Published : 21 Aug 2025 05:33 AM
Last Updated : 21 Aug 2025 05:33 AM

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்பு தொடர்பாக கருத்துகளை தெரிவிக்கலாம்: சென்னை ஆட்சியர் தகவல்

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு​களுக்கு கூட்டு மதிப்பு தொடர்​பாக 15 நாட்​களுக்​குள் பொது​மக்கள் தங்​களது கருத்​துகளைத் தெரிவிக்​கலாம் என மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார்.

சென்னை வரு​வாய் மாவட்​டத்​துக்கு உட்​பட்ட வடசென்​னை, மத்​திய சென்​னை, தென் சென்​னை, திரு​வள்​ளூர் மற்​றும் தாம்​பரம் பதிவு மாவட்ட சார் - பதிவகங்​களின் எல்​லைக்கு உட்​பட்ட அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு​களுக்கு கூட்டு மதிப்பு நிர்ணய வரை​வானது, நேற்று முன்​தினம் (ஆக. 19) நடை​பெற்ற சென்னை மாவட்ட சந்தை மதிப்பு வழி​காட்டி துணைக்​குழுகூட்​டத்​தில் பொது​மக்கள் பார்​வை​யிடும் வகை​யில் வைக்க வேண்​டும் எனஅறி​வுறுத்​தப்​பட்​டது.

அதன்​படி வட்​டாட்​சி​யர், சார்​-ப​தி​வாளர் உட்பட முக்​கிய அரசு அலு​வல​கங்​களில் வரைவு வழி​காட்டி வைக்​கப்​பட்​டுள்​ளது. இதன் மீது ஏதேனும் கருத்​துரைகள் இருப்​பின் அதனை 15 நாட்​களுக்​குள் செய​லா​ளர் மற்​றும் மாவட்ட பதி​வாளர் (நிர்​வாகம்), மதிப்​பீட்டு துணைக்​குழு, எண்​-26, ஒருங்​கிணைந்த பதிவுத்​துறை வளாகம், ராஜாஜி சாலை, சென்​னை-600 001 என்ற முகவரி​யில் நேரிலோ தபால் மூல​மாகவோ தெரிவிக்​கலாம். கூடு​தல் விவரங்​களுக்கு 044-25356212 என்ற தொலைப்​பேசி எண்​ணைத் தொடர்பு கொள்​ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x