Published : 30 Aug 2025 07:29 AM
Last Updated : 30 Aug 2025 07:29 AM

வைகை ஆற்றில் மிதந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள்: நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி

திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்து வந்த மனுக்களை மீட்ட இளைஞர்கள்.

சிவகங்கை: ​திருப்​புவனம் வைகை ஆற்​றில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாமில் பெறப்​பட்ட மனுக்​கள் மிதந்து வந்​த​தால், பொது​மக்​கள் அதிர்ச்சி அடைந்​தனர். இதில் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்​சி​யர் கா.பொற்​கொடி தெரி​வித்​துள்​ளார்.

தமிழகம் முழு​வதும் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்த முகாம்​களில் பெறப்​படும் மனுக்​களுக்கு அதி​கபட்​சம் 45 நாட்​களுக்​குள் தீர்வு காணப்​படும் என்று முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​திருந்​தார். அதன்​படி, சிவகங்கை மாவட்​டத்​தில் தின​மும் 6 முகாம்​கள் என்ற வகை​யில், வாரத்​துக்கு 4 நாட்​கள் முகாம்​கள் நடத்​தப்​படு​கின்​றன.

திருப்​புவனம் வட்​டத்​துக்கு உட்​பட்ட திருப்​புவனம் பேரூ​ராட்சி மற்​றும் பூவந்​தி, கீழடி, கொந்​தகை, நெல்​முடிக்​கரை, மடப்​புரம் உள்​ளிட்ட கிராமங்​களில் நடை​பெற்ற முகாம்​களில் ஆயிரக்​கணக்​கானோர் மனுக்​கள் அளித்​திருந்​தனர். இந்​நிலை​யில், நேற்று காலை திருப்​புவனம் வைகை ஆற்​றில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம்​களில் பெறப்​பட்ட மனுக்​கள் மிதந்​தன. இதைப் பார்த்த அப்​பகு​தி​யைச் சேர்ந்த கார்த்​திக் என்​பவர், வரு​வாய்த் துறை அதி​காரி​களுக்கு தகவல் தெரி​வித்​தார்.

அங்கு சென்ற அதி​காரி​கள், அந்த மனுக்​களை மீட்​டனர். இம்​மனுக்​கள், கிராம நிர்​வாக அலு​வலர், வரு​வாய் ஆய்​வாளர் உள்​ளிட்ட அதி​காரி​களின் கையெழுத்​திட்ட அசல் மனுக்​களாக இருந்​தன. இதுகுறித்து திருப்​புவனம் போலீ​ஸார் விசா​ரிக்​கின்​றனர். தீர்வு கிடைக்​கும் என்று எதிர்​பார்த்​து, பல மணி நேரம் காத்​திருந்து அளித்த மனுக்​கள் ஆற்​றில் மிதந்த சம்​பவம் பொது​மக்​களிடையே அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

மீட்கப்பட்ட மனுக்கள்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்​சி​யர் கா.பொற்​கொடி கூறிய​தாவது: ஆற்​றில் மனுக்​கள் மிதந்​தது குறித்து சிவகங்கை கோட்​டாட்​சி​யர் விஜயகு​மார் தலை​மை​யில் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. அதில், உங்​களு​டன் ஸ்டா​லின் திட்ட முகாமில் பெறப்​பட்ட 6 பட்டா மாறு​தல் மனுக்​களின் நகல்​கள் இருந்​தன. அந்த மனுக்​கள் மீது ஏற்​கெனவே தீர்வு காணப்​பட்​டுள்​ளன. அத்​துடன் வட்​டாட்​சி​யர் அலு​வல​கம் மூலம் பெறப்​பட்ட 7 மனுக்​களின் நகல்​களும் இருந்​தன.

மனுக்​களை ஆற்​றில் வீசி​யது தொடர்​பாக, திருப்​புவனம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் கடந்த 2 நாட்​களாகப் பணிபுரிந்த அலு​வலர்​கள், பணி​யாளர்​களிடம் விசா​ரணை நடை​பெறுகிறது. மேலும், இது தொடர்​பாக மாவட்ட காவல் கண்​காணிப்​பாளரிடம் கோட்​டாட்​சி​யர் மனு அளித்​துள்​ளார். அரசுக்கு களங்​கம் ஏற்படுத்தும் வகை​யில், இது​போன்ற சமூக​விரோதச் செயல்​களில் ஈடு​பட்​டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

நடவடிக்கை எடுக்​க​வில்​லை... ஆற்​றில் கிடந்த மனுக்​களில் பூவந்​தி​யைச் சேர்ந்த செல்வி என்​பவரது மனு​வும் இருந்​தது. இதுகுறித்து அவரிடம் கேட்​ட​போது, “பட்டா மாறு​தல் குறித்து மனு கொடுத்​திருந்​தேன். மனு மீது உடனடி​யாக நடவடிக்கை எடுப்​ப​தாக அதி​காரி​கள் கூறினர். இது​வரை நடவடிக்கை எடுக்​காத நிலை​யில், வைகை ஆற்​றில் எங்​களது மனுக்​களை ஏன் வீசவேண்​டும்? சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x