Published : 27 Aug 2025 10:58 AM
Last Updated : 27 Aug 2025 10:58 AM

பண்டிகைக்காக 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: சென்னையில் விநாயகர் சதுர்த்தி விற்பனை அமோகம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பூஜை பொருட்களை வாங்க தாம்பரம் சண்முகம் சாலையில் நேற்று திரண்ட மக்கள் கூட்டம். | படம்: எம்.முத்துகணேஷ் |

சென்னை: ​வி​நாயகர் சதுர்த்​தி​யையொட்டி சென்​னை​யில் நேற்று முக்​கிய சந்​தைகளில் விற்​பனை களை​கட்​டியது. விநாயகர் சிலை மற்​றும் பூஜைக்கு தேவை​யான பொருட்​களை பொது​மக்​கள் ஆர்​வ​மாக வாங்​கிச் சென்​றனர். விடு​முறையையொட்டி 3 லட்சத்​துக்​கும் மேற்​பட்​டோர் சொந்த ஊர்​களுக்கு பயணித்​தனர்.

நாடு முழு​வதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகல​மாக கொண்​டாடப்​படு​கிறது. இதை யொட்​டி, சென்​னை​யின் கோ​யம்​பேடு, பாரி​முனை, தியாக​ராய நகர், பெரம்​பூர், புரசை​வாக்​கம், வண்​ணாரப்​பேட்டை உள்​ளிட்ட முக்​கிய வணிகப் பகுதிகள் காலை முதலே பரபரப்​பாக காணப்​பட்​டது. அதே​நேரம், பொருட்​கள் மற்​றும் பூக்​களின் விலை​யும் வழக்​கத்தை விட அதி​கரித்​திருந்​தது.

அதன்​படி சாமந்தி பூ கிலோ ரூ.220-ல் இருந்து ரூ.400 வரை​யும், மல்லி ரூ.900 முதல் ரூ.1,300 வரை​யும், கோழி​கொண்டை பூ கிலோ ரூ.140 முதல் ரூ.180 வரை​யும், அரு​கம்​புல் 1 கட்டு ரூ.60 முதல் ரூ.80 வரை​யும், எருக்​கம்பூ மாலை ரூ.60 முதல் ரூ.80 வரை​யும் விற்கப்பட்​டது.

இதேபோல், சந்​தைகளில் அவல், பொறி உள்​ளிட்ட பொருட்​களும் பாக்​கெட் போட்டு விற்​பனை செய்​யப்​பட்​டன. பழங்களின் விலை​யும் கணிச​மாக உயர்ந்​திருந்​தன. ஆப்​பிள் கிலோ ரூ.250, ஆரஞ்சு கிலோ ரூ.180 என சில்​லறை கடைகளில் விற்கப்பட்டது.

விதவிதமான விநாயகர்: மேலும் ரூ.100 முதல் ரூ.1000 வரையிலான வண்ண வண்ண விநாயகர் சிலைகள் விற்​பனைக்கு குவிந்​திருந்​தன. இவற்றை வீட்​டில் வைத்து செய்து வழிபடும் வகை​யில் குழந்​தைகள் உள்​ளிட்​டோர் ஆர்​வத்​துடன் வாங்​கிச் சென்​றனர். எர்​ணாவூர், கொடுங்​கையூர் உள்​ளிட்ட பகு​தி​களில் புலித்​தோல் போர்த்​திய விநாயகர், சுறாமீனுக்கு மேல் அமர்ந்​திருக்​கும் விநாயகர் சிலைகள், சிக்ஸ் பேக் விநாயகர் என முன்​ப​திவு செய்​யப்​பட்ட விநாயகர் சிலைகள் லோடு ஆட்​டோக்​களில் ஏற்றி அனுப்​பப்​பட்​டன.

கொழுக்​கட்​டை, சுண்​டல் உள்​ளிட்ட பதார்த்​தங்​களைச் செய்​வதற்​கான பொருட்​களை வாங்க மளிகைக் கடைகளி​லும் கூட்​டம் குவிந்​தது. குறிப்​பாக மாலை நேரங்​களில் இறுதி நேர வியா​பாரம் களை​கட்​டியது. இவ்​வாறு பொருட்​களை வாங்​கிச் செல்ல ஏராளமான வியா​பாரி​கள் மற்​றும் பொது​மக்​கள் வந்த நிலை​யில், அலு​வல​கம் முடிந்து வீடு செல்​வோர், பண்​டிகைக்​காக ஊர்களுக்​குச் செல்​வோர் என அணிவகுத்​த​தால் முக்​கிய சாலைகளி​லும், புறநகர் பிர​தான சாலைகளி​லும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. போக்​கு​வரத்து காவலர்​கள் கூடு​தலாக பணி​யமர்த்​தப்​பட்​டு, நெரிசலை சீர் செய்​தனர்.

கிளாம்​பாக்​கம், கோயம்​பேடு, மாதவரம் உள்​ளிட்ட பேருந்து நிலை​யங்​களுக்கு வந்​தவர்​களுக்​காக சிறப்பு பேருந்​துகள் ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தன. வாரத்​தின் இடை​யில் விநாயகர் சதுர்த்தி வந்​த​போதும், அதைத் தொடர்ந்து சுப​முகூர்த்த தினம் இருப்​ப​தால் திரு​மணம் உள்​ளிட்ட விசேஷங்​களில் பங்​கேற்​ப​தாக பலரும் விடுப்பு எடுத்து புறப்​பட்​டனர்.

முன்​ப​திவு செய்​யாமல் வந்​தவர்​கள் பேருந்​துக்​காக காத்​திருந்து பயணித்​தனர். சென்​னை​யில் இருந்து நேற்று இயக்​கப்​பட்ட அரசுப் பேருந்​துகள் மூலம் 1.50 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பயணித்​தனர். வழக்​கம்​போல ஆம்னி பேருந்​துகளில் அதிக கட்​ட​ணம் வசூலிக்​கப்​பட்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதைத் தடுப்​ப​தற்​கான நடவடிக்​கையை போக்​கு​வரத்​துத் துறை​யினர் மேற்​கொண்டிருந்​தனர்.

இதேபோல், எழும்​பூர், சென்ட்​ரல் உள்​ளிட்ட முக்​கிய ரயில் நிலை​யங்​களி​லும் மக்​கள் கூட்​டம் காணப்​பட்​டது. இங்​கிருந்து இயக்கப்பட்ட ரயில்​களில் தமிழகம் மற்​றும் வடமாநிலங்​களுக்கு ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பயணித்​தனர். அரசுப் பேருந்து, ரயில், ஆம்னி பேருந்​து உள்​ளிட்​ட பொதுப்​ போக்​கு​வரத்​து ​வாக​னங்​கள்​ மூலம்​ சு​மார்​ 3 லட்​சத்​துக்​கும்​ மேற்​பட்​டோர்​ உற்சாக​மாக சொந்​த ஊர்​ சென்​றனர்​. மெட்​ரோ ரயில்​ நிலை​யங்​களி​லும்​ கூட்​டம்​ அதி​கரித்​து ​காணப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x