Published : 21 Aug 2025 05:58 AM
Last Updated : 21 Aug 2025 05:58 AM

ராஜீவ் காந்தியின் 81-வது பிறந்தநாள் விழாவில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: செல்வப் பெருந்தகை வழங்கினார்

சென்னை: தமிழ்​நாடு காங்​கிரஸ் சார்​பில், ராஜீவ்​காந்​தி​யின் 81-வது பிறந்த நாள் விழாவை முன்​னிட்​டு, தூய்​மைப்பணி​யாளர்​கள் மற்​றும் ஏழைகளுக்கு நலதிட்ட உதவி​களை கட்​சி​யின் மாநிலத் தலை​வர் செல்​வப் பெருந்​தகை வழங்​கி​னார்.

தமிழ்​நாடு காங்​கிரஸ் சார்​பில், முன்​னாள் பிரதமர் ராஜீவ்​காந்​தி​யின் 81-வது பிறந்​த​நாள் விழா நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதில், கட்​சி​யின் மாநிலத் தலை​வர் செல்​வப் பெருந்​தகை கலந்​துக் கொண்டு ராஜீவ்​காந்தி நினை​விடத்​தில் மலர் வளை​யம் வைத்​து, மலர்​கள் தூவி மரி​யாதை செலுத்​தினர்.

தொடர்ந்து ஏழை எளியோ​ருக்கு அன்​ன​தானம் வழங்​கப்​பட்​டது. இந்​நிகழ்ச்​சி​யில், விஜய் வசந்த் எம்​பி, மாநில துணைத் தலை​வர் முரு​கானந்​தம் உள்​ளிட்​டோர் கலந்​துக் கொண்​டனர்.

தொடர்ந்​து, சத்​தி​யமூர்த்​தி பவனில் நடை​பெற்ற விழா​வில், ராஜீவ்​காந்தி உரு​வப் படத்​துக்கு மாலை அணி​வித்​து, மலர்​கள் தூவி மரி​யாதை செலுத்​தி, தொண்​டர்​களுக்கு இனிப்​பு​கள் வழங்​கி​னார். தூய்​மைப் பணி​யாளர்​கள் மற்​றும் ஏழை எளியோ​ருக்கு நலத்​திட்ட உதவி​கள், மாணவ, மாணவி​களுக்கு கல்வி உபகரணங்​கள் உள்​ளிட்​ட​வற்றை வழங்​கி​னார்.

பின்​னர், செல்​வப் பெருந்​தகை செய்​தி​யாளர்​களிடம் பேசிய போது, “இந்​தி​யாவை தலை நிமிர வைத்​தவர் ராஜுவ் காந்​தி. அவர் இல்லை என்​றால் கிராமங்​களில் ஜனநாயகம் இல்​லை. உலக நாடு​களிடையே நம் பெரு​மையை உயர்த்தி காட்​டிய​வர்.

ஆம்​புலன்ஸ் உயிர்​காக்​கும் சேவை. இதுவே தெரிய​வில்லை என்​றால், எப்​படி பழனி​சாமி முதல்​வ​ராக இருந்தார் என்றே தெரிய​வில்​லை. பாஜக எழுதி கொடுப்​பதை பழனிசாமி படித்து வரு​கிறார். பாஜக, ஆர்​எஸ்​எஸ்​-ன் தலை​யாட்​டும் பொம்​மை​யாக அவர் இருக்​கிறார்” என்​றார்.

இந்​நிகழ்ச்​சி​யில், கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள் கிருஷ்ண​சாமி, பீட்​டர் அல்​போன்​ஸ், மாநில பொருளாளர் ரூபி மனோகரன், அசன் மவுலானா எம்​எல்ஏ, இலக்​கிய அணி தலை​வர் புத்​தன்​ உள்​ளிட்​டோர்​ கலந்​துக்​ ​கொண்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x