளில் பணிபுரிந்த அவரை தற்​போது தமிழக அரசு இத்​துறை​யின் இணை இயக்​குந​ராக நியமித்​துள்​ளது. இந்​நிலை​யில், இணை இயக்​குநர் சேகர்​துரை​யின் நியமனத்​துக்​கும், குற்ற வழக்கு தொடர்​(வு)த் துறையை மேம்​படுத்​தும் வகை​யில் தமிழக அரசு 40 புதிய உதவி அரசு வழக்​கறிஞர்​கள் பணி​யிடங்​களை உரு​வாக்​கியதற்​கும், நீண்​ட​கால​மாக வழங்​கப்​ப​டா​மல் நிலு​வை​யில் இருந்த பதவி உயர்வை வழங்​கியதற்​கும் நன்றி தெரிவிக்​கும் வகை​யில் டிஎன்​பிஎஸ்சி மூல​மாக குற்​ற​வியல் நீதி​மன்​றங்​களில் அரசு வழக்​கறிஞர்​களாக பணி​யாற்றி வரும் தமிழ்​நாடு பணிவரன்​முறை அரசு வழக்​கறிஞர்​கள் சங்​கம் சார்​பி்ல் சங்​கத் தலை​வர் ஐடன் ஐசன், செய​லா​ளர் சி.​ராம​சாமி, பொருளாளர் எஸ்​.நந்​தகு​மார், துணைத் தலை​வர்​கள் எஸ்​.ஜூட் ஆஞ்​சலோ, ஜெப ஜீவ​ராஜா, இணைச்​செய​லா​ளர்​கள் சி.கண்​ணன், கே. ஜெய​கார்த்​தி​கா, ஏ.மோகன் உள்​ளிட்​டோர், சட்​டத் துறை அமைச்​ச​ரான எஸ்.ரகுப​தியை சந்​தித்​து, அவருக்​கும், முதல்​வருக்​கும் நன்றி தெரி​வித்​தனர்.

அப்​போது விசா​ரணை நீதி​மன்​றங்​களில் நீண்​ட​கால​மாக நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களின் விசா​ரணை​யைத் துரிதப்​படுத்​த​வும், பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்ற வழக்​கு​களில் தனி கவனம் செலுத்​த​வும், தண்​டனை சதவீதத்தை அதி​கரிக்​க​வும், குற்​ற​வியல் அரசு வழக்​கறிஞர்​களின் பணித்​திறன் மீது கவனம் செலுத்​த​வும் உரிய நடவடிக்கை எடுக்​கு​மாறு சங்க நிர்​வாகி​களிட​மும், புதி​தாக நியமிக்​கப்​பட்​டுள்ள இணை இயக்​குநரிட​மும் அமைச்​சர் வலி​யுறுத்​தி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x