Published : 30 Aug 2025 06:00 AM
Last Updated : 30 Aug 2025 06:00 AM

கடலில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் மீனவர்களை காப்பாற்ற கடல் ஆம்புலன்ஸ் அவசியம்: சவுமியா சுவாமிநாதன்

சென்னை: கடலில் மீன் பிடிக்​கச் செல்​லும்​போது உடல்​நலக்​குறை​வால் பாதிக்​கப்​படும் மீனவர்​களைக் காப்​பாற்ற கடல் ஆம்​புலன்ஸ் சேவையை ஏற்​படுத்த வேண்​டும் என்று எம்​. எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறுவன தலை​வர் சவுமியா சுவாமி​நாதன் தெரி​வித்​துள்​ளார். இந்​திய கடலோரப் பகு​தி​களுக்​கான பல்​வகை ஆபத்து சேவை​கள் குறித்த கருத்​தரங்​கம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறுவன தலை​வர் சவுமியா சுவாமி​நாதன் பங்​கேற்று பேசி​ய​தாவது: மீனவர்​கள் நலன் காக்க எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறு​வனம் சார்​பில் 'மீனவ நண்​பன்' என்ற ஸ்மார்ட் போன் செயலியை உரு​வாக்கி இருக்​கிறோம். அதில் வானிலை நில​வரம், காற்று வீசும் திசை, வேகம், மீன்​கள் அதி​க​மாக இருக்​கும் இடங்​கள் போன்ற தகவல்​களை வழங்கி வரு​கிறோம்.

மீனவர்​கள் ஆழ்​கடலில் மீன் பிடிக்​கும்​போது, மாரடைப்பு போன்ற பல்​வேறு உடல்​நலக்​குறைவு ஏற்​படு​கிறது. அப்​போது அவர்​களைக் காப்​பாற்ற முடி​யாமல் உயி​ரிழப்பு நேரிடு​கிறது. நிலப் பகு​தி​களில் அரசு சார்​பில் ஆம்​புலன்ஸ் சேவை உள்​ளது. அதே​போல், கடல் ஆம்​புலன்ஸ் சேவையை அவசி​யம் ஏற்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்​பினர் லெப்​டினென்ட் ஜெனரல் சையது அடா ஹஸ்​ன​யின் பேசும்போது, ‘‘பேரிடர் தொடர்​பான முன்​னெச்​சரிக்​கைகளை வழங்க ‘SACHAT’ என்ற செயலி பயன்​பாட்​டில் உள்​ளது. இது ஸ்மார்ட் போனை சைலன்ட் மோடில் வைத்​திருந்​தா​லும், முன்​னெச்​சரிக்கை தகவல் வரும்​போது, அபாய ஒலியை எழுப்​பும்’’ என்றார்.

‘இன்​காய்​ஸ்’ நிறுவன இயக்​குநர் பால​கிருஷ்ண நாயர் பேசும்​போது, ‘‘இந்​நிறு​வனம், வானிலை ஆய்வு மையத்​துடன் இணைந்து சுனாமி, ராட்சத கடல் அலை தொடர்​பான முன்​னெச்​சரிக்​கைகளை வழங்கி வரு​கிறது. அந்​த​மான் பகு​தி​யில் கடலுக்​கடி​யில் 270 கிமீ ஆழத்​தில் கேபிளை பதித்​து, நிலநடுக்​கம், சுனாமி போன்ற முன்​னெச்​சரிக்கை தகவல்​களை உடனுக்​குடன் பெற முடிகிறது.

முன்​னெச்​சரிக்கை தகவல்​களை மேலும் வலுப்படுத்த, பல்​வேறு துறை​யினரை ஒருங்​கிணைத்து வரு​கிறோம்” என்​றார். மத்​திய அரசின் பத்​திரிகை தகவல் பணியக தென் மண்​டலத் தலை​வர் பழனி​சாமி, என்​ஐஓடி இயக்​குநர்​ பாலாஜி ராமகிருஷ்ணன்​ உள்​ளிட்​டோர்​ இந்​நிகழ்​வில்​ கலந்​து கொண்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x