Published : 26 Aug 2025 05:34 AM
Last Updated : 26 Aug 2025 05:34 AM

காவல் துறையில் புதிதாக உருவாகும் தீயணைப்பு ஆணையத்துக்கு தலைவராகிறார் சங்கர் ஜிவால்

சென்னை: தமிழக காவல் துறை​யின் சட்​டம்- ஒழுங்கு டிஜிபி​யாக உள்ள சங்​கர் ஜிவால் வரும் 31-ம் தேதி​யுடன் பணி ஓய்வு பெறுகிறார். சுமார் 35 ஆண்டு கால காவல் துறை அனுபவத்​தில் அவர் சிறப்​பாக பணி செய்​துள்​ளார். இந்த அனுபவத்தை பயன்​படுத்​திக் கொள்ள தமிழக அரசு முடி​வெடுத்​துள்​ளது.

அதன்​படி, காவல் துறை ஆணை​யம் போல், தீயணைப்பு மற்​றும் மீட்பு பணி​கள் துறைக்கு புதிய ஆணை​யம் ஒன்றை ஏற்​படுத்த தமிழக அரசு முடி​வெடுத்​துள்​ளது. அடிக்​கடி பட்​டாசு விபத்​துகள் ஏற்​பட்டு பெரும் பொருள் இழப்​பு​கள் மட்​டும் அல்​லாமல் ஏராள​மான உயிர் இழப்​பு​களை​யும் தமிழகம் சந்​தித்து வரு​கிறது.

இது​போன்ற விபத்​துகள் மற்​றும் பேரழிவு தீ விபத்​துகளை முற்​றி​லும் தடுப்​ப​தற்கு தேவை​யான வழி​முறை​களை இந்த ஆணை​யம் வழங்​கும். அதை அடிப்​படை​யாக வைத்து புதிய கொள்கை முடிவு எடுக்​கப்​பட்டு தீயணைப்பு மற்​றும் மீட்பு பணி​கள் துறை இயங்​கும்.

அது​மட்​டும் அல்​லாமல் தீயணைப்பு துறைக்கு தேவை​யான காலத்​துக்கு ஏற்ப மேம்​பட்ட நவீன உபகரணங்​கள், கருவி​கள் வாங்​கு​வது தொடர்​பாக​வும் இந்த ஆணை​யம் ஆலோ​சனை​கள் வழங்​கும். இந்த ஆணை​யம் மூலம் தீயணைப்பு மற்​றும் மீட்பு பணி​கள் துறை மேம்​படும் என அதி​காரி​கள் தரப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x