Published : 23 Aug 2025 06:14 AM
Last Updated : 23 Aug 2025 06:14 AM

சென்னை வெறும் ஊரல்ல, தமிழகத்தின் இதயத்துடிப்பு: சென்னை தினத்துக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை: சென்னை தினத்​துக்கு வாழ்த்து தெரி​வித்த ஆளுநர், முதல்​வர் மற்​றும் அரசி​யல் தலை​வர்​கள் சென்னை வெறும் ஊரல்ல, தமிழகத்​தின் இதயத்​துடிப்பு என தெரி​வித்​துள்​ளனர்.

சென்னை நேற்று தனது 386-வது ஆண்டை கொண்​டாடியது. இதையொட்டி அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வெளி​யிட்ட வாழ்த்து செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது:

ஆளுநர் ஆர்​.என்​.ர​வி: வளமான பாரம்​பரிய​மும், துடிப்​பான கலாச்​சா​ர​மும், நவீனமய​மான புது​மை​களும், பசுமை​யான நீடித்த உறவு​களும் தடை​யின்றி சங்​கமிக்​கும் இடம் சென்​னை. சென்​னை​யின் பாரம்​பரி​யத்தை கொண்​டாடும் வேளை​யில், அதன் மாற்​றத்தை உரு​வாக்​கும் வளர்ச்​சிக்​கான தொலைநோக்​குப் பார்​வையை​யும் நாம் ஆரத்​தழுவி ஏற்​றுக்​கொள்​வோம்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: எந்​தெந்த மூலைகளில் இருந்தோ நண்​பர்​களை அளித்​து, வாழவழிதேடு​வோருக்கு நம்​பிக்​கையை அளித்​து, பல பெண்​களுக்கு பறக்​கச் சிறகு​களை அளித்​து, எத்​தனையோ பேருக்கு முதல் சம்​பளத்தை அளித்​து, சொந்த ஊரில் அடை​யாளத்தை அளித்​து, மொத்​தத்​தில் நமக்​கெல்​லாம் வாழ்​வளித்த சீரிளம் சென்னை வெறும் ஊரல்ல. தமிழகத்​தின் இதயத்​துடிப்​பு. வாழ​வைக்​கும் சென்​னைக்கு வணக்​கம்.

முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம்: சிறிய கிராம​மாக தோன்றி தற்​போது இந்​திய நாட்​டின் தலைசிறந்த மெட்ரோ நகரங்​களில் ஒன்​றாக விளங்​கு​வதுடன், இளைஞர்​களுக்கு கல்வி மற்​றும் வேலை​வாய்ப்பை அளிக்​கும் அட்​சய​பாத்​திர​ராக​வும் சென்னை திகழ்ந்து வரு​கிறது. அனை​வருக்​கும் சென்னை தின நல்​வாழ்த்​துக்​கள்.

பாமக தலை​வர் அன்​புமணி: தமிழகத்​தின் வளர்ச்​சிக்கு மிகப்​பெரிய அளவில் பங்​களிப்​பது சென்​னை. ஆனால் சென்​னையை, வாழத்​தகு​தி​யற்ற மாநக​ராக மாற்​றியது தான் இன்​றைய ஆட்​சி​யாளர்​களின் சாதனை. கோடை வந்​தால் வறட்​சி, மழை வந்​தால் வெள்​ளம். இது​தான் இன்​றைய சென்​னை​யின் அடை​யாளம். சென்​னை​யின் சாலைகளில் பயணம் செய்​வதே சாகச​மாக மாறி​யிருக்​கிறது. இந்​நிலையை மாற்றி சென்​னையை வாழத்​தகுந்த மாநகர​மாக மாற்ற சென்னை நாளில் நாம் அனை​வரும் உறு​தி​யேற்​போம்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: தமிழகத்​தின் தலைநகரம் எனப் பன்​முக பெரு​மை​களோடு ஒட்​டுமொத்த உலகை​யும் பிர​மிக்க வைக்​கும் நகரம் சென்​னை. படிப்​பிற்​காகவோ, பணிக்​காகவோ தன்னை நாடி வரும் அனை​வரை​யும் அன்​புடன் அரவணைக்​கும் அன்​னை​யாக, ஏராள​மான இளைஞர்​களின் வாழ்​வியல் வழி​காட்​டி​யாக, தொழில் முனை​வோர்​களின் தொடக்​கப்​புள்​ளி​யாகத் திகழும் சென்னை உரு​வான நாளில் அதன் பெரு​மை​களை​யும், சிறப்​பு​களை​யும் போற்​றிக் கொண்​டாடுவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x