Published : 26 Aug 2025 06:30 AM
Last Updated : 26 Aug 2025 06:30 AM

விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாளையொட்டி 3,519 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு

சென்னை: விரைவு போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் ஆர்​.மோகன் வெளி​யிட்ட செய்திக் குறிப்​பு: நாளை விநாயகர் சதுர்த்தி, அதைத் தொடர்ந்து சுபமுகூர்த்த நாட்​கள், பின்​னர், வார இறு​தி​நாட்​கள் என அடுத்​தடுத்து விடு​முறை வரு​கிறது.

இதனால், பொது​ மக்​கள் தேவைக்​காக கூடு​தலாக பேருந்​துகளை இயக்க திட்​ட​மிடப் ​பட்​டுள்​ளது. அதன்​படி, இன்று (26-ம் தேதி), வரும் 28, 29, 30, 31 ஆகிய தேதி​களில் சென்னை, கிளாம்​பாக்​கத்​தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,945 பேருந்​துகளும், கோ​யம்​பேட்டில் இருந்து 200 பேருந்​துகளும், மாதவரத்​தில் இருந்து 24 பேருந்​துகளும் இயக்​கப்​படும்.

பெங்​களூரு, திருப்​பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்​களில் இருந்து 350 பேருந்​துகள் என மொத்​தம் 3,519 பேருந்​துகள் கூடு​தலாக இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இந்​நாட்​களில் ஊர்​களுக்​குச் செல்ல 50 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் முன்​ப​திவு செய்​துள்​ளனர். ஊர் சென்​றவர்​கள் திரும்பி வரவும் ஞாயிறன்று கூடு​தல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x