Published : 23 Aug 2025 05:50 AM
Last Updated : 23 Aug 2025 05:50 AM

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பயணிகளின் வசதிக்காக 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன

சென்னை பல்லாவரம் மேம்பால தடுப்பில் மோதிய கல்லூரி பேருந்தால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பல்லாவரம் மேம்பாலம் தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு, பல்லாவரத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் மார்க்கத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. | படம்: எம்.முத்துகணேஷ் |

சென்னை: ஜிஎஸ்டி சாலை​யில் தனி​யார் கல்​லூரி பேருந்து விபத்​துக்​குள்​ளான​தால் ஏற்​பட்ட கடும் போக்​கு​வரத்து நெரிசலில் சிக்​கிய பயணி​களின் வசதிக்​காக, 10-க்​கும் மேற்​பட்ட விமானங்​கள் தாமத​மாக புறப்​பட்டு சென்​றன.

சென்னை விமான நிலை​யம் அருகே பல்​லா​வரம் மேம்​பாலத்​தில் நேற்று காலை தனி​யார் கல்​லூரி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இதனால், சென்னை விமான நிலை​யம் - குரோம்​பேட்டை இடையே ஜிஎஸ்டி சாலை​யில் இரண்​டரை மணி நேரம் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது.

வாக​னங்​கள் சுமார் 3 கிலோ மீட்​டர் தூரத்​துக்கு அணிவகுத்து நின்​றன. இதனால், அலு​வல​கம், கல்​லூரி செல்​பவர்​கள் பாதிக்கப்பட்டனர். விமானங்​களில் பயணம் செய்ய சென்னை விமான நிலை​யத்​துக்கு செல்​லும் பயணி​கள் அவதிக்​குள்​ளாகினர். ஏராள​மான விமான பயணி​கள், தாங்​கள் பயணம் செய்ய இருக்​கும் விமான நிறு​வனங்​களை செல்​போனில் தொடர்பு கொண்​டு, போக்​கு​வரத்து நெரிசல்​களில் சிக்கி தவித்து கொண்டு இருப்​ப​தாக தெரி​வித்​தனர்.

பயணி​களின் கோரிக்​கையை விமான நிறு​வனங்​கள் ஏற்​றன. போக்​கு​வரத்து நெரிசலில் சிக்கி தவித்த விமான பயணி​கள், விமானங்​களில் வந்து ஏறு​வதற்கு வசதி​யாக, சென்​னை​யில் இருந்து நேற்று காலை புறப்பட வேண்​டிய விமானங்​களான கவு​காத்​தி, ஹைத​ரா​பாத், தூத்​துக்​குடி, கொல்​கத்​தா, புனே, ராஜ​முந்​திரி, மதுரை, கோலாலம்​பூர், மஸ்​கட், இலங்கை உள்​ளிட்ட இடங்களுக்கு செல்லும்10-க்​கும் மேற்பட்ட விமானங்​கள் அரை மணி நேரம் வரை தாமத​மாக புறப்​பட்டு சென்​றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x