Published : 26 Aug 2025 05:45 AM
Last Updated : 26 Aug 2025 05:45 AM

‘மகிழ்ச்சி’ கருப்பொருளில் மாணவி தாரிகாவின் கலைப் படைப்புகள் கண்காட்சி: சென்னையில் ஆக. 30-ல் தொடக்கம்

தாரிகா

சென்னை: சென்னை மாணவி தாரிகா மகிழ்ச்சி என்ற கருப்​பொருளில் தனது 30 கலைப் படைப்​பு​களை பொது​மக்​களின் பார்​வைக்கு ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் ஒரு வாரத்​துக்கு காட்​சிப்​படுத்த உள்​ளார்.

வீல்ஸ் இந்​தியா லிமிடெட் நிறு​வனத்​தின் நிர்​வாக இயக்​குநர் ஸ்ரீவத்ஸ் ராமின் மகள் தாரி​கா(18). இவர் மகிழ்ச்சி என்ற கருத்தை அடிப்படை​யாகக் கொண்ட தனது 30 கலைப் படைப்​பு​களை, சென்னை கதீட்​ரல் சாலை​யில் உள்ள கல்பா ட்ரூமா அங்​காடி​யில் ஆக. 30-ம் தேதி முதல் ஒரு​வாரத்​துக்கு காட்​சிப்​படுத்த உள்​ளார்.

இதன் தொடக்​க​விழா, அன்​றைய தினம் மாலை 4.30 மணிக்கு நடை​பெறவுள்​ளது. இதற்​காக, அவர் லென்ஸ் மூலம் ஆய்வு செய்து தனது படைப்​பாற்​றல் திறனை திரைச் சீலைகள், சிற்​பங்​கள் மூலம் வெளிப்​படுத்​தவுள்​ளார்.

இதுகுறித்​து, தாரிகா கூறுகை​யில், “இந்த உலகில் அனை​வரும் மகிழ்ச்​சி​யாக இருக்​கவே விரும்​புவோம். மகிழ்ச்சி என்​பது உலகளா விய உணர்​வாக இருப்​ப​தால், இந்த கண்​காட்​சி​யின் கருப்​பொருளாக மகிழ்ச்​சி​யைத் தேர்வு செய்​தேன். இந்த சுருக்​கக் கலை மூலம் அதாவது ஒரு காட்​சியை யதார்த்​த​மாக சித்​தரிப்​ப​தற்கு பதிலாக அதன் சாராம்​சத்தை வெளிப்​படுத்​தச் செய்​யும் வகை​யில் இருக்கும்​”என்​றார்.

தாரி​கா​வின் கலை வழி​காட்டி ஆசிரியர் டயானா சதீஷ் கூறுகை​யில், “இந்​தப் படைப்​பு​களை தாரிகா இயற்கை சாயங்​களைப் பயன்​படுத்தி செய்​துள்​ளார். சிறப்​பாக வண்​ணம் தீட்​டி, நேர்த்​தி​யான வடிவ​மைப்​பில் தைத்​துள்​ளார்.

திருக்​குறளை மைய​மாக கொண்டு சென்​னை​யில் 3 கண்​காட்​சிகள் மூலம் தாரிகா தனது கலைத் திறமையை வெளிப்​படுத்தி உள்​ளார். நவராத்​திரி விழா​வின் போது, கடல், அமே​சான் காடு​கள், ஜப்​பான், மனித மூளை, பணம் மற்​றும் காலநிலை மாற்​றம் உள்​ளிட்ட பல்​வேறு கருப்​பொருள்​களைச் சுற்றி கலை படைப்​பு​களை உருவாக்​கி​யுள்​ளார்​”என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x