Published : 23 Aug 2025 06:08 AM
Last Updated : 23 Aug 2025 06:08 AM

ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் மூதாட்டியின் வாயிலிருந்து பெரிய உமிழ்நீர் சுரப்பி கட்டி அகற்றம்: மியாட் மருத்துவமனை சாதனை

மியாட் மருத்துவமனையில் சிக்கலான ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்துகொண்ட சாந்தா குமாரியுடன் அவரது மகள், மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ், தலை மற்றும் கழுத்து புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் அருண் மித்ரா உள்ளிட்டோர்.

சென்னை: கடுமை​யான முகச்​சிதைவு எது​வு மில்​லாமல் 64 வயதான மூதாட்​டி​யின் வாயி​லிருந்து பெரிய கட்​டியை சிக்​கலான ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மியாட் மருத்​து​வ​மனை சாதனை படைத்​துள்​ளது.

இதுகுறித்து அம்​மருத்​து​வ​மனை​யின் தலை​வர் மல்​லிகா மோகன்​தாஸ், தலை மற்​றும் கழுத்து புற்​று​நோய் அறுவை சிகிச்சை நிபுணர் அருண் மித்ரா ஆகியோர் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: வேலூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த சாந்தா குமாரி (64) என்​பவர் கடந்த 2 ஆண்​டு​களாக சாப்​பிடும் போது உணவை விழுங்​கும் போது அசவு​கரிய​மாக​வும், தூங்​கும் போது குறட்டை அதி​கரித்து வந்​த​தா​லும் அவதிப்​பட்டு வந்​தார்.

இந்​நிலை​யில் கடந்த மே மாதம் ஒரு தனி​யார் மருத்​து​வ​மனை​யில் பல் மருத்​து​வரைச் சந்​தித்​த​போது, அவரது வாயின் மேல் தாடை​யில் பெரிய கட்டி இருப்​பது குறித்து தெரிய​வந்​தது. அதைத் தொடர்ந்து சென்னை மியாட் மருத்​து​வ​மனை​யில் தலை மற்​றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர்​களு​டன் கலந்​தாலோ​சித்​தனர். இதையடுத்து மேற்​கொள்​ளப்​பட்ட பரிசோதனை​யில் அவருக்கு 5 - 6 செ.மீ. அளவுள்ள, கிட்​டத்​தட்ட ஒரு டென்​னிஸ் பந்​தின் அளவில் இருக்​கும் உமிழ்​நீர் சுரப்பி கட்டி இருப்​பது கண்​டறியப்​பட்​டது.

இது வழக்​கத்தை விட பெரிய அளவி​லான கட்​டி​யாக இருந்​தது. இதை திறந்த அறுவை சிகிச்சை முறை அல்​லது சிக்​கலான டிரான்​ சோ​ரால் ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்​ற வேண்​டும். வழக்​க​மான திறந்த அறுவை சிகிச்சை முறை​யில் அக்​கட்​டியை அகற்​றும்​போது கீழ் தாடையை உடைத்​துத்​தான் அறுவை சிகிச்சை மேற்​கொள்​ளப்​படும். அப்​போது சுவாசத்​துக்​காக தொண்​டை​யில் குழாய் வைக்​கப்​படும்.

இதுத​விர பிளேட், ஸ்க்ரூ போன்​றவை​களும் தாடை​யில் வைக்​கப்​படும். இதனால் ஏற்​படும் காயம் ஆற 2 முதல் 3 வாரங்​கள் எடுத்​துக்​கொள்​ளும். வலி​யும் அதி​க​மாக இருக்​கும். 10 நாட்​கள் மருத்​து​வ​மனை​யிலேயே தங்​கி​யிருக்க வேண்​டி​யிருக்​கும். காயங்​கள் ஆறி​னாலும் முகச்​சிதைவு மறை​யாமலே இருக்​கும். எனவே இதற்கு பதிலாக டிரான்​சோ​ரால் ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையை மேற்​கொள்ள திட்​ட​மிட்​டோம். அதன்​படி நோயாளி​யின் வாயில் வெறும் 8 மி.மீ அளவு​கொண்ட 3 ஸ்ட்ரா போன்ற ரோபோடிக் கைகளை உள்​நுழைத்து அறுவை சிகிச்சை மேற்​கொள்​ளப்​பட்​டது.

3 நாளில் வீடு திரும்பினார்: இந்த ரோபோடிக் கைகள் எந்​தப் பக்​கம் வேண்​டு​மா​னாலும் திரும்​பும் திறன் பெற்​றது என்​ப​தால், எளி​தாக திட்​ட​மிட்டு அறு​வை சிகிச்​சையை வெற்​றிகர​மாக முடித்து டென்​னிஸ் பந்து அளவு​கொண்ட அந்த பெரிய கட்​டியை அகற்​றினோம். இச்​சிகிச்சை முறை​யில் நோயாளிக்கு வலி எது​வும் ஏற்​பட​வில்​லை.

முகச்​சிதை​வும் உண்​டாக​வில்​லை. கேமரா மூலம் நுட்​ப​மாக அறுவை சிகிச்​சையைக் கையாண்​ட​தால் சுவை நரம்​பு​களில் கூட எந்த பாதிப்​பும் ஏற்​பட​வில்​லை. அறுவை சிகிச்சை முடிந்து 2 நாட்​களில் நோயாளி உணவு உட்​கொள்ள ஆரம்​பித்​து​விட்​டார். 3-ம் நாட்​களில் வீடு திரும்​பி​னார். தற்​போது நோயாளி நலமுடன் இருக்​கிறார். இச்​சிகிச்சை பொது​மக்​களுக்கு மிக​வும்​ பயனுள்​ள​தாக இருக்​கும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x