Published : 25 Aug 2025 06:18 AM
Last Updated : 25 Aug 2025 06:18 AM

மழைநீர் வடிகால் பணிக்காக மண் தோண்டப்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைக்க மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை: மழைநீர் வடி​கால் பணிக்​காக மண்தோண்​டப்​பட்ட இடங்​களில் தடுப்​பு​கள் அமைக்க வேண்​டும் என ஒப்​பந்​த​தா​ரர்​களுக்கு மாநக​ராட்சி அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்து சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட அறிக்​கை: சென்னை மாநக​ராட்​சிக்​கு உட்​பட்ட பகு​தி​களில், மழைநீர் வடி​கால் பணி​கள் மேற்​கொள்​ளப்​படும் இடங்​களில், பொது​மக்​களின்பாது​காப்பை உறுதி​செய்​யும் வகை​யில் மண் தோண்​டப்​பட்ட இடங்களில் மக்​களுக்​கும், போக்​கு​வரத்​துக்​கும் இடையூறின்றி முறை​யான தடுப்​பு​கள் அமைத்து பணி​கள் மேற்​கொள்​ளப்பட வேண்​டும் என்று மாநக​ராட்​சி​யின் அனைத்து ஒப்​பந்​த​தா​ரர்​களுக்​கும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

மழைநீர் வடி​கால் பணி​கள் மேற்​கொள்​ளும் ஒப்​பந்​த​தா​ரர்​கள் பணி நடை​பெறும் இடங்​களில் தடுப்​பு​கள் அமைக்​காமல் பொது​மக்களுக்கு ஏதேனும் அசம்​பா​விதம் ஏற்​பட்​டால் அப்​பணியை மேற்​கொள்​ளும் ஒப்​பந்​த​தா​ரர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொது​மக்​கள் தங்​கள் பாது​காப்​புக்கு அச்​சுறுத்​தல் ஏற்​படும் வகை​யில், மண் தோண்​டப்​பட்டு மழைநீர் வடி​கால் பணி​கள் மேற் கொள்​ளப்​படும் இடங்​களில் உரிய பாது​காப்பு தடுப்​பு​கள் இல்​லாமல் இருந்​தால் சென்னை மாநக​ராட்​சி​யின் புகார் தொலைபேசி எண் 1913-ல் புகார் தெரிவிக்​கலாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x