Published : 22 Aug 2025 10:21 AM
Last Updated : 22 Aug 2025 10:21 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி யாருக்கு? - வாரிசுகளுக்காக வரிந்து கட்டும் ஜான் பாண்டியன் - கிருஷ்ணசாமி!

2024 மக்களவைத் தேர்தலில் தென்காசியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக டாக்டர் கிருஷ்ணசாமியும், பாஜக கூட்டணி வேட்பாளராக ஜான் பாண்டியனும் கோதாவில் குதித்தார்கள். அதேபோல், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இருவருமே தங்களது வாரிசுகளை ஒரே தொகுதியில் களமிறக்கிவிட்டு ஆழப் பார்க்க ஆயத்தமாகி வருகிறார்கள்.

2021 சட்​டப்​பேரவை தேர்​தலில் ஜான் பாண்​டிய​னும் கிருஷ்ண​சாமி​யும் என்​டிஏ கூட்​ட​ணி​யில் இருந்​தார்​கள். மக்​கள​வைத் தேர்​தலுக்கு முன்​ன​தாக என்​டிஏ கூட்​ட​ணியை விட்டு அதி​முக வில​கிய​போதும் இரு​வ​ரும் என்​டிஏ கூட்​ட​ணி​யில் தொடர்ந்​தார்​கள். அந்​தக் கூட்​ட​ணி​யில் 7-வது முறை​யாக தென்​காசி தொகு​தி​யில் போட்​டி​யிட ஆயத்​த​மா​னார் கிருஷ்ண​சாமி.

ஆனால், பாஜக-வை சேர்ந்த ஆனந்​தன் அய்​யா​சாமி, தானே தென்​காசி​யில் போட்​டி​யிடப் போவ​தாகச் சொல்லி ஆளுக்கு முந்தி சுவர் விளம்​பரங்​களை எழு​தி​னார். இதில் அப்​செட்​டான கிருஷ்ண​சாமி என்​டிஏ கூட்​ட​ணியை விட்டு விலகி அதி​முக கூட்​டணி வேட்​பாள​ராக தென்​காசி​யில் போட்​டி​யிட்​டார்.

இதையடுத்​து, பாஜக-​வும் தனது முடிவை மாற்​றிக் கொண்டு ஆனந்​தன் அய்​யா​சாமிக்​குப் பதிலாக ஜான் பாண்​டியனை நிறுத்​தி​யது. ஆனால் கடைசி​யில், இரு​வ​ருமே தோற்று தொகு​தியை திமுக தக்​க​வைத்​தது.

அந்​தத் தேர்​தலில் கிருஷ்ண​சாமிக்கு ஆதர​வாக அவரது மகனும் புதிய தமி​ழ​கம் கட்​சி​யின் இளைஞரணி தலை​வ​ரு​மான ஷியாம் தீவிர பிரச்​சா​ரம் செய்​தார். அதே​போல், ஜான் பாண்​டிய​னுக்கு ஆதர​வாக அவரது மகளும் தமிழக மக்​கள் முன்​னேற்​றக் கழகத்​தின் மகளிர் அணி தலை​வி​யு​மான வினோலின் நிவேதா களப்​பணி செய்​தார்.

தற்​போது மீண்​டும் அதி​முக - பாஜக கூட்​டணி அமைந்​துள்ள நிலை​யில், ஸ்ரீவில்​லிபுத்​தூர் தொகு​தி​யில் ஜான் பாண்​டியன் தனது மகளை நிறுத்த திட்​ட​மிடு​வ​தாக அவரது கட்​சி​யினரே சொல்​கி​றார்​கள். அதே​போல் கிருஷ்ண​சாமி​யும் தனது மகனை இங்கு நிறுத்த களப்​பணி செய்​வ​தாக புதிய தமி​ழ​கம் கட்​சி​யினர் காதைக்​கடிக்​கி​றார்​கள். அண்​மை​யில் ஸ்ரீவில்​லிபுத்​தூர் தொகு​தி​யில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்ட கிருஷ்ண​சாமி, “எந்​தக் கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றாலும் ஸ்ரீவில்​லிபுத்​தூரில் புதிய தமி​ழ​கம் கட்சி போட்​டி​யிடும்” என உறு​தி​யாக தெரி​வித்​தார். மகன் ஷியாமை மனதில் வைத்தே அவர் இப்​படிச் சொன்​ன​தாக அவருக்கு நெருக்​க​மான​வர்​கள் சொல்​கி​றார்​கள்.

வினோலின் நிவேதா, ஷியாம்

இதுகுறித்து ஷியாமிடம் கேட்​டதற்​கு, “ஸ்ரீவில்​லிபுத்​தூர் தொகு​தி​யில் புதிய தமி​ழ​கம் கட்சி போட்​டி​யிடும் என தலை​வர் கூறிய கருத்​தில் உறு​தி​யாக இருக்​கி​றோம். கூட்​டணி இறு​தி​செய்​யப்​பட்டு தொகுதி பங்​கீடு​கள் முடிந்த பிறகு வேட்​பாளர் யார் என்​பதை தலைமை அறிவிக்​கும்” என்​றார்.

ஜான் பாண்​டிய​னிடம் கேட்​டதற்​கு, “தமி​ழ​கத்​தில் எந்​தத் தொகு​தி​யிலும் போட்​டி​யிடும் வல்​லமை எங்​களுக்கு உண்​டு. மக்​களவை தேர்​தலில் தென்​காசி​யில் போட்​டி​யிட்டு கணிச​மான வாக்​கு​களைப் பெற்​றோம். இந்த முறை அதி​முக தலை​மை​யில் என்​டிஏ கூட்​டணி வலு​வடைந்து வரு​கிறது. எங்​களுக்கு கூட்​டணி தர்​மம் உள்​ளது. எனவே, தொகுதி பங்​கீடு முடி​யும் முன், இந்​தத் தொகு​தி​யில் போட்​டி​யிடு​கிறேன் எனக் கூறு​வது சரி​யாக இருக்​காது. ஆனால், எங்​களுக்கு வெற்றி வாய்ப்​புள்ள தொகு​தி​களில் ஸ்ரீவில்​லிபுத்​தூரும் ஒன்​று” என்​றார்.

தென்​காசி​யில் நேருக்கு நேராய் மோதி பரீட்​சித்​துப் பார்த்த கிருஷ்ண​சாமி​யும், ஜான் பாண்​டிய​னும் இப்​போது வாரிசுகளை ஸ்ரீவில்​லிபுத்​தூரில் இறக்​கி​விட்டு பலத்தை சோதிக்க திட்​ட​மிடுகிறார்​கள். ஆனால், இரு​வரில் யாருக்கு இந்​தத் தொகு​தியை கொடுப்​பது என முடி​வெடுப்​ப​தில் கூட்​டணி தலை​மைக்​குத்​தான் கூடு​தல் தலை​வலியாக இருக்​கப் போகிறது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x