Published : 27 Aug 2025 05:55 AM
Last Updated : 27 Aug 2025 05:55 AM

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்த கர்நாடக முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

சென்னை: மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் தமிழக அரசை விமர்​சித்த கர்​நாடக முதல்​வருக்​கு, தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்கப் பொதுச் செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: உச்ச நீதி​மன்ற தீர்ப்​பின்​படி ஒவ்​வோர் ஆண்​டும் தமிழகத்துக்கு கர்​நாடக அரசு தண்​ணீரை திறந்​து​ வரும் நிலை​யிலும், மேகே​தாட்டு அணையை கட்​டு​வதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பது ஏனென்றே தெரிய​வில்லை என கர்​நாடக சட்​டப்​பேர​வை​யில், அம்​மாநில முதல்​வர் கூறி​யிருப்​பது கண்டனத்துக்குரியது.

இது தமிழகத்​துக்கு எதி​ராக, கர்​நாடக மக்​களை தூண்​டி​விடும் செய​லாகும். தமிழகத்​துக்கு எந்த மாதங்​களில், எவ்​வளவு தண்​ணீர் தேவை என்​பதை பல்​வேறு தொழில்​நுட்​பக் குழுக்​கள் மூலம் ஆய்வு செய்தே உச்ச நீதி​மன்​றம் ஒவ்​வொரு மாத​மும் தமிழகத்​துக்கு திறந்​து​விட வேண்​டிய பங்​கீட்டு நீரை தீர்ப்​பாக அளித்​தது.

அதை அலட்​சி​யப்​படுத்​தி​விட்​டு, எப்​போதெல்​லாம் கர்​நாடக அணை​கள் நிரம்​பு​கிறதோ, அப்​போது மட்​டும் வெள்​ளப் பாதிப்​பிலிருந்து தன் மாநிலத்தை பாது​காத்​துக் கொள்​வதற்​காக தமிழகத்​துக்கு தண்​ணீரை திறந்து விடு​கிறது கர்​நாடக அரசு. அப்​போது தமிழகத்​தி​லும் மழைபொழி​யும் காலம் என்​ப​தால், அது தமிழகத்​துக்கு கூடு​தல் அழி​வைத்​தான் தரு​கிறது.

அந்​தவகை​யில் கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மட்​டுமே 182 டிஎம்சி நீர் தமிழகத்​துக்கு வந்​துள்​ளது. அதாவது ஓராண்​டில் கொடுக்க வேண்​டிய நீரை 81 நாட்​களில் திறந்​து​விட்​டுள்​ளது. இந்​நிலை​யில், தமிழக அரசு விவரம் அறி​யாமல் அணை கட்​டு​வதை தடுப்​ப​தாக அம்​மாநில முதல்​வர் கூறுகிறார். தமிழக அரசும், தமிழக விவ​சா​யிகளும் கர்​நாடக அரசின் சூட்​சமத்தை நன்​றாகவே புரிந்து வைத்​துள்​ளனர்.

உச்​சநீ​தி​மன்ற தீர்ப்​பின்​படி தண்​ணீரை திறந்​து​வி​டாத கர்​நாடக அரசு மேகே​தாட்டு அணை​யைக் கட்​டி​விட்​டால், காவிரி​யின் உபரி நீரும் தமிழகத்​துக்கு கிடைக்​காது. 20 ஆண்​டு​கள் கடந்​தும் நீதி​மன்​றத் தீர்ப்பை மதிக்​காக கர்​நாடக அரசை எப்​படி நம்ப முடி​யும்? சுய அதி​காரம் கொண்ட மேலாண்மை வாரி​யத்​தின் கட்​டுப்​பாட்​டில் அணை​களை எடுத்​துக்​கொண்​டு, நீர் பங்​கீடு செய்​யும் வழி​முறைக்கு கர்​நாடக அரசு உரிய ஒப்​புதல் அளித்​தால் இரு மாநில மக்​களும் பயன்​பெறு​வர். இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x