Published : 22 Aug 2025 05:59 AM
Last Updated : 22 Aug 2025 05:59 AM

30 சதவீத மானியத்துடன் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கலாம்: அமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு

சென்னை: தமிழகத்​தில் 30 சதவீத மானி​யத்​துடன்,, உழவர் நல சேவை மையங்​களை அமைக்க வேளாண் பட்​ட​தா​ரி​கள் முன்வர வேண்​டும் என, அமைச்​சர் எம்​.ஆர்​.கே. பன்​னீர்​செல்​வம் அழைப்பு விடுத்​துள்​ளார்.

இதுகுறித்​து, அவர் வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பில் கூறி யிருப்பதாவது: உழவர்​களின் நலன் காக்​கும் பல்​வேறு திட்​டங்​கள் அரசால் அமல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. அதன் தொடர்ச்​சி​யாக, வேளாண் பட்டய மற்​றும் பட்​டப் படிப்பை முடித்த இளைஞர்களின் திறன் உழவர்​களுக்கு உதவி​யாக இருந்து உற்​பத்​தியை உயர்த்​தும் வகை​யில், முதல்​வரின் உழவர் நல சேவை மையங்​கள் 1,000 அமைக்​கப்​படும் என்​று, 2025-26-ம் ஆண்டு நிதி​நிலை அறிக்​கை​யில் அறிவிக்​கப்​பட்​டது. இதற்​காக, ரூ.42 கோடி நிதி​யும் ஒதுக்கப்பட்டது.

இத்​திட்​டத்​தின் கீழ், ரூ.10 முதல் ரூ.20 லட்​சம் மதிப்​பில் உழவர்நல சேவை மையங்​கள் அமைக்க 30 சதவீத மானிய​மாக ரூ.3 முதல் ரூ.6 லட்​சம் வரை வழங்​கப்​படும். இந்த மையங்​களில் உழவர்​களுக்கு தேவை​யான விதைகள், உரங்​கள் உள்​ளிட்ட இடு​பொருட்கள் விற்​பனை செய்​யப்​படு​வதோடு, பயிர்​களில் ஏற்​படும் பூச்​சி, நோய் மேலாண்​மைக்​குத் தேவை​யான ஆலோசனைகளும் வழங்​கப்​படும். மேலும், நவீன தொழில்​நுட்​பங்​கள், வேளாண் விளைபொருட்​களை மதிப்​புக் கூட்​டு​தல் குறித்த ஆலோ​சனை​களும் வழங்​கப்​படும்.

இதுதவிர, முதல்​வரின் உழவர் நல சேவை மையங்​கள் மூலம் விவ​சா​யிகள் ஒரே இடத்​தில் அனைத்து சேவை​களை​யும் பெற முடியும். வேலை​யில்லா வேளாண் பட்​ட​தா​ரி​கள் சுயதொழில் செய்​வதற்​கும் வாய்ப்பு ஏற்​படுத்​தப்​படு​கிறது. இதில், இணை​யும் பயனாளி​களின் தொழில்​நுட்ப திறனை மேம்​படுத்​தும் வகை​யில் பயிற்​சி​யும் அளிக்​கப்​படும். எனவே, இந்தத் திட்​டத்​தில் பயன்பெற விரும்​பும் 20 முதல் 45 வயதுக்​குட்​பட்​டோர்​கள் வங்​கி​யில் விரி​வான திட்ட அறிக்​கை​யுடன் கடன் பெற விண்​ணப்​பிக்க வேண்​டும்.

வங்கி நடை​முறை​களை பின்​பற்றி கடன் ஒப்​புதல் பெற்ற பின்பு மானிய உதவி பெற https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணை​யதள முகவரி​யில் உரிய ஆவணங்​களைச் சமர்ப்​பித்து விண்​ணப்​பிக்​கலாம். முதல்​வரின் உழவர் நல சேவை மையங்​கள் அரசின் உதவி​யுடன் தொடங்​கப்​படும் சுயதொழில் என்​ப​தால் இந்த அரிய வாய்ப்பை வேளாண் பட்​ட​தா​ரி​கள், பட்​டய​தா​ரி​கள் பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x