Published : 22 Aug 2025 06:23 AM
Last Updated : 22 Aug 2025 06:23 AM

கைவிடப்பட்ட குவாரிகளை பாதுகாக்க கோரி வழக்கு: செயல் திட்டத்தை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு

மதுரை: தமிழகம் முழு​வதும் உள்ள கைவிடப்​பட்ட குவாரி​களை வேலி அமைத்து பாது​காப்​பது தொடர்​பான செயல் திட்​டத்தை தாக்​கல் செய்​யு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. மதுரை சொக்​கி​குளத்​தைச் சேர்ந்த சத்​தி​யமூர்த்​தி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக கனிமவளச் சட்​டத்​தின்​படி கைவிடப்​பட்ட குவாரி​களை பராமரிப்புச் செய்​வதற்​காக பசுமை நிதி உரு​வாக்​கப்​பட்​டது.

இந்த நிதி​யில் கைவிடப்​பட்ட குவாரி​களைப் பராமரிக்​க​வும், கண்​காணிக்​க​வும் ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் மாவட்ட ஆட்​சி​யர் தலை​மை​யில் கனிமவள உதவி இயக்​குநர், மாவட்ட வரு​வாய் அலு​வலர், பொதுப்​பணித்​துறை செயற் பொறி​யாளர், சுற்​றுச்​ சூழல் அலு​வலர், மாசு கட்​டுப்​பாட்டு வாரிய அலு​வலர், தீயணைப்பு துறை அலு​வலர் அடங்​கிய குழு அமைக்​கப்​படும்.

தமிழகத்​தில் 23 மாவட்​டங்​களில் மட்​டுமே கைவிடப்​பட்ட குவாரி​கள் பராமரிப்​புக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதில் 6 மாவட்​டங்​களில் மட்​டுமே கூட்​டங்​கள் நடத்​தப்​படு​கின்​றன. 14 மாவட்​டங்​களைத் தவிர பிற மாவட்​டங்​களில் பசுமை நிதி உருவாக்கப்படவில்லை.

பராமரிப்புக் குழு... எனவே, தமிழகம் முழு​வதும் அனைத்து மாவட்​டங்​களி​லும் கைவிடப்​பட்ட குவாரி​கள் பராமரிப்​புக் குழு அமைக்​கப்​பட்​டு, பசுமை நிதி வசூலிக்​கப்​படு​வதை உறுதி செய்​ய​வும், கைவிடப்​பட்ட குவாரி​களை சுற்றி வேலி அமைத்து பாது​காக்​க​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு, நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஜி.அருள் முரு​கன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அரசு தரப்​பில், “கை​விடப்​பட்ட குவாரி​களில் வேலி அமைப்​பது தொடர்​பாக அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. அதற்​கான மதிப்​பீடு உள்​ளிட்ட பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. பதில் மனு தாக்​கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்​கப்​பட்​டது.

அதற்கு நீதிப​தி​கள், “தமிழகத்​தில் கைவிடப்​பட்ட குவாரி​களைப் பாது​காப்​ப​தில் நீதி​மன்​றம் உறுதி​யாக உள்​ளது. எத்​தனை கைவிடப்​பட்ட குவாரி​கள் உள்​ளன? இந்த குவாரி​களில் வேலி அமைக்க எவ்வளவு காலம் தேவைப்​படும்? எவ்​வளவு நிதி செல​வாகும்? என்​பதை முடிவு செய்ய வேண்​டும்.

இது தொடர்​பான செயல் திட்​டத்தை அரசு தாக்​கல் செய்​தால், அதை நிறைவேற்ற உத்​தர​விடலாம். எனவே, அரசுத் தரப்​பில் கைவிடப்​பட்ட குவாரி​கள் பாது​காப்பு தொடர்​பான செயல் திட்​டத்தை தாக்​கல் செய்ய வேண்​டும். விசா​ரணை 2 வாரம் தள்​ளிவைக்​கப்​படு​கிறது” என்று உத்​தர​விட்​டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x