Last Updated : 27 Aug, 2025 10:27 AM

 

Published : 27 Aug 2025 10:27 AM
Last Updated : 27 Aug 2025 10:27 AM

கையில் இருப்பது மந்திரக்கோலா, மருத்துவக்கோலா? - பிரேமலதாவும் கையில் கரகோல் வைத்திருக்கும் ‘கணக்கு’ என்ன?

திமுக-விலும் அதிமுக-விலும் துணைப் பொதுச் செயலாளராக இருந்தவர் நாஞ்சில் மனோகரன். அவர் தனது கையில், எப்போதும் கோல் ஒன்றை வைத்திருப்பார். அதற்குள்ளே அவர் கத்தியை மறைத்து வைத்திருந்ததாகக் கூட செய்திகள் உண்டு. கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு எம்ஜிஆர் பக்கம் மனோகரன் போனபோது, அவரை ‘மந்திரக்கோல்’ என்று எழுத்துகளில் வசைபாடினார் கருணாநிதி. மீண்டும் அவர் கருணாநிதியின் தம்பி ஆனபோது, அவரை ‘மந்திரக்கோல் மைனர்’ என்று ஜெயலலிதா போன்றவர்கள் கிண்டலடித்தார்கள்.

இப்போது அதுவல்ல விஷயம்... அதேபோன்றதொரு மந்திரக்கோலை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவும் இப்போது கையில் வைத்திருக்கிறார். அண்​மை​யில் விருத்​தாசலம் விருத்​தகிரீஸ்​வரர் கோயிலுக்கு மகனை​யும் தம்​பியை​யும் அழைத்​துக் கொண்டு வந்த பிரேமலதா கையில் அந்த ‘மந்​திரக்​கோல்’ இருந்​தது.

“இதென்ன புதுசா கையில கோல் வெச்​சிருக்​கீங்​களே?” என செய்​தி​யாளர்​கள் கேட்​டதற்​கு, “அது ஒண்​ணுமில்​ல... கட்​சித் தொண்​டர் ஒரு​வர் பிரி​யத்துடன் அன்​பளிப்​பாக தந்​தது. அவர் கேட்​டுக்​கொண்​ட​தால் இதைக் கையில் வைத்​திருக்​கிறேன்” என்று சொல்லி கடந்​து​விட்​டார் பிரேமல​தா.

அவர் அப்​படிச் சொன்​னாலும் அவரது கட்சி வட்​டாரத்​தில் இதுகுறித்து விசா​ரித்த போது, “அண்​ணி​யார் கையில் வைத்​திருப்​பது சாதாரண கோல் இல்லை. இது கருங்​காலி மரத்​தால் செய்​யப்​பட்ட விஷேச​மான கோல். இதை கையில் வைத்​திருந்​தால் எதிர்ப்​பலை​கள் விலகி பாசிட்​டீவ் எனர்ஜி கிடைக்​கும். இது கையில் இருந்​தால் நினைத்த காரி​யம் கைகூடி வரும் என ஜோதிடர்​கள் சொல்​கி​றார்​கள்.

அப்​படி தங்​களது ஆஸ்​தான ஜோதிடர் சொன்​னதன் பேரிலேயே அண்​ணி​யார் இந்தக் கோலை கையில் எடுத்​துவர ஆரம்​பித்​திருக்​கி​றார். இதே​போல், கேப்​டன் இருந்த போதும் அவரிட​மும் கையில் கருங்​காலி கோல் வைத்​துக்​கொண்​டால் நல்​லது எனச் சொல்லி இருக்​கி​றார்​கள். ஆனால், ஏனோ அவர் அந்த யோசனையை ஏற்​க​வில்​லை​யாம்” என்​ற​னர்.

கடவுள் மறுப்​புக் கொள்​கையை தீவிர​மாகக் கடை​பிடித்த முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யும் சில நேரங்​களில் இது​போன்ற ஆன்​மிக நம்​பிக்கைகளுக்கு இடமளித்​த​தாகச் சொல்​வார்​கள். தனது தோளில் கட்​சித் துண்​டை​யும் கருப்​புத் துண்​டை​யும் மட்​டுமே அணிந்து பழகி இருந்த கருணாநி​தி, 1996-ம் ஆண்டு மஞ்​சள் துண்​டுக்கு மாறி​னார். ஜோதிடர்​கள் சொன்ன பரி​காரத்​தின் படியே அவர் மஞ்​சளுக்கு மாறிய​தாக அப்​போது சிலர் விமர்​சனம் செய்​தார்​கள்.

