Published : 27 Aug 2025 08:07 AM
Last Updated : 27 Aug 2025 08:07 AM

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்: செப்டம்பர் மாதத்துக்கான 37 டிஎம்சி நீரை கோரியது தமிழக அரசு

சென்னை: டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் 43-வது கூட்​டத்​தில், செப்​டம்​பர் மாதம் தமிழகத்​துக்கு வழங்க வேண்​டிய 37 டிஎம்சி நீரை விடு​விப்​பதை உறுதி செய்ய தமிழக அரசு சார்​பில் வலி​யுறுத்​தப்​பட்​டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: டெல்​லி​யில் எஸ்​.கே.ஹல்​தார் தலை​மை​யில் நடை​பெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் 43-வது கூட்​டத்​தில் தமிழ்​நாடு உறுப்​பின​ரான நீர்​வளத்​துறை செயலர் ஜெ.ஜெய​காந்​தன், காவிரி தொழில்​நுட்​பக் குழும தலை​வர் இரா.சுப்​பிரமணி​யம் ஆகியோர் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் இருந்​த​படி காணொலிக் காட்சி வாயி​லாக பங்​கேற்​றனர்.

அப்​போது, மேட்​டூர் அணை​யின் நீர் இருப்பு அதன் முழு கொள்​ளள​வான 93.470 டிஎம்சி ஆக உள்​ளது. மேட்​டூர் அணை இந்த ஆண்டு ஐந்​தாவது முறை​யாக அதன் முழு கொள்​ளளவை எட்​டி​யுள்​ளது. தற்​போது அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 7,684 கனஅடி​யாக உள்ளது. அணையி​லிருந்து விநாடிக்கு 12,850 கனஅடி நீர் விவ​சா​யம், குடிநீர் மற்​றும் தொழிற்​சாலை பயன்​பாட்​டுக்​காக திறந்​து​விடப்படு​கிறது.

கர்​நாடக அணை​களின் நீர்​இருப்பு மற்​றும் நீர்​வரத்து கணிச​மான அளவு தொடர்ந்து வரு​வ​தா​ல். தமிழகத்​துக்கு இந்​தாண்டு செப்டம்பர் மாதத்​துக்கு வழங்​கப்பட வேண்​டிய நீர் அளவான 36.76 டிஎம்​சியை உச்ச நீதி​மன்ற உத்​தர​வின்​படி, பிலிகுண்​டுலு​வில் கர்​நாடகம் உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு தமிழகம் சார்​பில் வலி​யுறுத்​தப்​பட்​ட​தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x