Published : 22 Aug 2025 05:37 AM
Last Updated : 22 Aug 2025 05:37 AM

கம்போடியா சிறையில் உள்ள இளைஞரை மீட்க வழக்கு: வெளியுறவுத் துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை: கம்​போடியா சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள தமிழக இளைஞரை மீட்​கக் கோரிய வழக்​கில் பதிலளிக்​காத மத்​திய வெளி​யுறவுத் துறைக்கு சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். நாமக்​கல் மாவட்​டத்​தைச் சேர்ந்த கோபி என்ற இளைஞர் கம்​போடியா நாட்​டில் குற்ற வழக்கு ஒன்​றில் கைதாகி சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார்.

அவருக்கு தேவை​யான சட்ட உதவி​களை வழங்​கி, இந்​தி​யா​வுக்கு அழைத்​துவர நடவடிக்கை எடுக்க மத்​திய அரசுக்கு உத்​தர​விடக் கோரி கோபி​யின் தாயார் லதா, சென்னை உயர்நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கு நீதிபதி என்​. ஆனந்த் வெங்​கடேஷ் முன்​பாக நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, இதுதொடர்​பாக விளக்​கமளிக்க அவகாசம் அளிக்க வேண்​டுமென மத்​திய அரசு தரப்​பில் கோரப்​பட்​டது.

ஏற்​கெனவே 3 முறை அவகாசம் வழங்​கி​யும், விளக்​கமளிக்​காததற்கு மத்​திய வெளி​யுறவு அமைச்​சகத்​துக்கு கண்​டனம் தெரி​வித்த நீதிப​தி, ஒரு அமைச்​சரின் மகன் அங்கு சிக்​கி​யிருந்​தால் இப்​படி செயல்​படு​வீர்​களா? என கேள்வி எழுப்​பி​னார். மேலும், கம்​போடி​யா​வில் சிக்​கி​யுள்ள தனது மகனுக்கு என்ன ஆனது என தெரி​யாமல் பரிதவிக்​கும் தாயை நினைத்​துப் பார்க்க வேண்​டும்.

நாட்​டில் உள்ள ஒவ்​வொரு​வரும் முக்​கிய​மானவர்​களே. அது பிரதம​ராக இருந்​தா​லும் சரி அல்​லது சாதா​ரணக் குடிமக​னாக இருந்தாலும் சரி அனை​வரும் முக்​கிய​மானவர்​கள்​தான். எனவே இந்த விவ​காரத்தை தீவிர​மாகக் கருத்​தில்​கொண்டு ஆக.25-ம் தேதிக்​குள் மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சகம் பதிலளிக்க வேண்​டும். இல்​லை​யென்​றால் அத்​துறை​யின் செயலர் நேரில் ஆஜராகும்​படி உத்​தர​விட நேரிடும், என எச்​சரித்து வி​சா​ரணையை ஆக.25-க்​கு தள்​ளி​வைத்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x