ஆனால், கழுத்​துப் பகு​தி​யில் தனக்கு ஏற்​படும் வலியைக் கட்​டுப்​படுத்​து​வதற்​காகவே மருத்​து​வர்​கள் ஆலோ​சனைப்​படி, தான் மஞ்​சள் துண்டு அணிவதாக​வும், அதை அணிவதன் மூலம் மஞ்​சள் துண்​டின் வெப்​பத்​தால் வலி கட்​டுப்​படும் என மருத்​து​வர்​கள் சொல்லி இருப்​ப​தாக​வும் கருணாநிதி விளக்​கமளித்​தார்.

ஆனால், அதை​யும் முழு​மை​யாக ஏற்​காத ஆன்​மிக அன்​பர்​கள் சிலர், “கருணாநிதி ரோகிணி நட்​சத்​திரத்​தன்று ரிஷப ராசி​யில் பிறந்​தவர் என்​ப​தால் குருபலம் பெறு​வதற்​காகவே அவர் மஞ்​சள் துண்டை அணி​கி​றார்” என வாதம் செய்​தனர். இதனிடையே, “எங்​கள் நிறு​வனர் மருத்​து​வர் ஐயா ராமதாஸ் அளித்த மஞ்​சள் சால்​வையை அணி​ந்த​தால் தான் கருணாநிதி மீண்​டும் அரியணை​யில் அமர முடிந்​தது” என பாமக தரப்​பிலிருந்​தும் மஞ்சள் சால்வை மகிமைக்கு சொந்​தம் கொண்​டாடி​னார்​கள்.

இந்த நிலை​யில், காலை நேரத்​தில் வாக்​கிங், சைக்​கிளிங் சென்று மக்​களைச் சந்​தித்து வரும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லினும் கடந்த மூன்று வருடங்களாக வாக்​கிங் செல்​லும் சமயங்​களில் கையில் கருங்​காலி கோலை வைத்​திருக்​கி​றார். ஆன்​மிக நம்​பிக்​கை​களில் ஸ்டா​லினுக்கு நாட்டமில்லை என்​றாலும் அவரது துணை​வி​யார் துர்கா ஸ்டா​லின், ஜோதிடர்​களின் ஆலோ​சனை கேட்​காமல் எந்​தக் காரி​யத்​தி​லும் இறங்குவதில்லை. அவரது ஆஸ்​தான ஜோதிடர்​களின் ஆலோ​சனைப்​படியே ஸ்டா​லின் தனது கையில் கருங்​காலி கோலை வைத்​திருப்​ப​தாக ஒருசா​ரார் சொன்​னாலும், “கருங்​காலி கோலுக்கு மருத்​துவ குணம் இருப்​ப​தாலேயே தளபதி அதைக் கையில் வைத்​திருக்​கி​றார்” என்​கி​றார்​கள் உடன்பிறப்​பு​கள்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய கடலூரைச் சேர்ந்த ஜோதிடர் ஒரு​வர் “கருங்​காலி மரத்​தில் செய்​யப்​பட்ட இந்​தக் கோலை கரகோல் என்று சொல்லுவோம். பெரும்​பாலும் இதை செவ்​வாய் தோஷம் உள்​ளவர்​கள் பரி​காரத்​துக்​காக பயன்​படுத்​து​வது வழக்​கம். செவ்​வாய் தோஷம் உள்ள ஆணும் பெண்​ணும் திரு​மணம் செய்து கொண்​டால் பெரி​தாக பாதிப்பு இருக்​காது.

ஆனால், இரு​வரில் ஒரு​வ​ருக்கு மட்​டும் செவ்​வாய் தோஷம் இருந்​தால் அது சில கோளாறுகளைக் காட்​டும். அப்​படி​யான சிக்​கல்​கள் வரா​மல் இருக்க கரகோலை கையில் வைத்​திருந்​தால் நல்​லது என்​பார்​கள். மற்​றபடி, இந்​தக் கோலுக்கு வேறேது​வும் விஷேச குணங்​கள் இருப்​ப​தாக எனக்குத் தெரிய​வில்​லை” என்​றார்.

மந்​திரக்​கோலோ, மருத்​து​வக்​கோலோ தளப​தி​யார் வழி​யில் இப்​போது அண்​ணி​யாரும் அதை கையில் எடுக்க ஆரம்​பித்​திருக்​கி​றார். இரு​வ​ரும் நினைப்​பது இனிதே நிறைவேறுகிறதா என்று பார்​க்​கலாம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x