Published : 21 Aug 2025 06:02 AM
Last Updated : 21 Aug 2025 06:02 AM

யார் வேண்டுமானாலும் மாநாடு நடத்தட்டும்... தமிழக மக்களின் ஆதரவு பாஜகவுக்கு தான்: அண்ணாமலை திட்டவட்டம்

சென்னை தி.நகரில் உள்ள இல.கணேசனின் வீட்டுக்கு சென்று அவரது படத்துக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை: நாகாலாந்து ஆளுந​ராக இருந்த மறைந்த இல.கணேசனின் தி.நகரில் உள்ள வீட்​டுக்கு பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை நேற்று சென்று, குடும்​பத்​தினரை சந்​தித்து ஆறு​தல் தெரி​வித்​தார். பின்​னர், இன்​று (21-ம் தேதி) நடை​பெறும் இல.கணேசனின் புகழஞ்​சலி நிகழ்​வுக்கு குடும்​பத்​தினருக்கு நேரில் அழைப்பு விடுத்​தார்.

அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அண்​ணா​மலை கூறிய​தாவது: இல.கணேசன் மறைவு என்​பது பெரும் இழப்​பு. நான் கட்சி நிகழ்ச்சி காரண​மாக வேறொரு ஊரில் இருந்​த​தால், என்​னால், இல.கணேசனின் இறுதி நிகழ்​வில் கலந்து கொள்​ள​முடிய​வில்​லை. சி.பி.​ரா​தாகிருஷ்ணன் குடியரசு துணை தலை​வர் தேர்​தலில் வெற்றி பெற்று அந்த இருக்​கைக்கு பெருமை சேர்ப்​பார்.

கட்சி பாகு​பாடின்றி திமுக மற்​றும் இண்​டியா கூட்​டணி கட்​சிகள் அவருக்கு ஆதரவு அளிப்​பார்​கள் என்ற நம்​பிக்கை இருக்​கிறது. தமிழகத்​தில் எல்​லோரும் மாநாடு நடத்த உரிமை இருக்​கிறது. தமிழக வெற்​றிக் கழக​மும் மாநாடு நடத்​தட்​டும். மக்களின் ஆதரவு பாஜகவுக்குதான்.

திமுக​வுக்கு மாற்று தேசிய ஜனநாயக கூட்​டணி தான். திமுக ஆட்​சி​யில் இருந்து இறங்​கிய பிறகு, தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சி​யில் அமரும் என மக்​கள் பேச தொடங்கிவிட்​டார்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார். பாஜக மாநில துணை தலை​வர்​கள் கரு.​நாக​ராஜன், டால்பின் தர், மாநில செய​லா​ளர்கள் கராத்தே தி​யாக​ராஜன், சுமதி வெங்​கடேசன் உடன்​ இருந்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x