Last Updated : 29 Aug, 2025 09:57 AM

2  

Published : 29 Aug 2025 09:57 AM
Last Updated : 29 Aug 2025 09:57 AM

உதயநிதியே சொல்லியும் உள்ளே சேர்க்காமல் இருக்கிறாரா? - ராஜேஸ்குமார் எம்பிக்கு எதிராக ரவுண்டு கட்டும் சர்ச்சை!

தமிழக மக்களை திமுக-வுக்கு ஆதரவாக திரட்டுவதைக் காட்டிலும் திமுக-வினரை ஒற்றுமைப்படுத்தி ஒன்றாக உட்காரவைப்பதே திமுக தலைமைக்கு பெரிய தலைவலியாக இருக்கும் போலிருக்கிறது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக-விலும் தலைமைக்கு அப்படியொரு தலைவலி தான்!

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரான ராஜேஸ்​குமார் எம்பி-க்கும் முன்னாள் மாவட்டச் செயலா​ளரும் முன்னாள் மத்திய இணையமைச்​சருமான காந்திச்​செல்​வனுக்கும் அவ்வளவாய் ஒத்துப்​போவ​தில்லை. இவர்களுக்கு இடையில் நடக்கும் ஈகோ யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின், அண்மையில் ராஜேஸ்​கு​மாரிடம் காந்திச் செல்வனை அரவணைத்துச் செல்லும்படி சொன்ன​தாக​வும், ஆனால், அதன் பிறகும் அவர் அலட்டிக்​கொள்​ள​வில்லை என்றும் நாமக்கல் திமுக வட்டாரத்தில் சொல்கி​றார்கள்.

இது தொடர்பாக அண்மையில் நாமக்கல் வந்த உதயநிதியை தனது ஆதரவாளர்கள் புடைசூழ சென்று சந்தித்த காந்திச்​செல்வன், தனது ஆதங்கத்தை அவரிடம் கொட்டித் தீர்த்​த​தாகவும் சொல்கி​றார்கள்.

ஒருங்​கிணைந்த நாமக்கல் மாவட்டச் செயலாளராக 15 ஆண்டு​களுக்கும் மேலாக இருந்தவர் காந்திச்​செல்வன். 10 ஆண்டு​களுக்கு முன்பு மாவட்ட திமுக இரண்டாகப் பிரிக்​கப்பட்ட போது கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்​கப்​பட்டார் காந்திச்​செல்வன். அதன் பிறகு தலைமைக்கு ஏற்பட்ட அதிருப்​தியின் காரணமாக காந்திச்​செல்வனை எடுத்​து​விட்டு அவரது விசுவாசியான பார்.இளங்​கோவனை மாவட்டச் செயலா​ள​ராக்​கி​னார்கள்.

அவரும் ஓராண்டு கூட நீடிக்​க​வில்லை. மீண்டும் காந்திச்​செல்வனே கிழக்கு மாவட்டப் பொறுப்​பாள​ரா​னார். மீண்டும் என்ன நடந்ததோ தெரிய​வில்லை காந்திச்​செல்வனை நீக்கி​விட்டு மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்த கே.ஆர்​.என்​.​ராஜேஸ்​குமாரை மாவட்டச் செயலா​ள​ராக்​கி​னார்கள். அதனைத் தொடர்ந்து, இரண்டு முறை ராஜ்யச​பாவுக்கும் அனுப்​பப்​பட்டார் ராஜேஸ்​கு​மார்.

இதனால் ஏற்பட்ட வருத்​தத்தில் காந்திச்​செல்வன் கட்சி நடவடிக்​கைகளை விட்டு ஒதுங்​கி​னார். இந்தச் சூழலில் தான் அவரை மீண்டும் ஆக்டீவ் அரசியலுக்குள் கொண்டுவர நினைத்த உதயநிதி, அவரை அரவணைத்துச் செல்லும்படி ராஜேஸ்​கு​மாருக்கு அட்வைஸ் செய்த​தாகச் சொல்கி​றார்கள். ஆனால், ஒன்றுக்கு மூன்று முறை அவர் அழுத்திச் சொல்லியும் ராஜேஸ்​குமார் அலட்டிக்​கொள்​ளாமல் இருப்​ப​தாகச் சொல்கி​றார்கள்.

இது பற்றி நம்மிடம் பேசிய நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர், “முன்​னோடு​வதுதானே பின்னோடும். 1997-ல் தான் சேலம் மாவட்​டத்​தி​லிருந்து நாமக்கல் மாவட்டம் தனியாக பிரிந்தது. அப்போது கேகேவீ என்று சொல்லப்​படும் கே.கே.வீரப்பன் தான் நாமக்கல் மாவட்ட திமுக செயலாளராக இருந்​தார். அவரிடம் அரசியல் படித்த காந்திச்​செல்வன், பிற்பாடு மாவட்டச் செயலாளராக வந்தார். அப்போது மாநில இளைஞரணி செயலாளராக இருந்த ஸ்டாலின், காந்திச்​செல்​வனுக்கு ஆதரவாக இருந்​தார். தன்னை ஓரங்கட்டிய அதிருப்​தியால் கேகேவீ காங்கிரஸில் இணைந்​தார்.

ஆனால், அங்கு தாக்குப்​பிடிக்க முடியாமல் விலகிய அவர், மீண்டும் திமுக-வுக்கு வர தயாராக இருந்​தார். தலைமையும் அவரை ஏற்றுக்​கொள்ள தயாராகவே இருந்தது. ஆனால், காந்திச்​செல்வன் தரப்பு அவரை வரவிடாமல் தடுத்து நிறுத்​தி​விட்டது. இப்போது வரலாறு திரும்பி இருக்​கிறது. அன்றைக்கு காந்திச்​செல்வன் தரப்பினர் கேகேவீக்கு செய்ததை இப்போது காந்திச்​செல்​வனுக்கு ராஜேஸ்​குமார் தரப்பினர் செய்கி​றார்கள். அதனால் உதயநிதியே சொல்லியும் அவரால் திமுக-வுக்குள் அதிகாரம் செய்ய​முடிய​வில்லை” என்றனர்.

ராஜேஸ்​குமார் ஆதரவாளர்களோ, “காந்​திச்​செல்வனை அண்ணன் (ராஜேஸ்​கு​மார்) ஒருபோதும் புறக்​கணிக்​க​வில்லை. அவரது மகன் திருமணத்​துக்​குக்கூட நேரில் சென்று வாழ்த்​தி​விட்​டுத்தானே வந்தார். அதேபோல், அவரை அரவணைத்துச் செல்லும்படி அண்ணனுக்கு உதயநிதி எந்த ஆலோசனையும் வழங்கிய​தாகவும் தெரிய​வில்லை” என்கி​றார்கள்.

இதுதொடர்பாக காந்திச்​செல்​வனிடம் கேட்டதற்கு, “ராஜேஸ்​கு​மாரிடம் துணை முதல்வர் கூறியது தொடர்பாக எனக்கு எதுவும் தெரிய​வில்லை” என்றதோடு முடித்துக் கொண்டார்.லட்சம் பேரை நிற்​க​வைத்து நீதிக் கதை சொல்லும் திமுக-​வினருக்கு ஊரு ரெண்​டு​பட்டால் கூத்​தாடிக்கு கொண்​டாட்டம் என்ற கதை மட்டும் தெரி​யாமலா இருக்​கும்​?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x