Published : 25 Aug 2025 05:49 AM
Last Updated : 25 Aug 2025 05:49 AM

மக்கள் மீது முதல்வர் ஸ்டாலினுக்கு அக்கறை கிடையாது: பழனிசாமி குற்றச்சாட்டு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் பொதுமக்களிடையே நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.

திருச்சி: ​முதல்​வர் ஸ்டா​லினுக்கு எப்​போதும் குடும்ப சிந்​தனை​தான். வாக்​களித்த மக்​கள் மீது அவருக்கு அக்​கறை கிடை​யாது என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களை காப்​போம் தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சார சுற்றுப்பயணம் மேற்​கொண்டு வரும் பழனி​சாமி, திருச்சி மாவட்​டம் மண்​ணச்​சநல்​லூர் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் நேற்று பொது​மக்​களிடையே பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் வறட்​சி​யின்​போது விவ​சா​யிகளுக்கு ரூ.2,400 கோடி நிவாரணம் வழங்கினோம். இந்​தி​யா​விலேயே அதிக உணவு தானிய உற்​பத்​தியை பெருக்​கி, தமிழகம் முதலிடம் வகித்​ததற்கு அதி​முக ஆட்சியின் நிர்​வாகத் திறமையே காரணம்.

திமுக எம்​எல்ஏ மருத்​து​வ​மனை​யில் கிட்னி அறுவை சிகிச்​சை​யில் முறை​கேடு நடந்​த​தாக ஐஏஎஸ் அதி​காரி தலை​மையி​லான மருத்​து​வக் குழு​வினர் கண்​டறிந்​து, அந்த மருத்​து​வ​மனைக்கு உடல் உறுப்பு அறுவை சிகிச்​சைக்​கான அனு​ம​தியை ரத்து செய்தனர். ஆனால், பின்​னர் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. உடல் உறுப்பு திருட்டு தொடர்​பாக அடுத்து அமை​யும் அதி​முக ஆட்​சி​யில் தக்க நடவடிக்கை எடுக்​கப்​படும்.

அதி​முக கோரிக்​கையை ஏற்று காவிரியை தூய்​மைப்​படுத்த ‘நடந்​தாய் வாழி காவிரி’ திட்​டத்தை பிரதமர் மோடி அறி​வித்​தார். திமுக ஆட்​சி​யில் அந்த திட்​டத்தை கிடப்​பில் போட்​டு​விட்​டனர். அதி​முக தொடர்ந்து மத்​திய அரசுக்கு அழுத்​தம் கொடுத்து வந்ததால், மத்​திய அரசு நடப்​பாண்டு ‘நடந்​தாய் வாழி காவிரி’ திட்​டத்தை அனு​ம​தித்​து, அதற்கு ரூ.11,500 கோடி நிதி ஒதுக்​கீடு செய்துள்​ளது.

காவிரி, பவானி, அமராவ​தி, நொய்​யல் மற்​றும் கிளை ஆறுகளில் வரும் நீர் சுத்​தி​கரிக்​கப்​பட்​டு, மக்​களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க வழி​வகை செய்​தது அதி​முக அரசு. மேலும், 40 லிட்​டர் பால் தரும் வகை​யில் கலப்​பின பசுக்​களை உரு​வாக்​கும் கால்​நடை பூங்​காவை சேலம் மாவட்​டம் தலை​வாசலில் ரூ.1,000 கோடி​யில் அமைத்​தோம். அந்த திட்​டத்தை திமுக அரசு கிடப்​பில் போட்​டது. மீண்​டும் அதி​முக ஆட்​சிக்கு வந்​தால், அத்​திட்​டத்தை செயல்​படுத்​தி, கலப்​பின பசுக்​களை உரு​வாக்​கி, விவ​சா​யிகளுக்கு இலவச​மாக வழங்​கு​வோம்.

திமுக அரசு ஏழைகளுக்​காக ஏதாவது ஒரு திட்​டம் கொண்​டு​வந்​த​தா? முதல்​வர் ஸ்டா​லினுக்கு எப்​போதும் தனது குடும்​பத்​தைப் பற்​றிய சிந்​தனை​தான் உள்​ளது. வாக்​களித்த நாட்டு மக்​களைப் பற்றி அவருக்கு அக்கறை கிடை​யாது. தொழிலா​ளி, விவ​சா​யி, மாணவர் என ஒட்​டுமொத்த மக்​களுக்​கும் அதி​முக ஆட்​சி​யில் பலன் கிடைத்​தது. ஆனால், தற்​போது கருணாநிதி குடும்​பம் தான் பிழைக்​கிறது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x