Published : 23 Aug 2025 05:52 AM
Last Updated : 23 Aug 2025 05:52 AM

மீனவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்: பழனிசாமி உறுதி

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று செய்யூர் பேருந்து நிலையம் அருகே மக்களை சந்தித்து பேசினார்.

காஞ்​சிபுரம்: வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்​றால் ஏழை மீனவர்​களுக்கு கான்​கிரீட் வீடு​கள் கட்​டிக்​கொடுக்கப்​படும் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​தார். ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற தலைப்​பில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் க.பழனி​சாமி நேற்று செய்​யூர், மது​ராந்​தகம், செங்​கல்​பட்டு ஆகிய சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் மக்​களை சந்​தித்து பேசி​னார்.

செய்​யூர் பேருந்து நிலையம் அருகே மக்​கள் மத்​தி​யில் அவர் பேசி​யது: இந்​தப் பகுதி விவ​சா​யிகள் அதி​கம் நிறைந்த பகு​தி. ஆனால், திமுக அரசு விவ​சா​யிகளுக்கு எது​வும் செய்​ய​வில்​லை. கடந்த அதி​முக ஆட்​சி​யில் தொடக்க வேளாண்மை கூட்​டுறவு சங்​கங்​களில் இரு​முறை பயிர்​கடன்​களை தள்​ளு​படி செய்​தோம். விவ​சா​யிகளுக்​காக குடிம​ராமத்து திட்​டம் கொண்டு வரப்​பட்​டது. அதன் மூலம், ஏரி, குளங்​கள், கண்​மாய்​கள் தூர்​வாரப்​பட்டு நீர்த்​தேக்​கப்​பட்​டன.

அதிலிருந்து கிடைத்த வண்​டல் மண் விவ​சா​யத்​துக்​குப் பயன்​பட்​டது. ஒருபக்​கம் ஏரி​கள் ஆழமாகின, இன்​னொருபக்​கம் விவ​சா​யிகளுக்கு நல்ல விளைச்​சல் கிடைத்​தது. வறட்சி உள்​ளிட்ட பேரிடரின் போது பயிர்க் காப்​பீடு திட்​டத்​தில் விவ​சா​யிகள் இணைக்​கப்​பட்டு அதன்​மூலம் அவர்​களுக்கு இழப்​பீடு பெற்​று கொடுத்​தோம்.

இந்​தி​யாவிலேயே அதி​கப்​படி​யான இழப்​பீட்​டைப் பெற்​றுக் கொடுத்​தது அதி​முக அரசு​தான். கிராமங்​களில் வசிக்​கும் ஏழை எளிய மக்​கள் சிகிச்சை பெறும் வகை​யில், தமிழ்​நாடு முழு​வதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் தொடங்​கி மக்​களுக்கு சிறப்​பான சிகிச்சை அளித்​தோம். திமுக அரசு காழ்ப்​புணர்ச்சி காரணமாக அதனை மூடி விட்​டது. மீண்​டும் அதி​முக ஆட்சி அமைந்​ததும் 4 ஆயிரம் அம்மா மினி கிளினிக் திறக்​கப்​படும்.

அதி​முக ஆட்​சியின் 10 ஆண்​டு ​காலத்​தில் ரூ.7,300 கோடி நிதி ஒதுக்​கீட்​டில், 52.35 லட்​சம் அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்​புள்ள லேப்​டாப் கொடுக்​கப்​பட்​டது. அதை​யும் திரா​விட மாடல் அரசு நிறுத்​தி​விட்​டது. இப்​போது கொடுப்​ப​தாக அறி​வித்​திருக்​கிறார்​கள். ஆட்சி முடிய இன்​னும் 7 மாதங்​களே உள்ள நிலை​யில் கொடுப்​பார்​களா என்​பது சந்​தேகமே.

செங்​கல்​பட்டு மாவட்​டத்தை உரு​வாக்​கியதே அதி​முக​தான். தடுப்​பணை​கள், நீதி​மன்​றங்​களை அமைத்​துள்​ளோம். வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்​றால் ஏழை மீனவர்​களுக்கு கான்​கிரீட் வீடு​கள் கட்​டிக்​கொடுக்கப்​படும். இவ்​வாறு பழனி​சாமி கூறி​னார். இந்​நிகழ்ச்​சி​யில், மாநிலங்​களவை உறுப்​பினர்​ தனபால்​, மது​ராந்​தகம்​ எம்​எல்​ஏ மரகதம்​ குமர​வேல்​, அதி​முக கிழக்​கு மாவட்​டச்​ செயலர்​ ஆறு​முகம்​, ஒன்​றியச்​ செயலர்​ ராகவன்​ உட்பட பலர்​ பங்​கேற்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x