Published : 30 Aug 2025 06:49 AM
Last Updated : 30 Aug 2025 06:49 AM

காவல் உயர் அதிகாரிகள் 9 பேர் பணியிட மாற்றம்

சென்னை: தமிழக உள்​துறை செயலர் தீரஜ்கு​மார் வெளி​யிட்ட உத்​தர​வு: சென்னை சிபிசிஐடி சிறப்பு புல​னாய்வு பிரிவு ஐஜி அனிசா ஹுசைன், சிலை கடத்​தல் தடுப்பு பிரிவு ஐஜி​யாக​வும், அங்​கிருந்த எஸ்​.லட்​சுமி சென்னை லஞ்ச ஒழிப்​புத்​துறை (2) ஐஜி​யாக​வும் பணி​மாறு​தல் செய்​யப்​பட்​டனர்.

இதே​போல், மத்​திய அரசில் அயல் பணிக்​குச் சென்று திரும்​பிய டிஐஜி சோனல் சந்​திரா வடசென்னை போக்​கு​வரத்து காவல் இணை ஆணை​ய​ராக​வும், கோயம்​புத்​தூர் தலை​மையக துணை ஆணை​யர் ஆர்​. சுஹாசினி புதி​தாக உரு​வாக்​கப்​பட்ட சென்னை போக்​கு​வரத்து காவல் மேற்கு துணை ஆணை​ய​ராக​வும், கோயம்​புத்​தூர் லஞ்ச ஒழிப்​புத் துறை கூடு​தல் எஸ்பி எம்​.பி.​திவ்யா பதவிஉயர்வு பெற்று கோயம்​புத்​தூர் தலை​மையக துணை ஆணை​ய​ராக​வும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

மேலும், சென்னை கிழக்கு மண்டல இணை ஆணை​ய​ராக இருந்த பி.​விஜயகு​மார் சென்னை போக்​கு​வரத்து காவல் தெற்கு இணை ஆணை​ய​ராக​வும், அங்​கிருந்த பண்டி கங்​காதர் சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணை​ய​ராக​வும் பணி​மாறு​தல் செய்​யப்​பட்​டுள்​ளனர். தமிழ்​நாடு சிறப்பு போலீஸ் 6-வது பட்​டா​லியன் துணை கமாண்​டன்ட்​டாக இருந்த பி.எச்​.சஜி​தா சென்னை சிபிசிஐடி-​யில் நிர்​வாகம் மற்​றும் ஒருங்​கிணைப்பு பிரிவு எஸ்​பி​யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

அவர் சென்னை சிபிசிஐடி தெற்கு மண்டல எஸ்பி பதவியை​யும் கூடு​தலாக கவனிப்​பார்.மேலும், சென்னை வடக்கு மண்டல சிபிசிஐடி எஸ்​பி​யாக உள்ள ஜி.ஜவஹர் புதி​தாக உரு​வாக்​கப்​பட்ட சென்னை சிபிசிஐடி மெட்ரோ மண்​டலத்​தின் எஸ்​பி​யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அவர் ஏற்​கெனவே வகித்து வந்த பத​வியை​யும் கூடு​தலாக கவனிப்​பார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x