Published : 27 Aug 2025 07:59 AM
Last Updated : 27 Aug 2025 07:59 AM

தமிழகத்தில் 66,000 தொழில்முனைவோருக்கு ரூ.5,490 கோடி கடன்:  அமைச்சர் தகவல்

சென்னை: குறு, சிறு மற்​றும் நடுத்தர தொழில் நிறு​வனங்​கள் துறை வாயி​லாக கடந்த நான்​கரை ஆண்​டு​களில் ரூ.2,133.26 கோடி அரசு மானி​யத்​துடன் ரூ.5490.80 கோடி கடன் வழங்​கப்​பட்டு 66,018 புதிய தொழில் முனை​வோர் உரு​வாக்​கப்​பட்​டுள்​ள​தாக குறு, சிறு, நடுத்​தரத் தொழில்​கள் துறை அமைச்​சர் தா.மோ.அன்​பரசன் தெரி​வித்​துள்​ளார்.

மாவட்ட தொழில் மையங்​களின் பொது மேலா​ளர்​களு​ட​னான கூட்​டத்​தில் அமைச்​சர் பேசி​ய​தாவது: குறு, சிறு மற்​றும் நடுத்தர துறை​யின் மூலம் 6 வகை​யான சுய வேலை வாய்ப்​புத் திட்​டங்​கள் முதலீட்டு மானி​யம் உள்​ளிட்ட 10 வகை​யான மானி​யத் திட்டங்கள், உலக முதலீட்​டாளர் மாநாட்​டில் மேற்​கொள்​ளப்​பட்ட புரிந்துணர்வு ஒப்​பந்​தங்​களுக்​கான இலக்​கினை​ விரை​வில் அடைய வேண்​டும். மாற்​றுத் ​திற​னாளி​கள், மகளிர், ஆதிதி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினருக்கு அதிக எண்​ணிக்​கை​யில் வழங்க வேண்டும்.

கடந்த 2023-24-ம் ஆண்டு தமிழக அரசால் புதி​தாக தொடங்​கப்​பட்ட அண்​ணல் அம்​பேத்​கர் தொழில் முன்​னோடிகள் திட்​ட​தின்கீழ் இது​வரை 2,970 பயனாளி​களுக்கு ரூ.324 கோடி மானி​யத்​துடன் ரூ.581 கோடி கடன் வழங்​கப்​பட்​டுள்​ளது. கடந்த ஆண்டு தொடங்​கப்​பட்ட கலைஞர் கைவினைத் திட்​டத்​தின் கீழ் இது​வரை 3,452 பயனாளி​களுக்கு ரூ.13.45 கோடி மானி​யத்​துடன் ரூ.64.24 கோடி கடன் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இந்த இரண்டு புதிய திட்​டங்​கள் மற்​றும் ஏற்​கெனவே செயல் படுத்​தப்​பட்டு வரும் புதிய தொழில் முனை​வோர் மற்​றும் தொழில் நிறு​வனங்​கள் மேம்​பாட்​டுத் திட்​டம், வேலை இல்லா இளைஞர்​களுக்​கான வேலை வாய்ப்பு உரு​வாக்​கும் திட்​டம், பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உரு​வாக்​கும் திட்​டம், பிரதம மந்​திரி​யின் உணவு பதப்​படுத்​தும் குறுந்​தொழில்​கள் முறைபடுத்​துதல் திட்​டம் உள்​ளிட்ட ஆறு வகை​யான சுய வேலை வாய்ப்பு திட்​டங்​களின் கீழ் கடந்த நான்​கரை ஆண்​டு​களில் 66,018 பயனாளிகளுக்கு ரூ.2133.26 கோடி மானி​யத்​துடன் ரூ 5,490.80 கோடி கடன் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இத்​துறை​யின் மூலம் செயல்​படுத்​தப்​படும் முதலீட்டு மானி​யம், மின் மானி​யம், ஊதிய பட்​டியல் மானி​யம் உள்​ளிட்ட 10 வகையான மானி​யத் திட்​டங்​களின் கீழ் கடந்த நான்​கரை ஆண்​டு​களில் 20,702 நிறு​வனங்​களுக்கு ரூ.1,459.28 கோடி மானிய​மாக வழங்​கப்​பட்​டது.

2024-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்​டாளர்​கள் மாநாட்​டில் துறை சார்​பில் ரூ.63,573.11 கோடி முதலீடு செய்​யும் வகை​யில் 5,068 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. இதில் 2,610 நிறு​வனங்​கள் ரூ.27,312.26 கோடி முதலீடு செய்து உற்​பத்​தியை தொடங்​கி​யுள்​ளன. இதன்மூலம் 1,02,061 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த ஆண்டு டிசம்​பர் மாதத்​துக்​குள் அனைத்து திட்​டங்​களி​லும் இலக்கை எய்​தும் வகை​யில் துரித​மாக செயல்பட வேண்​டும். புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் மேற்​கொண்ட அனைத்து நிறு​வனங்​களும் உற்​பத்​தியை தொடங்க வழி​வகை செய்ய வேண்​டும். இவ்வாறு அவர் தெரி​வித்​தார். கூட்​டத்​தில்​ துறை செயலர்​ அதுல்​ ஆனந்​த்​, தமிழ்​​நாடு சிறு​தொழில்​ வளர்​ச்​சிக்​கழக செயலர்​ ஆ.​கார்​த்​திக்​, தொழில்​ ஆணை​யர்​ இல.நிர்​மல்​​ராஜ் உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x