Published : 23 Aug 2025 06:20 AM
Last Updated : 23 Aug 2025 06:20 AM
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் ஆக.30-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளை பல்வேறு அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்கியுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தொகுதிவாரியாக பிரச்சாரத்தையே கடந்த ஜூலை மாதம் தொடங்கிவிட்டார். 3-ம் கட்ட பிரச்சாரத்தை நேற்றுடன் நிறைவு செய்த பழனிசாமி.
செப்.1-ம் தேதி முதல் 4-ம் கட்ட பிரச்சாரத்தை மதுரையில் தொடங்குகிறார். இதனிடையே வரும் ஆக.30-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தையும் பழனிசாமி கூட்டியுள்ளார். அதன்படி, ஆக.30-ம் தேதி, காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள், மீதம் உள்ள தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள், கட்சியில் இளைஞர்களை அதிக அளவில் சேர்ப்பது, ஐடி விங்-ன் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் முறைகேடு பூதாகரம் ஆகியுள்ள நிலையில், தமிழகத்தில் திமுக போலி வாக்காளர்களை சேர்த்துள்ளதா என ஆய்வு செய்யுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு பழனிசாமி அறிவுறுத்த இருப்பதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT