Published : 23 Aug 2025 05:16 AM
Last Updated : 23 Aug 2025 05:16 AM

பழைய ஓய்வூதியம் கோரி ககன்​தீப்சிங் பேடி குழுவில் 17 சங்கங்கள் மனு

சென்னை: மீண்​டும் பழைய ஓய்​வூ​திய திட்​டத்​தையே அமல்​படுத்த வேண்​டும் என்று 2-வது நாள் கருத்​துகேட்பு கூட்​டத்​தில் 17 அரசு ஊழியர்- ஆசிரியர் சங்​கங்​கள் ககன்​தீப்சிங் பேடி தலை​மையி​லான குழுவிடம் மனு அளித்தனர். பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம், பங்களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டம், ஒருங்​கிணைந்த ஓய்​வூ​திய திட்​டம் (யுபிஎஸ்) ஆகிய 3 வித​மான ஓய்​வூ​திய திட்​டங்​கள் குறித்து ஆய்வு செய்ய மூத்த ஐஏஎஸ் அதி​காரி ககன்​தீப்​சிங் பேடி தலை​மை​யில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்​துள்​ளது.

அந்த குழு தனது அறிக்​கையை செப்​.30-ம் தேதிக்​குள் சமர்ப்​பிக்​கு​மாறு அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இதைத்​தொடர்ந்து இக்​குழு அரசு ஊழியர்- ஆசிரியர் சங்​கங்​களின் நிர்​வாகி​களின் கருத்​துகளை கேட்​டறிந்து வரு​கிறது. அந்​தவகை​யில் முதலா​வது கருத்து கேட்பு கூட்​டம் ஆக.18-ம்

தேதி தலை​மைச் செயல​கத்​தில் நடந்​தது. அதில் பங்​கேற்க அழைப்பு விடுக்​கப்​பட்​டிருந்த தலை​மைச் செயலக சங்​கம் உள்பட 40 சங்கங்​களின் நிர்​வாகி​கள் தங்​கள் கருத்​துகளை மனு​வாக சமர்ப்​பித்​தனர். அப்போது அனைத்து சங்க நிர்​வாகி​களுமே பழைய ஓய்வூ​திய திட்​டத்​தையே கோரினர்.

இந்​நிலை​யில், ககன்​தீப் சிங் குழு​வின் 2-வது கருத்​துகேட்பு கூட்​டம் நேற்​றும் நடை​பெற்​றது. இதில் பங்​கேற்க ஜாக்​டோ-ஜியோ, தமிழ்​நாடு ஆசிரியர் முன்​னேற்ற சங்​கம், தமிழக ஆரம்​பப்​பள்ளி ஆசிரியர் கூட்​ட​ணி, தமிழ்​நாடு அனைத்து ஆசிரியர்​கள் சங்​கம், நர்ஸ்கள் பொது நலசங்​கம், தமிழக தமிழாசிரியர் சங்​கம், தமிழக ஆசிரியர் கூட்​டணி உள்பட 17 சங்​கங்​களுக்கு அழைப்பு அனுப்​பப்​பட்டிருந்​தது.

அதன்​படி அச்​சங்​கங்​களின் நிர்​வாகி​கள் கருத்​துகேட்பு கூட்​டத்​தில் பங்​கேற்று தங்​கள் கருத்​துகளை எடுத்​துரைத்​தனர். மேலும் அதுதொடர்​பான மனுக்​களை​யும் சமர்ப்​பித்​தனர். மீண்​டும் பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும் என்று நேரடியாக​வும் மனுக்​கள் வாயி​லாக​வும் வலி​யுறுத்​தி​ய​தாக ஜாக்​டோ-ஜியோ நிர்​வாகிகள்​ கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x