Published : 27 Aug 2025 08:18 AM
Last Updated : 27 Aug 2025 08:18 AM

திருச்சி பஞ்சப்பூர் அருகே எனக்கு நிலம் இருந்தால் பழனிசாமியே எடுத்துக் கொள்ளலாம்: அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

திருச்சி மேலப்புதூர் பிலோமினாள் பள்ளியில் முதல்வரின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை நேற்று தொடங்கிவைத்து, குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சி: பஞ்​சப்​பூரில் அமைச்​சர் கே.என்​. நேரு​வுக்கு 300 ஏக்​கர் நிலம் இருப்​ப​தால்​தான், அங்கு பேருந்து முனை​யம் அமைக்கப்பட்டுள்​ள​தாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​யிருந்த நிலை​யில்,‘எனக்கு அங்கு 300 ஏக்​கர் நிலம் இருந்தால், அதை பழனி​சாமியே எடுத்​துக் கொள்​ளலாம்’ என்று அமைச்​சர் கே.என்​.நேரு கூறினார்.

திருச்சி மேலப்​புதூர் புனித பிலோமி​னாள் பெண்​கள் மேல்​நிலைப் பள்​ளி​யில் நேற்று முதல்​வரின் காலை உணவுத் திட்​டத்தை தொடங்கி வைத்த பின்​னர் அமைச்​சர் கே.என்​.நேரு செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: துறையூரில் ஆக.24-ம் தேதி நடை​பெற்ற அதி​முக கூட்​டத்​தில் 108 ஆம்​புலன்ஸ் வந்​தது, நோயாளியை காப்​பாற்​று​வதற்​காகவே தவிர, வேறு எந்த நோக்​கத்​துக்​காக​வும் அல்ல. துறையூரில் ஆம்​புலன்ஸ் ஓட்​டுநர் தாக்​கப்​பட்​டதற்கு அதி​முக​வினரே காரணம். அவர்​களே 108 ஆம்​புலன்​ஸுக்கு போன் செய்து வரவழைத்து தாக்​கிய​தாக காவல் துறை தரப்​பில் எனக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது.

பஞ்​சப்​பூர் பகு​தி​யில் எனக்கு 300 ஏக்​கர் நிலம் இருப்​ப​தால்​தான், அங்கு பேருந்து முனை​யம் அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​யிருக்​கிறார். அவர் கூறியிருப் ​ப​தைப்​போல, அங்கு எனது பெயரிலோ, என்​னைச் சார்ந்தவர்கள் பெயரிலோ நிலங்​கள் இருந்​தால், அதை அரசே கையகப்​படுத்​திக் கொள்​ளலாம். நானே கையெழுத்​திட்டு தரு​கிறேன். வேண்​டுமென்​றால் பழனி​சாமியே அந்த நிலத்தை எடுத்​துக் கொள்​ளலாம்.

அதிமுகவுக்குள்தான் பிரச்சினை: எங்​களு​டைய கட்​சித் தலை​வர் முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுடன் நான் இணக்​க​மாகத்​தான் உள்ளேன். எங்​களுக்​குள் எந்​தப் பிரச்​சினை​யும் இல்​லை. ஆனால் பழனி​சாமிக்​கும், தங்​கமணிக்​கும் இடையே​தான் பிரச்​சினை நிலவுவ​தாக அதி​முக நிர்​வாகி​களே வெளிப்​படை​யாக கூறி வரு​கின்​றனர். தமிழகத்​தில் மழைக்​காலம் தொடங்​கு​வதற்கு முன்பாகவே, அனைத்து இடங்​களி​லும் மழைநீர் வடி​கால் உள்​ளிட்ட அனைத்து கட்​டமைப்பு பணி​களும் சரி​யான முறை​யில் முடிக்​கப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அவர் கூறி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x