Published : 26 Aug 2025 05:15 AM
Last Updated : 26 Aug 2025 05:15 AM

4 ஆண்டுகளில் ரூ.6.70 லட்சம் கோடி முதலீடு: எம்எஸ்எம்இ ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் ஆய்வில் தகவல்

சென்னை: தமிழகத்​தில் 2021-22-ம் நிதி​யாண்டு முதல் 2024-25-ம் நிதி​யாண்டு வரை 4 ஆண்​டு​களில் சுமார் ரூ.6.70 லட்​சம் கோடி முதலீடு ஈர்க்​கப்​பட்​டுள்​ள​தாக, எம்​எஸ்​எம்இ ஏற்​றுமதி ஊக்​கு​விப்பு கவுன்​சில் ஆய்​வில் தெரிய வந்​துள்​ளது. “முற்​போக்கு தமிழகத்தில் முதலீடு, மேம்​பாடு மற்​றும் வளர்ச்​சி” என்ற 2021-22 முதல் 2024-25 வரையி​லான ஆய்​வின் 2-வது பதிப்​பை, எம்​எஸ்​எம்இ ஏற்​றுமதி ஊக்​கு​விப்பு கவுன்​சில் தலை​வர் டி.எஸ்​.​ராவத் வெளி​யிட்​டார்.

இது இந்​திய பொருளா​தார கண்​காணிப்பு மையம் வழங்​கிய தகவல்​களை அடிப்​படை​யாகக் கொண்​டது. இந்த ஆய்​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: இந்​தி​யா​வின் வேக​மாக வளர்ந்து வரும் மாநிலங்​களில் ஒன்​றான தமிழகம், 2021-22 மற்​றும் 2024-25-க்கு இடை​யில் சுமார் ரூ.6.70 லட்​சம் கோடி முதலீட்டு திட்​டங்​களை ஈர்த்​துள்​ளது.

ரூ.1 லட்​சத்து 56 ஆயிரத்து 646 கோடி மதிப்​பிலான தற்​போதைய திட்​டங்​களை நிறைவு செய்​துள்​ளது. ரூ.35,620 கோடி மதிப்​பிலான நிலு​வை​யில் உள்ள திட்​டங்​களை மீண்​டும் உயிர்ப்​பித்​துள்​ளது. மொத்த முதலீட்டு திட்​டங்​களான ரூ.6.70 லட்​சம் கோடி​யில், தனியார் துறை பங்​களிப்பு சுமார் ரூ.5.20 லட்​சம் கோடியை எட்​டி​யுள்​ளது.

2021-22 நிதி​யாண்​டில், தமிழகம் ரூ.1,58,412 கோடிக்​கும், 2022-23-ல் ரூ.2,17,521 கோடிக்​கும், 2023-24-ல் ரூ.2,17,095 கோடிக்​கும், 2024-25-ல் ரூ.71,148 கோடிக்​கும் புதிய முதலீட்டு திட்​டங்​களை ஈர்த்​தது. 2021-22-ல் ரூ.31,586 கோடிக்​கும், 2022-23-ல் ரூ.30,535 கோடிக்​கும், 2023-24-ல் ரூ.57,993 கோடிக்​கும், 2024-25-ல் ரூ.36,532 கோடிக்​கும் திட்​டங்​கள் நிறைவடைந்​தன.

2000-ம் ஆண்டு முதல் 13.84 பில்​லியன் டாலர் ஒட்​டுமொத்த அந்​நிய நேரடி முதலீட்டு வரவுடன், தமிழகம் அந்​நிய நேரடி முதலீட்​டுக்கு மிக​வும் கவர்ச்​சிகர​மான மாநில​மாக உள்ளது. மாநிலத்​தின் பொருளா​தா​ரத்​தின் முது​கெலும்​பாக நுண், சிறு மற்​றும் நடுத்தர நிறு​வனங்​கள் உள்​ளன. இருப்​பினும், கடுமை​யான பிணை​யத் தேவை​கள் மற்​றும் வங்​கி​களின் தயக்​கம் காரண​மாக, எம்​எஸ்​எம்​இகள் அடிக்​கடி முறை​யான நிதி​யுத​வியைப் பெறு​வ​தில் சிரமப்​படு​கின்​றன.

பேரிடர் பாதித்த பகு​தி​கள் கடுமை​யான மூலதனப் பற்​றாக்​குறையை எதிர்​கொள்​கின்​றன.செலவு அதி​கரிக்​கும் அபா​யத்​தைத் தவிர்க்க, நிலு​வை​யில் உள்ள முதலீட்​டுத் திட்​டங்​களை விரை​வாகச் செயல்​படுத்த உயர் அதி​காரம் கொண்ட குழுவை அமைக்க கவுன்​சிலின் தலை​வர் ராவத் பரிந்​துரைத்​துள்​ளார்​. இவ்​வாறு அந்​த அறிக்​கை கூறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x